Thursday, April 25, 2013

பிறமத அழைப்புப்பணி : 40 நாட்களில் 15 பேர் இஸ்லாத்தை தழுவினர்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஜித்தா மண்டலக் கிளையான தபூக் கிளை பிறமத அழைப்புப்பணியில் முத்திரை பதித்து வரும் செய்திகளை தொடர்ச்சியாக உணர்வு இதழில் வெளியிட்டு வருகின்றோம்.
அந்த வரிசையில் கடந்த 40 நாட்களில் மட்டும் உலகின் பல பகுதிகளிலிருந்து தபூக்கில் பணியாற்ற வந்த பிறமத சகோதர, சகோதரிகள் 15 பேர் தபூக் கிளை மூலமாக இஸ்லாத்தை தழுவியுள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்.
தபூக் கிளை மூலமாக பிலிப்பைன்ஸ் மொழி உள்ளிட்ட பல மொழிகளில் தாவா செய்வது பல மொழிகள் பேசக்கூடிய சகோதர, சகோதரிகள் தபூக் கிளை வாயிலாக இஸ்லாத்தை ஏற்பதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.
தபூக் கிளையில் இஸ்லாத்தை தழுவியவர்கள் குறித்த விபரம் பின்வருமாறு :
இஸ்லாத்தை ஏற்ற 7 பிலிப்பைன்ஸ் சகோதரர்கள் :
கடந்த 14/03/2013 வெள்ளியன்று தபூக் செனய்யா இண்டஸ்ட்ரியல் ஏரியாவில் பணிபுரியும் ஏழு பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள் சத்திய மார்க்கம் இஸ்லாத்தை தங்களது வாழ்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்கள்.
அவர்களின் பெயர்களின் விபரம் வருமாறு:-
  1. பிலிப்பைன்ஸ் – மனிலாவைச் சேர்ந்த - அமிர்ஜோன் மக்கபகல் – அப்துல்லாஹ்வாகவும்,
  2. பிலிப்பைன்ஸ் – மனிலாவைச்சேர்ந்த – கார்ல்வின்ஷன் – காலித் ஆகவும்,
  3. பிலிப்பைன்ஸ் – செபூவைச்சேர்ந்த – கோக்கொ மார்ட்டின் – உமர் ஆகவும்,
  4. பிலிப்பைன்ஸ் – தாவாவ்வைச்சேர்ந்த – ஜோன் அல்டிரின் – யஹ்யாவாகவும்,
  5. பிலிப்பைன்ஸ் – மிந்தநாவ்வைச்சேர்ந்த – மைக்கல் பிலிப் – முஹம்மது ஆகவும்,
  6. பிலிப்பைன்ஸ் – சாந்தாகுருஷ்வைச்சேர்ந்த – அர்லியானோ – ஜஃபர் ஆகவும்,
  7. பிலிப்பைன்ஸ் – கண்டோன்வைச் சேர்ந்த – பிரையன் ஜோன் – அய்யூப் ஆகவும்

மாறி தங்களை தூய இஸ்லாமிய மார்க்கத்தில் இணைத்துக் கொண்டனர்.
மேற்கண்ட ஏழு பிலிப்பைன்ஸ் சகோதரர்களும் கிறித்தவ மதத்தைச்சேர்ந்த, தக்காலோக் மொழிபேசும் சகோதரர்களாவர். இவர்கள் அனைவருக்கும் தபூக் கிளைத் தலைவர் அப்துல் அஜீஸ் அவர்களும், சகோ. அஹமது இஷ்புனுஷா (பிலிப்பைன் மொழி பேசக்கூடியவர்)அவர்களும் அவர்களுடைய(தக்காலோக்) மொழியிலும், ஆங்கில மொழியிலும் இஸ்லாத்தின் கொள்கை
விளக்கம், வணக்கமுறைகள் அனைத்தையும் விளக்கிக் கூறி ஏகத்துவ கலிமாவைச் சொல்லிக் கொடுத்தார்கள்.
அதுபோல கடந்த 19/04/2013 தபூக் கிங் ஃபஹத் ஹாஸ்பிடல் மெடிக்கலில் பணிபுரியும் பிலிப்பைன்ஸ் – மனிலாவைச் சேர்ந்த
சகோதரர் ஜோவெல் ரக்கீப்போ ராமூஸ் (JOEL RAQUIPO RAMOS) அவர்கள் சத்திய மார்க்கம் இஸ்லாத்தை தனது வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டார். அப்துர்ரஹ்மான் என்று அவர் தனது பெயரை மாற்றிக் கொண்டார். தக்காலோக் மொழி பேசும் அவருக்கு ஆங்கிலம், தக்காலோக் மொழிகளில் திருக்குர்ஆன் மற்றும் முக்கிய நூல்கள், ஆடியோ கேஸட்டுகளும்
வழங்கப்பட்டன.
இஸ்லாத்தை ஏற்ற கென்யா நாட்டு சகோதரர் :
கடந்த 25-03-2013 அன்று தபூக் கிங் அப்துல் அஜீஸ் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் கென்யா நாட்டின் நைரோபியைச்சேர்ந்த சகோதரர். மாரா கெனீத் நோரே (Maara Kenneth Njorge) அவர்களும், பிலிப்பைன்ஸ் நாட்டின் சாந்தாகுருஷை சேர்ந்த சகோதரர் அமர் கார்பியோ சலாலோ (Amar Carpio Sallao) அவர்களும் தூய இஸ்லாத்தை தழுவினார்கள்.
கடந்த 20-03-2013 புதன் சென்னையைச் சேர்ந்த சகோ. முத்து அவர்கள் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார். அவர் தனது பெயரை அப்துல்லாஹ் என்று மாற்றிக்கொண்டார்கள். அவருக்கும் பீஜே அவர்கள் மொழிபெயர்த்த தமிழ் குர்ஆன், மற்றும் 15 மார்க்க புத்தகங்கள், 25 டி.வி.டிக்கள் வழங்கப்பட்டன.
இஸ்லாத்தை ஏற்ற இலங்கை சகோதர, சகோதரிகள் :
தபூக் அல்-ஜஸீரா ஹோட்டலில் பணிபுரியும் இலங்கை அனுராதபுரத்தை சேர்ந்த, புத்த மத சகோதரர் மலிந்த, தூய இஸ்லாத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். அவருக்கு தபூக் கிளை நிர்வாகிகள் முன்னிலையில் இலங்கை சகோதரர் முஹம்மது அஷீர் அவர்கள் சிங்களத்தில் கலிமா சொல்லிக் கொடுத்தார். அவர் தனது பெயரை நூஹ் என்று மாற்றிக்கொண்டார். அவருக்கு சிங்கள குர்ஆன், மற்றும் புத்தகங்கள், ஆடியோ கேஸட்டுகள் வழங்கப்பட்டன.
கடந்த 14-03-2013 அன்று தபூக் பிரசவ மருத்துவமனையில் பணிபுரியும் பிலிப்பைன்ஸ் மணிலாவை சேர்ந்த சகோதரி எமிலியும், இலங்கை கன்தலாவைச் பகுதியை சேர்ந்த புத்தமதத்தை சேர்ந்த சகோதரி சந்திரிக்கா சமந்தி பிரேராவும், இலங்கை நெக்கம்போவை பகுதியை சேர்ந்த புத்தமதத்தை சேர்ந்த சகோதரி அனோமா தில்ஹனி சில்வவும், தூய இஸ்லாத்தை தழுவினார்கள். அவர்களுக்கு தபூக் கிளை தலைவர் அஜிஸும் அவரது துணைவியார் சுமையாஹ்வும், தூய இஸ்லாத்தை விளக்கி கலிமா சொல்லிக்கொடுத்தனர். அவர்களில் எமிலி,-அமல் என்றும், சந்திரிக்கா – சமீரா என்றும், அனோமா – ஈமான் என்றும் தங்களது பெயர்களை மாற்றிக்கொண்டனர்.
இவ்வாறாக தபூக் கிளையின் பிறமத அழைப்புப்பணி களை கட்டி வருகின்றது. எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே!

விரட்டிய இடத்தில் புரட்டிய தவ்ஹீத்!

வட சென்னை மாவட்டத்திலுள்ள நேதாஜி நகர் பகுதியானது தவ்ஹீத் வரலாற்றில் அதிகமான எதிர்ப்புகளை சந்தித்த பகுதிகளில் முக்கிய பகுதி. ஏனெனில் முரீது, தரீக்கா, தர்ஹா வழிபாடு போன்ற ஷிர்க்கான காரியங்களில் முதன்மையாக இருக்கும் பகுதி. தெருவுக்குத் தெரு தரிக்காக்களை வைத்து “நாயகம் வாப்பா” போன்ற ஷெய்குகளின் காலைக் கழுவிக் குடிப்பது, இருட்டு திக்ர் செய்வது போன்ற அனாச்சாரங்கள் அதிக அளவில் நடக்கும் பகுதி.
1990களில் மெல்லத் துவங்கிய தவ்ஹீத் பிரச்சாரம் 1995-களில் மிக வீரியம் அடைந்து 1998-ல் கலவரம் நடக்கும் அளவிற்குச் சென்றது. 1998 கலவரத்தில் பல தவ்ஹீத் சகோதர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பலர் சிறை சென்றனர். வழக்குகளை சந்தித்தனர். இப்படி பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஏகத்துவப் பிரச்சாரம் தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்யபட்டுவந்தது. தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்ததின் விளைவாக தவ்ஹீதை எதிர்த்த மக்களில் பலர் ஏகத்துவவாதிகளாகவும், சிலர் ஏகத்துவத்திற்கு ஆதரவாளர்களாகவும் அல்லாஹ்வின் அருளால் மாறியுள்ளார்கள்.
இளைய சமுதாயம் தொடர்ந்து இந்த தவ்ஹீத் கொள்கையின் பக்கம் வந்தது. இதன் விளைவாக நம்மை விரட்டி அடித்த சுன்னத் ஜமாத் பள்ளிக்கு மிக அருகில் (30 அடி தூரத்தில்) வசிக்கும் சகோதரர் நமது ஜமாஅத் சார்பாக பெண்கள் பயான் நடத்த கோரிக்கை வைத்தார். அதன்படி வாரா வாரம் ஞாயிற்றுக் கிழைமை மஹ்ரிப் தொழுகைக்குப் பிறகு பெண்கள் பயான் நடைபெற்று வருகின்றது.
முதலில் 60 பெண்கள் கலந்து கொண்டார்கள். அடுத்தடுத்த வாரங்களில் அல்லாஹ்வின் அருளால் பயான் நடக்கும் மாடியும் நிரம்பி, பக்கத்து வீட்டு மாடியும் நிரம்பக்கூடிய அளவிற்கு பெண்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றனர். அல்ஹம்துலில்லாஹ்….
இதை பொருத்துக்கொள்ளாத சுன்னத் (?) ஜமாத்தினர் முதலில் ஒரு குழுவினர் சென்னை கமிஷனர் அலுவலகத்திற்குச் சென்று புகார் செய்தனர். அது பலனளிக்கவில்லை என்ற உடன் வாரந்தோறும் நமக்குப் போட்டியாக அதே நேரத்தில் சுன்னத் ஜமாஅத் உலமாக்களை (?) வர வழைத்து பயான் நடத்துகின்றார்கள்.
பெரிய பெரிய ஒலி பெருக்கிகளை நமது பயான் நடக்கும் இடம் அருகில் வைத்து நம்மை பயான் செய்யவிடாமல் இடையூறு ஏற்படுத்துகின்றார்கள். இந்த வரிசையில் 17/2/13 அன்று வழிகெட்ட பரலேவிகளின் தலைவராக இருக்கக் கூடிய சேக் அப்துல்லாஹ் ஜமாலியை அழைத்து வந்து கேள்வி-பதில் நிகழ்ச்சி நடத்தினார்கள். அந்த நிகழ்ச்சியில் ஏகத்துவ சிந்தனை கொண்ட சகோதர, சகோதரிகளில் சிலர் அங்கு சென்று ஜமாலியை கேள்வி கேட்டு பயந்து ஓட வைத்துவிட்டனர். அல்ஹம்துலில்லாஹ்…
கேள்வி கேட்ட ஒரு பெண்மனி “வரதட்சணை கல்யாணத்திற்கு போகலாமா?” எனக் கேட்டார். அதற்கு ஜமாலி “வரதட்சணை தவறுதான்; ஆனால் கல்யாணத்தில் கலந்து கொள்ளலாம். ஏனென்றால் நாம் கலந்து கொள்ளவில்லை என்றால் யார் திருமணத்தை நடத்திவைப்பது?. யாரும் வரவில்லை என்றால் அவர்கள் வழிதவறிப் போய்விடுவார்கள் என அறிவார்ந்த(?) பதிலைக் கூறினார். இந்த பதில் அங்குவந்த பெண்களுக்கு பரலேவி கொள்கையின் மீது வெறுப்பை அதிகப்படுத்தியது.
மேலும் சிறுவர்களும் இளைஞர்களும் கேள்வி கேட்டார்கள். ஒரு சகோதரர் “தொழுகையில் தொப்பி அணிவது சுன்னத் எனக் கூறி தொப்பி இல்லை என்றால் பிளாஸ்ட்டிக் தொப்பி வைத்து தொழ வரும் அனைவரையும் தொப்பி போட சொல்லும் நீங்கள், தாடி வைப்பதும் சுன்னத்தாக இருப்பதால், பிளாஸ்ட்டிக் தொப்பிபோல பிலாஸ்ட்டிக் தாடிவைக்கவும் கட்டாயப் படுத்தலாமே” எனக் கேட்ட போது சிரிப்பொலி ஜமாலியின் காதை கிழித்தது. இதற்கும் பதில் சொல்ல வழியில்லாமல் சில மழுப்பலான பதில்களை வாந்தி எடுத்தார் ஜமாலி.
கேள்விகளின் உக்கிரத்தை உணர்ந்த ஜமாலி உடனடியாக ” நிகழ்ச்சி முடிந்துவிட்டது” என ஓட்டம் எடுத்தார். மேலும் தன்னை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்த பள்ளிவாசல் நிர்வாகிகளையும் வறுத்தெடுத்தார். ஏன் இப்படிப்பட்ட நிகழ்சிக்கு என்னை அழைத்தீர்கள்; பயானுக்கு வந்தவர்களில் பாதிப்பேர் தலையில் தொப்பி இல்லை. நஜாத் காரர்கள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சிக்கு என்னை ஏன் அழைத்தீர்கள்? என கொட்டி தீர்த்துவிட்டு சென்றார்.
இதன்பிறகு இவர்கள் தொடர்ந்து நடத்தும் பயான்களில் கேள்வி-பதில் பகுதியையே தூக்கிவிட்டனர். இப்படி இவர்கள் அழைத்துவரும் உலமாக்கள் (?) ஷிர்க் பித் அத்தையே தூக்கிப்பிடிப்பவர்களாக இருப்பதினால் இவர்களை இப்படியே விடக்கூடாது என அந்த சுன்னத் ஜமாத் பள்ளி அருகில் நமது ஜமாஅத் சார்பாக நூலகம் அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றது.
இந்த நூலகத்தின் மூலம் இஸ்லாமிய பயான் டிவிடிக்களை இலவசமாகக் கொடுத்து வருகின்றனர்.
மேலும் செல்ஃபோன் மெமரி கார்டுகளில் இலவசமாக இஸ்லாமிய பயான்களை பதிவேற்றம் செய்து தருகின்றனர். மேலும் இணையதளம் மூலமாக கிளையின் செயல்பாடுகளைக் கொண்டு செல்லும் முகமாக தனியொரு இணையதளத்தையும் துவக்கி சிறப்பாக செயல்படுகின்றனர்.
இந்த சுன்னத் ஜாமஅத் பள்ளிவாசலில் “சுன்னத் ஜமாத்தினரைத் தவிர யாரும் தொழ வரக்கூடாது” என பல வருடங்களாக அறிவிப்பு வைத்துள்ளனர். தற்போது இப்படிப்பட்ட அறிவிப்பிற்கு அந்தப் பகுதி மக்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஐந்து வேளை தொழுது சமுதாயத்திற்கு தேவையான பல்வேறு நற்பணிகள் புரியும் தவ்ஹீத் மக்கள் பள்ளிக்கு வரக்கூடாது என்றால், ஒருவேளை தொழுகை இல்லாதவனெல்லாம் எப்படி பள்ளிவாசல் நிர்வாகிகளாக இருக்க முடியும் என, பொது மக்கள் மிகக் கடுமையாக எதிப்புக் குரல் கொடுத்து வருகின்றனர். பள்ளிவாசலுக்கு அடுத்த கட்டடத்தில் வசிக்கும் ஒரு சகோதரர் தனது வீட்டு சுவரில் “பள்ளிவாசலை நிர்வகிக்க தகுதியானவர்கள் யார்?” என்ற தலைப்பிலும், “அநியாயக்காரன் யார்?” என்ற தலைப்பிலும் குர் ஆன் வசனத்தை எழுதியுள்ளார்.
இப்படியாக அல்லாஹ் தனது கிருபையால் நேதாஜி நகர் பகுதியில் தவ்ஹீதை விரட்டி அடித்த அந்த சுன்னத் ஜமாஅத் பள்ளி நிர்வாகிகளுக்கு தொடர்ந்து இழிவை ஏற்படுத்தி வருகின்றான். மக்களும் தவ்ஹீத்வாதிகளை எதிர்க்க “இந்த தொழுகை இல்லாத ஒழுக்கம் இல்லாத போலி சுன்னத் ஜமாத் தலைவர்களுக்கு அருகதை இல்லை” என எதிர்க்குரல் கொடுத்து வருகின்றனர். இதனால் தவ்ஹீத் வாதிகளை மிரட்டிப் பணியவைக்கும் முயற்சியில் இந்த போலி சுன்னத் ஜமாத் தலைவர்கள் ஈடுபட்டுவருகின்றனர். ஆனால் அல்லாஹ்வின் கிருபையால் இவர்களின் மிரட்டலுக்கு சிறிதும் அஞ்சாமல் நமது சகோதர்கள் தொடர்ந்து தங்களது பிராச்சாரப் பணியை செய்துவருகின்றனர்.

Saturday, April 20, 2013

வாராந்திர நிகழ்ச்சி - தலைமை - 19-04-2013


அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல தலைமையில் வாராந்திர நிகழ்ச்சி மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நேற்று (19-04-2013) நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சகோதரர். முனீப் அவர்கள், "இஸ்லாத்தின் பார்வையில் நட்பு" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

வாராந்திர நிகழ்ச்சி - ஹித் - 19-04-2013


அல்லாஹ்வின் கிருபையால், ஹித் கிளையில் பயான் நிகழ்ச்சி நேற்று (19-04-2013) மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சகோ. முஹம்மது ஃபஸிஹ் அவர்கள் "குர்ஆன் ஓதுவதுல் ஆர்வம் காட்டுவோம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இதில் நமது ஹித் பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

Saturday, April 13, 2013

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் - பஹ்ரைன் மண்டலம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், பஹ்ரைன் மண்டல தலைமையில் இந்த வார நிகழ்ச்சியை "இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்" என்ற முஸ்லீம்களுக்கான சிறப்பு கேள்வி பதில் நிகழ்ச்சி நேற்று (12-04-2013) ஏற்பாடு செய்யப்பட்டது.  

இந்த நிகழ்ச்சியில் சகோ. முஹம்மது ஃபஸிஹ் அவர்கள் நமது சகோதர சகோதரிகளின் கேள்விகளுக்கு அறிவுப்பூர்வமாகவும், ஆதரப்பூர்வமாகவும், மக்கள் புரிந்துக் கொள்ளக்கூடிய வகையில் எளிய நடையில் விளக்கினார்கள். 

இந்த நிகழ்ச்சியில் சகோதரர்கள் தங்கள் குடும்பத்துடன் பெரும் திரளாக கலந்து கொண்டார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

வாராந்திர நிகழ்ச்சி - ஹித் - 12-04-2013

அல்லாஹ்வின் கிருபையால், ஹித் கிளையில் பயான் நிகழ்ச்சி நேற்று (12-04-2013) மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சியில் சகோ. கீழக்கரை சாபிர் அவர்கள் "பாவ மன்னிப்பும் அதன் சிறப்புகளும்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இதில் நமது ஹித் பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

வாராந்திர நிகழ்ச்சி - ரிஃபா - 12-04-2013


அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல ரிஃபா கிளையில் வாராந்திர நிகழ்ச்சி இஷா தொழுகைக்குப் பிறகு நேற்று (12-04-2013) நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் சகோ.திருச்சி யூசுஃப் ஷரீஃப் அவர்கள், "இறைவனிடம் கையேந்துங்கள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். 

இந்த நிகழ்ச்சியில் ரிஃபா கிளையைச் சேர்ந்த நமது தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

Saturday, April 6, 2013

வாராந்திர நிகழ்ச்சி - தலைமை - 05-04-2013


அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல தலைமையில் வாராந்திர நிகழ்ச்சி மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நேற்று (05-04-2013) நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சகோதரர். முனீப் அவர்கள், "இறை நம்பிக்கையா? தன்னிம்பிக்கையா?" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் - ஹித் கிளை

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தின் ஹித் கிளையில் இந்த வார நிகழ்ச்சியை "இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்" என்ற முஸ்லீம்களுக்கான சிறப்பு கேள்வி பதில் நிகழ்ச்சி நேற்று (05-04-2013) ஏற்பாடு செய்யப்பட்டது.  

இந்த நிகழ்ச்சியில் சகோ. முஹம்மது ஃபஸிஹ் அவர்கள் நமது சகோதர சகோதரிகளின் கேள்விகளுக்கு அறிவுப்பூர்வமாகவும், ஆதரப்பூர்வமாகவும், மக்கள் புரிந்துக் கொள்ளக்கூடிய வகையில் எளிய நடையில் விளக்கினார்கள். 

இந்த நிகழ்ச்சியில் சகோதரர்கள் தங்கள் குடும்பத்துடன் பெரும் திரளாக கலந்து கொண்டார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!
 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்