எல்லாம் வல்ல அல்லாஹ் ரமளான் மாதத்தில்
திருக்குர்ஆனை இறக்கியருளினான். இதைப் பற்றி அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்.
இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான்
அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர்வழியைத் தெளிவாகக்
கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை
அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும். (அல்குர்ஆன்2:185)
ரமளான் மாதம் முழுவதும் நோன்பு
கடமையாக்கப்பட்டது ஏன்? என்ற ஒரு கேள்வியை எழுப்பினால் அம்மாதத்தில் புனிதமிகு
குர்ஆன் அருளப்பட்டதால் தான் என்ற அழகிய பதிலை மேற்கண்ட இறைவசனம் மிகத் தெளிவாக
எடுத்துரைக்கின்றது.
களங்கப்படும் இந்த கண்ணிய மாதம்
அல்குர்ஆன் அருளப்பட்ட இந்த அற்புத
மாதத்தை நோன்பு நோற்று கவுரப்படுத்துங்கள் என்று கூறுகின்றான் அறிவுமறை வழங்கிய
அல்லாஹ்! ஆனால் இந்த மாதத்தை கவுரவப்படுத்த வேண்டிய முஸ்லிம் சமுதாயம்
களங்கப்படுத்திக் கொண்டிருக்கின்றது.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக
வசிக்கும் ஊர்களில் கூட பட்டப்பகலில் ஹோட்டல்களில் முஸ்லிம்கள் பகிரங்கமாக டீ
குடித்தல், உணவருந்துதல் போன்ற செயல்கள் சர்வ சாதாரணமாக நடைபெறுகின்றன. வீதிகளில்
சென்றால் வீடுகள் தோறும் சினிமா பாடல்கள், டி.வி., வீடியோ காட்சிகள் என்றும் போல்
இன்றும் நிரம்பி வழியும் தியேட்டர்கள், மேக மூட்டத்தைப் போன்று பீடி சிகரெட்
புகைப் படலங்கள்!
ஆயிரம் ரமளான் வரட்டும், நான் வீட்டை
விட்டு அசைய மாட்டேன் என்று ஐங்காலத் தொழுகைக்காக பள்ளிக்கு வராமல் பாவத்தைத் தொடர்கதையாக்கும்
ஆண் ஜென்மங்கள்! வீட்டிலிருந்து கொண்டே இந்த ரமளான் மாதத்திலும் தொழுகையைத் தொடராத
நமது தாய்க்குலங்கள்!
நாம் பட்டினி கிடந்து நோன்பு நோற்றால்
போதும், படைத்தவனைத் தொழ வேண்டியதில்லை என்று அல்லாஹ்வின் ஒரு கட்டளையை ஏற்று மறு
கட்டளையைப் புறம் தள்ளும் கூட்டம் ஒரு புறம்! பொருளாதாரம் வழங்கப்பட்டும் புனித
மிகு ரமளானில் கூட பூட்டிய பெட்டிகளிலிருந்து ஏழைகளுக்கு வழங்கத் துணியாத
கஞ்சர்கள் மறு புறம்! ரமளான் வந்தும் சாராயம், பழரசம், டாஸ்மாக் சரக்குகளை
அடிக்கும் சாட்ஜாத்கள் இன்னொருபுறம்!
இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்
ஆயிரம் அவலங்களை! இந்த அவலங்கள் எதைக் காட்டுகின்றன? அல்குர்ஆன் எனும் வேதம்
இறங்கிய இந்தப் புனித மாதத்திற்கும் மற்ற மாதத்திற்கும் முஸ்லிம்களிடம் எந்தவொரு
வித்தியாசமும் இல்லை.
எப்படி முஸ்லிம்கள் அல்லாத மக்கள்
வாழும் பகுதியில் ரமளானுக்கு எந்த மதிப்பும் இருக்காதோ அதுபோலவே முஸ்லிம்கள்
மிகைத்து வாழும் பகுதிகளும் காட்சியளிக்கின்றன. வேதம் இறங்கிய இந்த ரமளான்
மாதத்திற்கு நாம் அளிக்கக்கூடிய கண்ணியத்தைப் பார்த்து மாற்று மதத்தினரும்
நோன்பிற்கு மதிப்பளிக்கும் வகையில் நம்முடைய நடவடிக்கைகள் அமைய வேண்டும்.
இறைத்தூதரின் எச்சரிக்கை
நபி (ஸல்) அவர்கள் மிம்பரில் ஏறி, ஆமீன்,
ஆமீன், ஆமீன்'' என்று கூறினார்கள். அப்போது, அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் மிம்பரில்
ஏறும் போது, ஆமீன், ஆமீன், ஆமீன் என்று கூறினீர்களே!'' என்று கேட்கப்பட்டது.
அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறியதாவது:
ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னிடம் வந்து, எவர் ரமலான் மாதத்தை அடைந்து அவருடைய
பாவங்கள் மன்னிக்கப்படாமல் நரகம் புகுவாரோ அவரை அல்லாஹ் (தன் அருளி-ருந்து)
தூரமாக்கட்டும்'' என்று கூறி, ஆமீன் என்று சொல்லுங்கள்'' என்றார்கள். நான் ஆமீன்
என்றேன். எவருக்குப் பெற்றோர் இருவருமோ அல்லது ஒருவரோ இருந்து அவர்களுக்குப்
பணிவிடை செய்யாமல் இறந்து நரகம் செல்வாரோ அவரை அல்லாஹ் (தன் அருளி-ருந்து)
தூரமாக்கட்டும்'' என்று கூறி, ஆமீன் என்று சொல்லுங்கள்'' என்றார்கள். நான் ஆமீன்
என்றேன். எவரிடம் உங்களைப் பற்றி கூறப்பட்டு, உங்கள் மீது ஸலவாத் கூறவில்லையோ அவரை
அல்லாஹ் (தன் அருளி-ருந்து) தூரமாக்கட்டும்'' என்று கூறி, ஆமீன் என்று
சொல்லுங்கள்'' என்றார்கள். நான் ஆமீன் என்றேன். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர-),
நூற்கள் : இப்னு ஹிப்பான், மவாரிதுல்லம்ஆன், முஸ்னத் அபீயஃலா, முஸ்னத் பஸ்ஸார்,
தப்ரானீ கபீர்
இந்த ஹதீஸ் தரும் எச்சரிக்கையைக்
கருத்தில் கொண்டு நம்மை நாமே இந்த ரமளான் மாதத்தில் திருத்திக் கொள்ள வேண்டும்.
இல்லையேல் அல்லாஹ்வின் சாபத்தை எதிர் கொள்ள வேண்டும்.
இனி ரமளான் மாதத்தில் நபி (ஸல்)
அவர்கள் வழியில் நோன்பு நோற்பது பற்றியும் நடைமுறையில் உள்ள பித்அத்துக்களையும்
பார்ப்போம்.
நிய்யத் ஒரு விளக்கம்
இன்று எல்லா வணக்கங்களிலும் இனம் காண
முடியாத அளவுக்கு பித்அத்துக்கள் நுழைந்து விட்டதைப் போன்று இந்த நோன்பு எனும்
வணக்கத்திலும் நுழைந்து விட்டன. இதற்கு எடுத்துக்காட்டு தான் நிய்யத். ரமளான்
மாதம் வந்து விட்டால் பள்ளிவாசல் தோறும் வழங்கப்படும் நோன்பு நேர அட்டைகளிலும்,
பள்ளிவாசல் போர்டுகளிலும் நோன்பு வைக்கும் நிய்யத் என்று தலைப்பிட்டு ஒரு வாசகம்
எழுதப்பட்டிருக்கும்.
நவைத்து ஸவ்மகதின் அன்அதாயி ஃபர்ழி
ரமளான ஹாதிஸிஸ்ஸனதி லில்லாஹித் தஆலா என்று வாயால் சொல்லி வைக்கப்படும் இந்த
நிய்யத்தின் பொருளைப் பார்த்தால் கேலிக்கூத்தாக அமைந்திருக்கும்.
இந்த வருடத்தின் ரமளான் மாதத்தின்
ஃபர்ளான நோன்பை அதாவாக நாளை பிடிக்க நிய்யத்து செய்கிறேன் அல்லாஹ்வுக்காக''
இதுதான் மேற்படி நிய்யத்தின் பொருள்.
இந்த வருடத்து ரமளான் மாதத்தில் தான்
நாம் பிறை பார்த்து முடிவு செய்கின்றோம். ரமளான் மாதத்தில் ஃபர்ளான நோன்பைத் தான்
பிடிக்க முடியும். ரமளான் மாதத்தில் நஃபிலான நோன்புகளையா நோற்க முடியும்? அதாவாக''
என்று கூறுகின்றார்கள். ஒரு கடமையை அதற்குரிய நேரத்தில் செய்வதற்கு அதா என்று
பெயர். காலம் தவறி செய்வதற்கு களா என்று பெயர். ரமளான் மாதத்தில் நோற்கப்படும்
நோன்பு அதாவாகத் தானே ஆகும்? இதை வாயால் சொல்லவும் வேண்டுமா?
நாளை பிடிக்க நிய்யத்து செய்கிறேன்
அல்லாஹ்வுக்காக'' என்கின்றனர். பிறைக் கணக்குப்படி எப்போது பிறையைப்
பார்க்கின்றோமோ அப்போதே அந்த நாள் ஆரம்பமாகி விடுகின்றது. இப்படியிருக்க நாளை
பிடிக்க என்று கூறுவது எப்படிப் பொருத்தமாகும்?
நிய்யத் என்றால் எண்ணுதல்,
தீர்மானித்தல் என்று பொருள். இது உள்ளம் சம்பந்தப்பட்ட விஷயம். உடல்
சம்பந்தப்பட்டது அல்ல. இத்தகைய நிய்யத்தை செய்கிறேன்' என்று கூறுவதில் எந்த
அர்த்தமும் இல்லை.
உளூ, தொழுகை, நோன்பு போன்ற
வணக்கங்களில் நிய்யத் என்ற பெயரில் வாயால் கூறப்படுவது மார்க்கத்தில் புதிதாக
நுழைக்கப்பட்ட பித்அத் ஆகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: நம்
கட்டளையில்லாத காரியத்தை யார் செய்கிறாரோ, அது (அல்லாஹ்வால்) மறுக்கப்படும்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம் 3243
இந்த ஹதீஸைக் கருத்தில் கொண்டு நபி
(ஸல்) அவர்கள் கற்றுத் தராத, நிய்யத் என்ற பெயரில் மேற்கண்ட வாசகங்களைக் கூறுவது
தவிர்க்கப்பட வேண்டும். அதே சமயம் சுப்ஹ் நேரத்திற்கு முன்பே நோன்பு நோற்பதாக
தீர்மானிப்பது அவசியம்.
ஸஹர் நேரம்
நிய்யத் என்ற பெயரில் சில வாசகங்களைக்
கூறுவதோடு நிற்காமல், நிய்யத் செய்து விட்டால் எதையும் சாப்பிடக் கூடாது என்றும்
கூறுகின்றனர். நிய்யத் செய்தல் என்பதே இல்லை எனும் போது நிய்யத் செய்து விட்டால்
சாப்பிடக் கூடாது என்று தடை போடுவது எந்த விதத்திலும் சரியாகாது.
வைகறை எனும் வெள்ளைக் கயிறு, (இரவு
எனும்) கருப்புக் கயிறிலிருந்து தெளிவாகும் வரை உண்ணுங்கள்! பருகுங்கள்!
(அல்குர்ஆன்2:187)
சுப்ஹ் நேரம் வரும் வரை சாப்பிடலாம்
என்பதை இந்த வசனம் கூறுகின்றது. இதற்கு விளக்கமாக வரும் ஹதீஸ்களும் சுப்ஹ் நேரம்
வரை ஸஹர் உணவு உண்ணலாம் என்பதை வலியுறுத்துகின்றன.
பிலால் (ரலி) அவர்கள் (ஃபஜ்ருக்கு
முன்) இரவிலேயே பாங்கு சொல்வார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், இப்னு உம்மி
மக்தூம் (ரலி) பாங்கு சொல்லும் வரை உண்ணுங்கள். பருகுங்கள். ஏனெனில் அவர் தாம்
ஃபஜ்ரு நேரம் வந்ததும் பாங்கு சொல்கின்றார்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்:
ஆயிஷா (ரலி), இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி 1918, 1919
திருமறைக் குர்ஆனும், நபி (ஸல்)
அவர்களின் பொன்மொழிகளும் இவ்வளவு தெளிவாக இருந்தும், ஃபஜ்ரு நேரத்திலிருந்து அரை
மணி நேரத்திற்கு முன்பே ஸஹர் நேரம் முடிந்து விடுவதாக பரவலான நம்பிக்கை மக்களிடம்
உள்ளது. நோன்பு கால அட்டவணைகளை அச்சிட்டு மக்களிடம் விநியோகிப்பவர்களும் ஸஹர்
முடிவு நேரம் என்று காலை 4 மணியிலிருந்து 4.30க்குள் குறிப்பிடுகின்றார்கள்.
இதனால் இந்த நேரத்திற்குப் பிறகு
உறக்கத்திலிருந்து எழுபவர்கள் சுப்ஹ் நேரத்திற்கு அரை மணி நேரம் இருந்தால் கூட
அன்றைய நோன்பை நோற்காமல் வீணாக்குகின்றனர். இது பெரும் குற்றமாகும். குர்ஆன்,
ஹதீஸைப் பற்றிய தெளிவு இல்லாததால் ரமளான் மாதத்தின் கடமையான நோன்பை இழந்து
அல்லாஹ்விடம் குற்றவாளி ஆகும் நிலை ஏற்படுகின்றது.
ஸஹர் முடிவு நேரம் என்று கூறி அரை மணி
நேரத்திற்கு முன்பே ஸஹரை முடிப்பவர்கள் ஒரு புறம் என்றால், இரவு இரண்டு மணிக்கே
எழுந்து ஸஹர் உணவை முடித்து விட்டு உறங்கி விடுவர்களும் உண்டு. இதுவும் நபிவழிக்கு
மாற்றமான செயலாகும்.
ஸஹர் முடிவு நேரம் என்று கூறி அரை மணி
நேரத்திற்கு முன்பே ஸஹரை முடிப்பவர்கள் ஒரு புறம் என்றால், இரவு இரண்டு மணிக்கே
எழுந்து ஸஹர் உணவை முடித்து விட்டு உறங்கி விடுவர்களும் உண்டு. இதுவும் நபிவழிக்கு
மாற்றமான செயலாகும். அறிவிப்பவர்: அபூதர் (ரலி), நூல்: அஹ்மத்
மேற்கண்ட ஹதீஸ் ஸஹரைத் தாமதப்படுத்த
வேண்டும் என்று தெளிவாகக் குறிப்பிட்டிருந்தும் மூன்று மணிக்குள்ளாக ஸஹரை முடித்து
விடும் வழக்கம் பெரும்பாலான மக்களிடம் உள்ளது. இது நபிவழிக்கு மாற்றமான செயல்
என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
இரண்டு பாங்குகள்
பிலால் (ரலி) அவர்களை ஸஹர் நேரத்தை
அறிவிப்பதற்காகவும், அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் (ரலி) அவர்களை ஸஹர் முடிவு
நேரத்தை, அதாவது சுப்ஹ் நேரத்தை அறிவிப்பதற்காகவும் பாங்கு சொல்ல நபி (ஸல்)
அவர்கள் நியமித்திருந்தார்கள் என்ற செய்தி பல்வேறு ஹதீஸ் கிரந்தங்களில் காணப்படுகின்றது.
நீங்கள் ஸஹர் உணவு உண்ணுவதிலிருந்து
பிலாலின் பாங்கு உங்களைத் தடை செய்து விட வேண்டாம். இரவில் தூங்கிக்
கொண்டிருப்பவர்களை எழுப்புவதற்காகவும், தொழுது கொண்டிருப்பவர்கள் திரும்பி
வருவதற்காகவும் தான் பிலால் பாங்கு சொல்கின்றாரே தவிர சுப்ஹ் நேரம் வந்து விட்டது
என்பதை அறிவிப்பதற்காக அன்று'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்:
இப்னு மஸ்ஊத் (ரலி), நூல்: புகாரி 621
மற்றொரு அறிவிப்பில், இரண்டு
பாங்குகளுக்கும் இடையில் எவ்வளவு இடைவெளி இருக்கும் என்பதை விளக்கும் போது, அவர்
பாங்கு சொல்லி விட்டு இறங்குவார், இவர் பாங்கு சொல்வதற்காக ஏறுவார்'' என்று இப்னு
உமர் (ரலி), ஆயிஷா (ரலி) ஆகியோர் விளக்கமளித்துள்ளார்கள்.
இந்த ஹதீஸிலிருந்து ஸஹரின் கடைசிப்
பகுதியில் ஸஹர் பாங்கும், ஸஹர் முடிவை அறிவிப்பதற்கு சுப்ஹ் பாங்கு
சொல்லப்பட்டிருப்பதை அறியலாம்.
இன்று ஜும்ஆவில் நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் காட்டித் தராத வகையில் இரண்டு பாங்குகள் சொல்லப்பட்டு வருகின்றன. ஆனால்
ரமளான் மாதத்தில் ஸஹர் நேரத்தில் சொல்லப்பட்ட இரண்டு பாங்குகளை இன்று நம்மில்
யாரும் நடைமுறைப் படுத்துவதில்லை. இந்த நபிவழியை நமது ஜமாஅத்தினர் அனைவரும்
நடைமுறைப் படுத்த முன்வர வேண்டும்.
நோன்பு துறத்தல்
சூரியன் மறைந்து இந்தத்
திசையிலிருந்து இரவு முன்னோக்கி வந்து, அந்தத் திசையிலிருந்து பகல் பின்னோக்கிப்
போனால் நோன்பாளி நோன்பை நிறைவு செய்ய வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உமர் (ரலி), நூல்: புகாரி 1954
நோன்பை நிறைவு செய்வதை விரைவு
படுத்தும் வரை மக்கள் நன்மையில் ஈடுபட்டவர்களாயிருப்பார்கள் என்று அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃது (ரலி), நூல்:
புகாரி 1957
சூரியன் மறைந்தவுடன் நோன்பை நிறைவு
செய்ய வேண்டும் என்பதைக் கூறும் ஹதீஸ்கள் ஏராளமாக இடம் பெற்றுள்ளன. ஆனால் இன்று
நடைமுறையில் பேணுதல் என்ற பெயரில் சூரிய மறைவு நேரத்திலிருந்து 5 அல்லது பத்து
நிமிடங்கள் வரை தாமதமாக நோன்பு துறக்கின்றனர். தற்போது வெளியிடப்படும்
ஆயிரக்கணக்கான நோன்பு அட்டைகள், பள்ளிவாசல்களில் குறிக்கப்படும் நோன்பு துறக்கும்
நேரம் அனைத்தும் நபிவழிக்கு மாற்றமானவையே என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நோன்பை முறிக்கும் காரியங்கள்
உண்ணுதல், பருகுதல், உடலுறவு
கொள்ளுதல் ஆகிய காரியங்கள் தான் நோன்பின் நேரமான ஃபஜ்ரிலிருந்து சூரியன் மறையும்
வரை மார்க்கத்தில் தடுக்கப்பட்டவை ஆகும்.
வேண்டுமென்றே இக்காரியங்களை யாரேனும்
செய்தால், ஒரு அடிமையை உரிமை விடுதல் அல்லது இரண்டு மாதங்கள் தொடர்ந்து நோன்பு
நோற்றல் அல்லது 60 ஏழைகளுக்கு உணவழித்தல் இவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்ய
வேண்டும். (பார்க்க புகாரி 1936)
இவை தவிர பல்வேறு காரியங்கள் நோன்பை
முறிக்கக் கூடியவை என்ற பெயரில் மக்களிடம் நடைமுறையில் உள்ளன.
1. குழந்தைகளை முத்தமிடுதல்,
2.
இரத்தக் காயங்கள் ஏற்படுதல்,
3. எச்சிலை (சளியை) விழுங்குதல்,
4. முடி வெட்டுதல்,
5. வாசனை சோப்பு போடுதல்,
6. நறுமணம் பூசுதல்,
7. வாந்தி எடுத்தல்,
8. நோன்பு
நேரத்தில் ஸ்கலிதம் ஏற்படுதல்,
9. உணவை நாவால் ருசி பார்த்து உமிழ்தல்,
10. பற்பசை
அல்லது பல்பொடியைக் கொண்டு பல் துலக்குதல்,
11. மருத்துவத்திற்காக ரத்தம்
வழங்குதல்,
12. ஆற்றில் முங்கிக் குளித்தல்,
13. காது, மூக்கு வழியாக தண்ணீர்
உள்ளே செல்லுதல்,
14. நோன்பு துறந்த பின் ஓதும் துஆவைக் கூறுதல்,
15. நோய்
நிவாரணத்திற்காக ஊசி போட்டுக் கொள்ளுதல்,
16. கண், காது போன்றவற்றுக்கு மருந்து
போடுதல் போன்ற செயல்களால் நோன்பு முறியாது.
தவறான நம்பிக்கைள்
யாராவது இறந்து விட்டால் இறந்தவரின்
குடும்பத்தவர்கள் வலுக்கட்டாயமாக நோன்பை முறித்து விடுகின்றனர். இதற்கு
மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை. இவ்வாறு வேண்டுமென்றே நோன்பை முறித்தால் மேலே
நாம் கூறியுள்ள பரிகாரங்களைச் செய்ய வேண்டும். இல்லையேல் அவர் மறுமையில்
அல்லாஹ்வின் தண்டனையை ஏற்றாக வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் பேரீச்சம்பழம்
அல்லது தண்ணீர் கொண்டு நோன்பு துறப்பதை வலியுறுத்தியுள்ளார்கள். ஆனால் இதற்கு
மாற்றமாக உப்பைக் கொண்டு நோன்பு துறக்கும் வழக்கம் உள்ளது. இதற்கு மார்க்கத்தில்
எந்த ஆதாரமும் இல்லை.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
காட்டித் தந்த வழியில் நோன்பு நோற்று, பித்அத்தான காரியங்களையும் மூட
நம்பிக்கைகளையும் விட்டு விலகி அல்லாஹ்வின் நல்லருளைப் பெறுவோமாக!
(நோன்பு
பற்றிய முழுமையான விளக்கங்களுக்கு மவ்லவி பி. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் எழுதிய நோன்பு
என்ற நூலைப் பார்வையிடுக!)