Friday, July 8, 2011

வாரந்திர பயான் - 08-07-2011














அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், பஹ்ரைன் மண்டல தலைமையில் நடைபெறும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இன்று மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது.
இன்றைய நிகழ்ச்சியில் நமது மண்டல தாவா பொறுப்பாளர் சகோ.ஹாஜா அவர்கள், ரியா” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இதில் அல்லாஹ் தனது திருமறையில் கூறியிருக்கும் பல்வேறு வசன்ங்களை குறிப்பிட்டார்கள். அவை

35ஆவது அத்தியாயத்தின் 6ஆவது வசனம், ஷைத்தான் உங்களுக்கு எதிரியாவான். அவனை எதிரியாகவே ஆக்கிக் கொள்ளுங்கள்! நரகவாசிகளாக ஆவதற்காகவே அவன் தனது கூட்டத்தாரை அழைக்கிறான்.

7ஆவது அத்தியாயத்தின் 16 மற்றும் 17ஆவது வசனமான, நீ என்னை வழிகெடுத்ததால் அவர்களுக்காக உனது நேரான பாதையில் அமர்ந்து கொள்வேன்'' என்று கூறினான். பின்னர் அவர்களின் முன்னும், பின்னும், வலமும், இடமும் அவர்களிடம் வருவேன். அவர்களில் அதிகமானோரை நன்றி செலுத்துவோராக நீ காண மாட்டாய்'' (என்றும் கூறினான்).

15ஆவது அத்தியாயத்தின் 39 மற்றும் 40ஆவது வசனமான, என் இறைவா! என்னை நீ வழி கெடுத்ததால் பூமியில் (தீமைகளை) அழகாக்கிக் காட்டுவேன். அவர்களில் உன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட உனது அடியார்களைத் தவிர (மற்றவர்கள்) அனைவரையும் வழி கெடுப்பேன்'' என்று கூறினான்.
ஆகிய வசன்ங்களை மேற்கோள் காட்டினார்கள்.

மேலும், புகாரியில் முதலாவதாக இடம் பெற்றுள்ள செயல்கள் அனைத்தும் எண்ணத்தைப் பொறுத்தே அமைகின்றன” என்ற ஹதீஸ் மற்றும் 52ஆவது ஹதீஸான தனது மார்க்கத்திற் (குக்களங்கம் ஏற்பட்டு விடும் என்பதற்) காகப் பாவமான காரியங்களிலிருந்து விலகி இருப்பதன் சிறப்பு” என்ற ஹதீஸை குறிப்பிட்டு தனது உரையை முடித்தார்கள்.

இதில் நமது ஹித் கிளை தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

0 comments:

Post a Comment

 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்