Tuesday, July 31, 2012

அஸ்ஸாமில் முஸ்லிம்கள் படுகொலை: மத்திய மாநில அரசுகளுக்கு TNTJ கண்டனம்!

அஸ்ஸாமில் முஸ்லிம்கள் படுகொலை: கட்டுப்படுத்த தவறிய மத்திய மாநில அரசுகளுக்கு TNTJ கடும் கண்டனம்!


Saturday, July 28, 2012

வகுப்பு - குழந்தைகளுக்கான பரிசுகள்




அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைனில் பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த விடுமுறையை பயனுள்ள வகையில் குழந்தைகள் கழிக்க தமிழ்நாடு தவ்ஹீத ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் குழந்தைகளுக்காக சிறப்பு வகுப்புகளை ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் பஹ்ரைன் மண்டல தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பரிசுகள் இன்று (27-ஜூலை-2012) வழங்கப்பட்டது.

ரமலான் 2012 - இரண்டாம் வார சிறப்பு நிகழ்ச்சிகள்

அல்லாஹ்வின் கிருபையால் இறைவேதமான திருக்குர்ஆன் இறங்கிய மாதமான புனித மிக்க ரமளான் மாதத்தின் இரண்டாவது வாரத்தை அடைந்துள்ளோம். இதில் முதல் வாரத்தை போன்றே பல மார்க்க நிகழ்ச்சிகளை பஹ்ரைன் மண்டல தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஏற்பாடு செய்துள்ளது. 


இந்த மார்க்க பணியை சிறப்பாக நடத்த திருப்பூர் மங்களம் முஹம்மது சலீம் MISc அவர்கள் வந்துள்ளது அறிந்ததே.


கடந்த ரமளான் மாதத்தை போன்றே இந்த வருட ரமளானிலும் இஃப்தார் நிகழ்ச்சியும் அதை தொடர்ந்து சிறப்பு மார்க்க சொற்பொழிவுகளும் நடைபெற்று வருகிறது.


ந்த ரமளான் மாத இரண்டாம் வாரத்தில் தியாகங்களின் பயன்களும் படிப்பினைகளும் என்ற தொடர் உரை நமது பஹ்ரைன் மண்டல தலமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


ந்த தலைப்பின் கீழ் பின்வரும் உபதலைப்புகளில் சொற்பொழிவுகள் நடைபெறும் இன்ஷாஅல்லாஹ்.
  1. சொர்க்க வாழ்க்கையை நேசிப்போம்
  2. மறுமை வெற்றிக்காக முயற்சிப்போம்
  3. நபிமார்களின் தியாகம்
  4. நபிகள் நாயகம் அவர்களின் தியாகம்
  5. நல்லடியார்களின் தியாகம்
  6. நபித்தோழர்களின் தியாகம்
  7. நபித்தோழியர்களின் தியாகம்
ஆகிய தலைப்புகளில் உரையாற்ற உள்ளார்கள் இன்ஷா அல்லாஹ்.


இந்த அனைத்து நிகழ்ச்சிகள் அனைத்திலும் பஹ்ரைன் வாழ் தமிழ் மக்களை தூய்மையான மார்க்கத்தின் பால் அழைக்கிறது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன். 

ரமாளான் 2012 - முதல் வார முடிவு இரவு நிகழ்ச்சிகள்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், ரமளான் மாதம் முழுவதும் நமது மண்டல சார்பாக இஃப்தார் ஏற்பாடு செய்யப்பட்டு அதைத் தொடர்ந்து ஒரு சிறிய உரையும் தாயகத்திலிருந்து வரவழைக்கப்பட்ட சகோ. முஹம்மது சலீம் அவர்களால் நிகழ்த்தப்பட்டு வருவதை தாங்கள் அறிவீர்கள். 

அதன் தொடர்ச்சியாக, வியாழக்கிழமையன்று (26-ஜூலை-2012) இரவுத் தொழுகைக்கு பிறகு சுமார் 10.30 மணியளவில் ரமளான் சிறப்பு நிகழ்ச்சி பஹ்ரைன் மண்டல தலைமைகத்தில் நடைபெற்றது.

இதில் ஆரம்பகட்டமாக, நமது மண்டல பேச்சாளர்கள் சகோ. திருச்சி மொய்தீன் அவர்கள் அலட்ச்சியப் படுத்தப்படும் தூக்கம் என்ற தலைப்பிலும், அவரை தொடர்ந்து சகோ. வடகரை ஜெய்லானி அவர்கள் கிடைக்காத மற்றுமொரு வாய்ப்பு என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள். 

இவர்களின் உரையை தொடர்ந்து தாயகத்திலிருந்து வரவழைக்கப்பட்டுள்ள சகோ. முஹம்மது சலீம் அவர்கள் முயற்சி திருவினையாக்கும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். 


இதில் சகோதரர் அவர்கள் நாம் மறுமையை வெல்ல வேண்டுமென்றால், நமது முயற்சியை பொறுத்து தான் அமைகிறது என்பதை மிக அழகாக குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை கொண்டு உரை நிகழ்த்தினார்கள்.


இவர்களின் இந்த உரையை தொடர்ந்து மக்களுக்கு பயனுள்ள விஷயங்களை எத்தி வைக்க வேண்டும் என்ற நன்நோக்கத்தில் ஒரு சிறப்பு நிகழ்ச்சியாக கேள்வி இங்கே பதில் எங்கே? என்ற தலைப்பில், சகோதரர் அவர்கள் சில கேள்விகளை கேட்டு அதை மக்கள் மத்தியிலிருந்து பதில் பெற்று அது குர்ஆன் மற்றும் ஹதீஸ் படி சரியானாதா என்பதை விளக்கினார்கள். 


இந்த நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளாவன,

இஸ்லாத்தில் 786 என்பது என்ன? அது அனுமதிக்கப்பட்டதா?


பெண்கள் பள்ளி, பொதுக்கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் போன்ற விஷயங்களில் பங்கு கொள்ளலாமா?


தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் வளர்ந்து விட்ட இந்த காலகட்டத்தில் அல்லாஹ் இருக்கின்றான் என்பதை எப்படி விளங்கிக்கொள்வது?


மற்றும் சில கேள்விகளை கேட்டு, மக்களின் கருத்துகளை பரிசிலித்து குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் அடிப்படையில் எடுத்து விளக்கினார்கள்.


இந்த மாறுபட்ட நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.


இதை தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகள் சுமார் அதிகாலை 2.30 மணியளவில் நிறைவுபெற்றது. இதன் பிறகு ஸஹர் உணவு பரிமாற்றத்துடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.

இதில் ஏராளமான தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனைடைந்தார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

Tuesday, July 24, 2012

ரமலான் 2012 - முதல் வார சிறப்பு நிகழ்ச்சிகள்

அல்லாஹ்வின் இறைவேதமான திருக்குர்ஆன் இறங்கிய மாதமான புனித மிக்க ரமளான் மாதத்தை அடைந்து உள்ளோம். இதில் கடந்த வருடம் போன்றே இந்த வருடமும் புனித மிக்க மாதத்தை பயனுள்ள வகையில் கழிக்க தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பஹ்ரைன் மண்டலம் சார்பாக தாயகத்திலிருந்து திருப்பூர் மங்களம் முஹம்மது சலீம் MISc அவர்களை அழைத்து வந்து தாவா பணிகள் செம்மையாக நடைபெற்று வருகிறது.
 
ந்த ரமலான் மாதத்திலும் கடந்த வருடங்களை போன்றே இஃப்தார் ஏற்பாடுகள் மற்றும் அதை தொடர்ந்து மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சிகள் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கிருபையால் இனிதே நடைபெறுகிறது.


ந்த வருட ரமலான் மாத முதல் வாரத்தை ஏகத்துவத்தைப் பற்றிப் பிடிப்போம் என்ற தொடர் உரை நமது பஹ்ரைன் மண்டல தலமையகத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது அல்ஹம்துலில்லாஹ்.

ந்த தலைப்பின் கீழ் பின்வரும் உபதலைப்புகளில் சொற்பொழிவுகள் நடத்தப்பட்டு வருகிறது.

  1. குர் ஆனுக்கு கட்டுப்படுவோம்
  2. நபிமொழிகளுக்கு கட்டுப்படுவோம்
  3. மார்க்கத்தை முழுமையாக பின்பற்றுவோம்
  4. நபித்தோழர்களை பின்பற்றலாமா?
  5. மார்க்கமா? உறவா?
  6. முன்னோர்களை பின்பற்றலாமா?
  7. மனிதர்களா? மார்க்கமா?

ஆகிய தலைப்புகளில் உரையாற்ற உள்ளார்கள் இன்ஷா அல்லாஹ்.


ந்த மேற்கூறப்பட்ட தலைப்புகளில் முதல் நான்கு நோன்பு முடிவடைந்து விட்டதால் மீதமுள்ள தலைப்புகளில் எதிர்வரக்கூடிய நாட்களில் உரை நிகழ்த்துவார்கள்.

இதில் ஏராளமான தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனைடைந்தார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

Saturday, July 14, 2012

வாராந்திர நிகழ்ச்சி - தலைமை - 13-07-2012


அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல தலைமையில் வாராந்திர நிகழ்ச்சி மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நேற்று (13-07-2012) அன்று நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் சகோதரர்.பந்தர் அப்துல் ஹமீது அவர்கள்"பாவ மன்னிப்பு என்ற தலைப்பிலும், அவரை தொடர்ந்து சகோ.வடகரை ஜெய்லானி அவர்கள் “ஏன் இத்தனை கட்டுப்பாடுகள் என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!! 

வாராந்திர நிகழ்ச்சி - ரிஃபா - 13-07-2012



அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல ரிஃபா கிளையில் வாராந்திர நிகழ்ச்சி இஷா தொழுகைக்குப் பிறகு நேற்று (13-07-2012) நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் சகோ.திருச்சி யூசுஃப் அவர்கள்"பெருகி வரும் அனாச்சாரங்கள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். 

இந்த நிகழ்ச்சியில் ரிஃபா கிளையைச் சேர்ந்த நமது தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

வாராந்திர நிகழ்ச்சி - ஹித் - 13-07-2012



அல்லாஹ்வின் கிருபையால், ஹித் கிளையில் பயான் நிகழ்ச்சி வெள்ளியன்று (13-07-2012) அன்று மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது. 

இதில் சகோதரி. அஹ்மது சஃபிகா உஜுஹுதீன் ஆலிமா அவர்கள்"அல்லாஹ்வின் அருள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இதில் நமது ஹித் பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

Saturday, July 7, 2012

மாதாந்திர ஆன்லைன் நிகழ்ச்சி - 06-07-2012



அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல மாதாந்திர ஆன்லைன் நிகழ்ச்சி நேற்று 06-07-2012 அன்று மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நமது மண்டல நிர்வாகிகளின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.


இந்த நிகழ்ச்சியில் தாயகத்திலிருந்து சகோதரர். ஷம்ஷுல்லுஹா அவர்கள் "புனித குர்ஆனும் பொய்க்காத வாக்குறுதியும்" என்ற தலைப்பில் ஆன்லைன் மூலம் புரேக்ஜடர் உதவி கொண்டு உரை நிகழ்த்தினார்கள்.

இதில் சகோதரர் அவர்கள் அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ள முன்னறிவுப்புகள் எந்தெந்த கால கட்டத்தில் நிகழ்ந்தது என்பதை வரலாற்று குறிப்புகளோடு, இறை வேதம் என்பதற்கான சான்றுகளை குறிப்பிட்டு தனது உரையை விளக்கினார்கள். 

இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் பெரும் திரளாக கலந்து கொண்டு பயனடைந்தார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

வாராந்திர நிகழ்ச்சி - முஹர்ரக் - 05-07-2012


அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல முஹர்ரக் பகுதியில் இஷா தொழுகைக்குப் பிறகு வியாழன் (05-07-2012) அன்று நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் சகோ.கடையநல்லூர் நிரஞ்சர் ஒலி அவர்கள், "இறைவனின் கண்காணிப்பு" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். 

இந்த நிகழ்ச்சியில் முஹர்ரக் பகுதியைச் சேர்ந்த நமது தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

Thursday, July 5, 2012

நரகத்திற்கு வழிகாட்டும் ஆம்வே வியாபாரம்!


ஆம்வே ஒரு மோசடி வியாபாரம்
ஆம்வே ஒரு மோசடி வியாபாரம் என்பதை உணர்வு, ஏகத்துவம், மற்றும் தீன்குலப் பெண்மணி இதழ்களில் விரிவாக விளக்கியுள்ளோம்.
தயவு செய்து இந்த பதிவை உங்கள் நண்பருக்கோ அல்லது உறவினருக்கோ இந்த பதிவில் உள்ள எழுத்துக்கள் சென்றடைய உதவுங்கள். இதில் உள்ள கருத்துக்களை எடுத்து சொல்லுங்கள்.
தவ்ஹீத் வாதிகள் என்று சொல்லிக் கொள்வோரில் ஆம்வே உறுப்பினர்களால் மூளைச் சலவை செய்யப்பட்ட சிலர் இந்த ஹராமான வியாபார முறையை ஹலால் என்று சொல்லிக் கொண்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர். இதில் கடையநல்லூர் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே இந்த ஹராமான வியாபாரத்தில் சிக்குண்டு இம்மை மறுமை வாழ்வை நாம் தொலைத்து விடக் கூடாது என்று எச்சரிக்கை செய்வதற்காகவே இந்தப்பதிவு. இது சகோதரரின் பதிவு .
நரகத்திற்கு வழிகாட்டும் ஆம்வே வியாபாரம்
“ஒரு பிஸ்னஸ் சொல்றேன் பன்றிங்களா?” இது தான் MLMநண்பர்களின் தாரக மந்திரம். ஒருவன் என்னதான் மாதம் முப்பதாயிரம் ரூபாய் சம்பாதிச்சாலும் உங்களுக்கு மேல் வருமானம் வருவதற்கு நான் ஒரு பிஸ்னஸ் சொல்லுறேன் பண்ணுங்க என்றால் மனுஷன் உடனே மண்டைய ஆட்டத்தான் செய்வான். அப்படி இருக்கும்போது வறுமையில் இருப்பவனையும், நடுத்தரகுடும்பத்தை சார்ந்தவனையும் பார்த்து இந்த வார்த்தையை சொன்னால் என்ன மாட்டேன் என்றா சொல்லுவான்?.
ஒருவனை இரண்டு வகையில் சுலபமாக மூளைச்சலவை செய்துவிடலாம் ஒன்று “இந்த தொழில் செய்தால் நீ செல்வந்தன் ஆகிவிடலாம் என்று, மற்றொன்று நீ இதை சாப்பிட்டால் உன் நோய் குணமாகிவிடும்” என்று . இவை இரண்டையும் சொல்லி சுலபமாக கொள்ளையடிக்கும் கொள்ளைக்கும்பல் இனத்தை சேர்ந்ததுதான் “AMWAY“ இதுவரை தமிழ்நாட்டில் பல MLM நிறுவனங்கள் பலவிதமான வித்தைகளைக்காட்டி கொள்ளையடித்து ஓடிவிட்டனர்.
ஆனால்AMWAY நிறுவனம் கொஞ்சம் வித்தியாசமானது, சட்டப்பூர்வமான கொள்ளை கும்பல்.ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு வணீக ரீதியிலான பொருட்கள் விற்ப்பனைக்கு வருகிறது என்றால் உள்ளூர் கம்பனிகளும், நிறுவனங்களும் பாதிக்காத வகையில்தான் முடிவு எடுக்கப்படும். காரணம் வேறு ஒரு நாட்டில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்தால் உள்ளூர் நிறுவனங்களுக்கு வெளிநாட்டு நிறுவனத்தால் நஷ்ட்டம் ஏற்ப்பட்டுவிடும் என்பதால், இது நடக்காதவாறு கவனித்துக்கொள்வது அரசின் கடமை. இந்த கொள்கையைத்தான் வளர்ந்துவரும் நாடுகள் என்று சொல்லப்படும் அனைத்து நாடுகளும் பின்பற்றி வருகின்றன. ஆனால் நம் இந்தியா அரசு மட்டும் இதுப்போன்ற நிறுவனங்களுக்கு வளைந்து கொடுத்து வருகிறது. இப்படி அரசின் அனுமதியில் கொள்ளையடிக்கும், மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நிறுவனங்களில் ஒன்று தான் இந்த நிறுவனம். இந்த AMWAY நிறுவனம் விற்பனை செய்யும் அனைத்துப்பொருட்களும் FMCG(FAST MOVING CONSUMER GOODS)மற்றும் PHARMACEUTICAL பிரிவை சேர்ந்தவை.
FMCG பொருட்கள் என்றால் நாம் தினமும் பயன்படுத்தும் பொருட்கள் பிரிவை சேர்ந்தது(உதாரணம்: சோப்பு,ஷாம்பு போன்றவை). இது போன்ற பொருட்களை விற்பனை செய்ய இந்தியாவில் ஏற்க்கனவே பல இந்திய நிறுவனங்கள் போட்டிப்போட்டுக்கொண்டு வருகின்றன, பின்பு எதற்க்காக இந்த பொருட்களை விற்பனை செய்ய அந்நிய நிறுவனத்துக்கு அரசு அனுமதி கொடுக்க வேண்டும்?. அடுத்தது PHARMACEUTICAL பொருட்கள், ஒருவனுக்கு உடலில் ஏதாவது பாதிப்பு என்றால் அவன் உடனே மருத்துவரை ஆலோசிப்பதுதான் சிறந்தது என்று அரசே அறிவுறுத்தி வருகிறது அப்படி இருக்கும்போது இவர்கள் எப்படி மருந்து பொருட்களை நேரடியாக விற்பனை செய்யலாம்?.
ஏமாற்றும் வழிகள்:
இந்த நிறுவனத்தில் யாரும் பிடித்துபோய் சேருவது இல்லை, நண்பனோ அல்லது உறவினரோ ஒரு பிசினஸ் பண்ணலாம் என்று சொல்லி ஒரு குறிப்பிட்ட இடத்துக்கோ அல்லது வீட்டிற்கோ அழைத்து செல்வார்கள். அங்கு அவர்களால் முடிந்தளவுக்கு மூளைச்சலவை செய்யப்படும். உதாரணத்துக்கு ஒரு குறுப்பிட்ட நபரை காண்பித்து இவர் மாதம் ஒருலட்சம்/ஐம்பதாயிரம் ரூபாய் ஆம்வே நிறுவனத்தால் சம்பாதிக்கிறார் என்று ஆசை வார்த்தையை கட்டவில்ப்பார்கள். இந்த வார்த்தையால்தான் பலர் நமது வறுமைக்கு ஒரு விடிவு வந்துவிடாதா என்று சேர்ந்து விடுகின்றனர்.
நமது இந்திய நிறுவனங்கள் ஒரு பொருளை தயாரிக்க செலவிடும் விற்பனை செலவில் இருந்து 30 % தான் செலவு செய்கின்றன, ஆனால் அது பயனாளர் கைக்கு வரும்போது மொத்த விற்பனை விலைக்கு வருகிறது, இதனால் நஷ்டம் அடைவது பயனாளர்தான். பயனாளர் மூலம் கடைக்காரர்,விநியோகஸ்த்தர்,விளம்பரதாரர் என பலர் லாபம் பெறுகின்றனர் என்று சொல்லிதான் இந்த நிறுவனத்தின் ஊழியர்கள் மக்களை ஏமாற்றுகின்றனர். இவர்கள் சொல்வது உண்மைதான், மூன்று ரூபாய் பொருட்செலவில் தயாரிக்கும் பொருளை நாம் பத்துரூபாய்க்கு வாங்குவது நிஜம்தான், இந்த வார்த்தைகளை கேட்டு பலர் ஏமார்ந்து விடுகின்றனர். நமது இந்திய நிறுவனத்துடன் ஆம்வே நிறுவனத்தின் பொருட்களின் விலையை ஒப்பிட்டு பார்த்தால் இந்திய நிறுவனங்களின் பொருட்கள்தான் மிகவும் விலை குறைவாக உள்ளது.
►இந்திய நிறுவனத்தின் தரமான சோப் 15 – 20 ரூபாய்(கடைக்காரர், விநியோகஸ்த்தர், விளம்பரதாரர், நிறுவன லாபம் எல்லாம் உட்பட).
►ஆனால் ஆம்வே நிறுவனத்தில் ஒரு சோப்பின் விலை 37ரூபாய்(விளம்பரதாரர்,விநியோகஸ்த்தர், கடைக்காரர் இவர்கள் யாருக்கும் லாபம் கொடுக்காமலே)
மேலும் ஆம்வே நிறுவன பொருட்களின் விலைகள்.TOOTHBRUSH(1) – 19 ரூபாய்
HAIR OIL(500 ML) – 95 ரூபாய்
SHAVING CREAM(70G) – 86 ரூபாய்
OLIVE OIL (1 LITRE) -400 ரூபாய்
FACE WASH -229 ரூபாய்
PROTIEN POWDER(1KG) – 2929 ரூபாய்
மேலே இருக்கும் விலை பட்டியல் உதாரணம் மட்டும்தான் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள் இந்த விலை நமது இந்திய நிறுவனத்தின் விலையை விட குறைவா?. இத்தனைக்கும் இவர்கள் விளம்பர நிறுவனங்கள் , விநியோகச்த்தர்கள், கடைக்காரர் என பலத்தரப்பட்டவர்களின் தொழில்களுக்கு நஷ்ட்டம் விளைவித்து மக்களுக்கு குறைந்த விலைக்கு(நேரடி விற்பனை(DIRECT SALE)) விற்பதாக சொல்லி விற்று வருகின்றனர்.
நேரடி விற்பனை(DIRECT SALE) என்றால் ஒருபொருளின் தயாரிப்பு செலவில் நிறுவனத்தில் லாபம் மட்டுமே வைத்து குறைந்த விலைக்கு விற்பதுதான் DIRECT SALE. ஆனால் ஆம்வே நிறுவனம் நேரடி விற்பனை செய்வதாக தம்பட்டம் அடித்துக்கொண்டு மற்ற இந்திய நிறுவனங்களை விட அதிக விலைக்கு விற்று வருகின்றனர். இந்திய நிறுவனங்கள் ஒரு டூத்பிரஷ் தயாரிக்க செய்யும் செலவு 4 ரூபாய்தான் ஆகிறது ஆனால் விற்பனை செய்யும்போது 15 ரூபாய்க்கு விற்பதாக ஆம்வே நிறுவனம்(ஊழியர்கள்) நமது இந்திய நிறுவனம் மீது குற்றம் சொல்கிறது. ஆனால் இவர்கள் விற்பனை செய்யும் டூத்பிரஷ்ஷின் விலையோ 19 ரூபாய் அப்படியென்றால் இவர்களுக்கு தயாரிக்க ஆகும் செலவே 15 ரூபாயா?
► ஆம்வே நிறுவனத்தில் ஒருவர் இணைய வேண்டும் என்றால் 995 ரூபாய் கட்ட வேண்டும்.
(எந்த ஒரு செலவும் இல்லாமல் ஆம்வே நிறுவனத்துக்கு 995 ரூபாய் லாபம்)
►பின்பு தனக்கு கீழே இரண்டு நபர்களை சேர்த்து விட வேண்டும்.
(எந்த ஒரு செலவும் இல்லாமல் நிறுவனத்துக்கு 1990 ரூபாய் லாபம், ஆக மொத்தம் உங்களால் ஆம்வே நிறுவனத்துக்கு 2985 ரூபாய் லாபம். இது நீங்கள் அந்த நிறுவனத்தில் இணையும்போது மட்டும்தான்)
► இந்த நிறுவனத்தில் நீங்கள் சம்பாதிக்க வேண்டும் என்றால் மாதம் குறைந்தது6000 முதல் 6200(100 pv) ரூபாய்க்கு பொருட்கள் வாங்க வேண்டும். ஒரு நிறுவனம் தனது பொருட்களை தயாரிக்க ஆகும் செலவு பொருட்களின் விற்பனை செலவில் 30 % தான். சரி ஆம்வே நிறுவனத்துக்கு 50 % என்று வைத்தால் கூட 3000 ரூபாய் லாபம் வருகிறது.
இப்போது கொள்ளை கும்பலின் கோள்ளை கணக்கை பாருங்கள்:
►நீங்கள் ஆம்வே நிறுவனத்தில் இணையும்போது கட்டிய தொகை 995 ரூபாய்.
►நீங்கள் பொருட்கள் வாங்கிய விலையில் கம்பனி லாபம் 3000 ரூபாய்(6000-3000).இது 50 % தான் லாபம், கூடலாம் 
►ஆக மொத்தம் நீங்கள் இந்த நிறுவனத்தில் இணையும் போதே உங்கள் பக்க இழப்பு 3995 ரூபாய்.
இந்த நிறுவனத்தில் இணைபவர்கள் எவனோ ஒருவன் இந்த நிறுவனத்தில் ஒருலட்ச்சம் ரூபாய் சம்பாதித்து விட்டான் நாம் ஏன் சம்பாதிக்க முடியாது என்று எண்ணித்தான் இணைகின்றனர் அவர்களுக்காக ஒரு சிரிய விளக்கம்.
►ஒருவன் ஒருலட்ச்ச்ம் ரூபாய் இந்த நிறுவனத்தில் சம்பாதித்தான் என்றால் இவன் தனக்கு கீழே குறைந்தது 100 நபர்களையாவது இணைத்திருப்பான்.(ஒரு நபர் இணையும்போது இந்த நிறுவனத்தில் கட்ட வேண்டிய தொகை 995 ரூபாய்)
100 x 995 = 99500 ரூபாய்
இந்த ஒருவன் மூலம் நிறுவனம் அடைந்த லாபம் மட்டும் 99500 ரூபாய். ஆனால் இதில் அவனுக்கு எந்த ஒரு லாபமும் கிடையாது. இவனுக்கு கீழே இருக்கும் ஒவ்வொருவரும் மாதம் 6000 ரூபாய்க்கு பொருட்கள் வாங்க வேண்டும் இதை 100 PV என்று சொல்வார்கள்.
3000 x 100 = 300000 ரூபாய்
அப்படிபார்த்தால் இவன் ஒருவன் மூலம் ஆம்வே நிறுவனத்துக்கு வந்த லாபம் மட்டும் 399500 ரூபாய். நிறுவனத்துக்கு ஒருமாத லாபம் 300000 ரூபாய் (மூன்று லட்சம்).
இவ்வளவு கொள்ளைகளும் போதாதென்று மேலும் ஒரு கொள்ளையாய் கணக்கை புதுப்பித்தல் ( ACCOUNT RENEWABLE) சார்ஜ் வேறு 480 ரூபாய் ஆண்டொன்றுக்கு.
இன்னொரு கொள்ளை விதிமுறை பற்றி சொல்லவேண்டும் என்றால் இந்த நிறுவனத்தில் இணைந்தால் வாங்கும் பொருட்களுக்கெல்லாம் கமிஷன் கொடுக்க மாட்டார்கள் அதிலும் ஒரு கொள்ளை விதிமுறையை வகுத்துள்ளனர். ஒருவன் இந்தநிருவனத்தில் இணைந்திருக்கிறான் என்றால் மாதம் 6000 ரூபாய்க்கு பொருட்களை கண்டிப்பாக வாங்கியே தீர வேண்டும் இல்லையென்றால் இவனுக்கு கீழே எவ்வளவு பொருட்கள் விற்பனை ஆனாலும் இவனுக்கு கமிஷன் கிடையாது. அதேபோல் இவர்கம் PV என்னும் POINT VALUE வேறு கடைப்பிடிக்கிறார்கள் தனக்கு கீழே 300 அல்லது 900 PV , அதற்க்கு மேல் பொருட்கள் விற்பனை செய்தால் தான் சம்பாதிக்க முடியும்.
300 PV = 16,500 ரூபாய் (விற்பனை விலையில் சலுகை போக)
900 PV = 49,500 ரூபாய் (விற்பனை விலையில் சலுகை போக)
இந்த PV விஷயத்தில் பல தில்லுமுல்லு வேலைகள் உள்ளது. இந்த நிறுவனத்தில் இணைந்தவர்கள் வீட்டில் உட்க்கார்ந்து கணக்கு போட்டு பாருங்கள் விளங்கும்.
லட்ச்சங்களையும், கோடிகளையும் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தையை காட்டி இவர்கள் கோடி கோடியாய் மக்கள் பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர். ஆனால் இதெல்லாம் அறியாத மக்கள் தனது பணத்தை இது போன்ற நிறுவனங்களில் தொடர்ந்து இழந்துகொண்டேதான் வருகின்றனர். மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பாதித்தவன்(கவுரவமாய்) கூட இந்த நிறுவனத்தில் இனைந்து தனது உறவினர்கள் நண்பர்கள் வீட்டில் நாயாய் பேயாய் அழைந்து ஆம்வே பொருட்களை விற்பனை செய்து துளியளவு கூட லாபம் ஈட்ட முடியாமல் இருப்பதே நிஜம்.
இந்த நிறுவனத்தில் நான் பார்த்த மிகப்பெரிய கொடுமை ஒரு வாலிபன் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு இந்த நிறுவனத்தில் நாயாய் பேயாய் அழைந்து முழு நேரமாக தனது பொருட்களை விற்பனை செய்து, ஆட்களை சேர்த்து விட்டு வருவதுதான் . இவன் தனது பழைய நிறுவனத்தில் வாங்கிய மாத சம்பளம் 8000 ரூபாய், ஆனால் இந்த ஆம்வே நிறுவனத்தில் இவன் வாங்கிய சம்பளம் பாதி கூட இல்லை இதுவும் இவன் தான் ஏமார்ந்து வருவதை உணரும் வரைதான்
பொய்யே ஆம்வே வியாபாரத்தின் மூலதனம்
நபியவர்கள் பொய்கூறி வியாபாரம் செய்வதையும், மோசடி வியாபாரத்தையும், ஏமாற்று வியாபாரத்தையும் தடைசெய்துள்ளார்கள்.
ஆனால் இந்த ஆம்வே மோசடி வியாபாரத்தின் மூலதனமே பொய்தான்
பொய் சொல்வதற்கு மிக அற்புதமாக இந்தப் பொய்யர்கள் பயிற்சி அளிக்கின்றனர்
இவர்கள் ஒவ்வொரு பொருட்களையும் பரிந்துரைக்க சொல்லும் வார்த்தை பக்கவிளைவுகள் இல்லை என்பதுதான், இன்னும் ஒரு சிலர் இந்த பொருட்களை நீங்கள் பயன்படுத்தவில்லை என்றால் விரைவில் நோய் வாய் பட்டு இறந்துவிடுவீர்கள் என்பது போல பயமுறுத்தியும் வருகின்றனர். இவர்கள் அதிகமாக பரிந்துரைக்கும் பொருட்கள் என்று பார்த்தால் NUTRILITE பொருட்கள்தான் அதிலும் இவர்கள் பரிந்துரைக்கும் பொருட்கள் என்று பார்த்தால் ப்ரோட்டின் பவுடர்தான் இந்த ப்ரோடீன் பவுடரை இவர்கள் என்னென்ன சொல்லி விற்க முடியுமோ அவ்வளவு பொய்களையும் சொல்லி விற்று வருகின்றனர்.
எங்கள் உறவுக்கார் சில நாட்களுக்கு முன்பு இனிப்பு வகையை உண்ணும்போது உங்களுக்கு சுகர் இருக்கே ஏன் இவ்வளவு இனிப்பு எடுத்துக்குரிங்க என்று கேட்டபோது அவர் சொன்னபதில் “இல்ல நான் ஆம்வே ப்ரோடீன் பவுடர் சாப்பிடுறேன் அதனால எனக்கு சுகர் வராது” என்றார். இவருக்கு யார் இப்படி பரிந்துரைத்தார்கள் என்று தெரியவில்லை, ப்ரோடீன் பவுடர் சாப்பிட்டால் சுகர் குறைந்துவிடும் என்று. இவர்களுக்கு மாதம் கிடைக்க வேண்டிய PV க்காக கண்ணா பின்னாவென வாயில் வந்ததையெல்லாம் சொல்லி ஏமாற்றி விற்று வருகின்றனர்.
இப்படி இவர்கள் கண்மூடித்தனமாக மருத்துவ பொருட்களை எடுத்துக்கொள்கிரார்களே, இப்படி மருத்துவர் ஆலோசனை இல்லாமலே நம் விருப்பத்திற்கு எடுத்துக்கொள்ளலாமா என்று எனக்கு ஒரு சந்தேகம் வந்தது. இது பற்றிய சந்தேகத்தை போக்கிக்கொள்ள இலங்கை மருத்துவர் துமிழ் அவர்களிடம் கேட்டபோது அவர் சொன்ன பதில்கள் உங்களுக்காக
புரோட்டின் என்றால என்ன ?
நமது உடல் வளர்ச்சிக்குத் தேவையான உணவில் உள்ள போசனைப் பதார்த்தங்கள் பிரதானமாக கார்போ ஹைட்ரேட் (Carbohydrate), FAT, புரோட்டின, விட்டமின்கள், கனியுப்புக்கள் எனப் பிரிக்கப்படலாம்.இதிலே உடலின் அன்றாடத் தேவைக்குரிய சக்தியை வழங்குவது பிரதானமாக கார்போ ஹைட்ரேட் அதைத் தொடர்ந்து கொழுப்புக்களும் (FAT)ஆகும்.
புரதமானது அன்றாட தேவைக்கான சக்தியை வழங்குவதை விட மிக முக்கியமாக உடலின் கட்டமைப்பை பேணுவதற்கு அவசியமாகும். குறிப்பாக உடலின் வளர்ச்சியின் போது இதன் அளவு வழங்கப்படவேண்டும். மேலும் நோய் வாய்ப்பட்டவர்கள் அந்த நோயில் இருந்து சுகமகிக் கொண்டிருக்கும் போதும் புரத தேவை சடுதியாக அதிகரிக்கும். அதாவது உடலின் கலங்கள் மீள் கட்டமைப்பதற்கும் சீர் செய்யப்படுவதற்கும் புரதம் இன்றி அமையாதது.அதுதவீர ஒருவர் போதியளவு மாப்பொருள் சத்தையும் ,கொழுப்புச் சத்தையும் உட்கொள்ளாவிட்டாலஅன்றாட தேவைகளின் சக்திக்காக உடலில் சேமிக்கப்பட்டுள்ள புரதங்கள் பாவிக்கப் படும். இதனால் உடலின் கட்டமைப்புச் சீர் குழைந்து மெலிந்த தோற்றமுடையவர்களாக மாறுவார்கள்.
அதாவது ஒருவர் உண்ணும் உணவில் அனைத்துவிதமான போஷாக்குப் பதார்த்தங்களும் தேவையான அளவிலே இருக்க வேண்டும். மாறாக தனியே புரதத்தினை மட்டும் அதிகம் உட்கொள்ளுவதால் நன்மையில்லை .
புரோட்டின் பவுடர்கள் எனப்படுபவை யாவை?
இவை உடலுக்குத் தேவையான அமைனோ அமிலங்களை செறிவாக்கி உருவாக்கப் பட்டவை. இவற்றின் மூலம் உடலுக்குத் தேவையான புரதங்களை இலகுவாகப் பெற்றுக் கொள்ள முடியும் என்று சொல்லப் படுகிறது. இவற்றில் உள்ள அமைனோ அமிலங்களும் இலகுவாக உள்லேடுக்கப் படக் கூடியதென சொல்லப் படுகிறது. இவற்றை உண்பதால் உண்மையில் நன்மைகள் ஏற்படுமா? ஏற்கனவே சொன்னது போல நமக்குத் தேவையான போஷாக்குகள் அனைத்தும் தேவையான அளவிலே கிடைத்தால் மட்டுமே நமது உடலின் தொழிற்பாடுகள் சரியாக நடைபெறும். அவ்வாறு நாமக்குத் தேவையான அனைத்து போஷாக்குகளையும் பெற்றுக்கொள்ள சிறந்த வழி போஷாக்கான உணவுகளை உட்கொள்ளுவதே. தனியே புரோட்டின் பவுடர்களை உட்கொள்ளுவதால் புரோட்டினும் சில கனியுப்பு,விட்டமின்களும் கிடைத்தாலும் நமது அன்றாடத் தேவைக்கான சக்தியை வழங்கும் மாப்பொருள் கொழுப்பு என்பவற்றிற்காக நாம் உண்ணும் உணவையே நம்பியிருக்கு வேண்டும். இவ்வாறு உண்ணும் உணவில் முட்டை, இறைச்சி, மீன் போன்றவற்றை சேர்த்து விட்டாலே போதும் தேவையான புரதத்தையும் சுவையான சாப்பாடுடன் பெற்று விடலாம். பிறகேன் தேவை இல்லாமல்புரட்டின் பவுடர்களுக்காக காசினைச் செலவு செய்ய வேண்டும்?
உண்மையில் யாருக்கு புரோட்டின் பவுடர் தேவைப்படும்?
படுக்கையிலே இருக்கும் அல்லது உணவு வாய் வழியாக உட்கொள்ள முடியாமல் குழாய் மூலம் உணவு எடுத்துக் கொள்ள வேண்டிய தேவை உள்ளவர்களுக்கு புரட்டின் பவுடர் வழங்குவது இலகுவாக இருக்கும். சில நோய்கள் ஏற்பட்டு சுகமாகும் காலத்தில் புரோட்டின் தேவை சாதாரண அளவை விட அதிகரிக்கும் போது புரட்டின் பவுடர் உதவும் என்றாலும் அந்த நேரத்திலும் உணவின் மூலம் புரதத்தினைப் பெற்றுக் கொள்ள கூடியவர்கள் உணவில் புரதம் கூடிய உணவுகளை அதிகரிப்பது புரோட்டின் பவுடர் பாவிப்பதை விட சிறந்தது.
உடற் கட்டலகுக்காக தசைகளை புடைக்கச் செய்யும் நோக்கோடும் புரோட்டின் பவுடர்களை ஆண்கள் பாவிப்பதுண்டு. இந்த நோக்கத்திற்காக பாவிக்கும் ஆண்கள் கட்டாயமாக மாப்பொருள் கொழுப்பு போன்றவற்றையும் சற்று அதிகமாக உட்கொள்ள வேண்டியதோடு போதிய உடற்பயிர்ச்சியிலும் ஈடுபட வேண்டியது அவசியம்.
ஆக , சுகதேகியான ஒருவர் அல்லது உணவுகளை உட்கொள்ளக் கூடிய ஒருவர் தனக்குத் தேவையான புரத்தைத்தினை உணவின் மூலம் பெருக் கொள்ள முடியும் போது அனாவசியமாக எதற்காக புரோட்டின் பவுடர்களை நம்பி காசை செலவழிக்க வேண்டும். சந்தையில் உள்ள புரோட்டின் பவுடர்கள் அனைத்துமே ஆயிரத்திற்கும் அதிகமான விலை கொண்டவை.அந்த காசிற்கு நல்லஉணவினை வாய்க்கு ருசியாக சமைத்துச் சாப்பிடலாமே.
அதற்கும் மேலாக சந்தையில் இப்போது ஏராளமான புரோட்டின் பவுடர்கள் பல்வேறு விலைகளில் கிடைக்கின்றன. அதிக விளம்பரம் உள்ள புரோட்டின் பவுடர் நல்ல தரமானது என்ற பெயருடன் அதிகமான விலைக்கு விற்கப்படலாம். ஆகவே புரோட்டின் பவுடர் பாவிக்கத்தான் போகிறேன் என்று அடம் பிடிப்பவர்கள் விளம்பரத்தில் ஏமாறாமல் மற்றைய புரோட்டின் பவுடர்களின் விலைகளை பார்த்து நியாயமான விலையில் இருப்பதை தெரிவு செய்யுங்கள். சந்தையில் உள்ள புரோட்டின் பவுடர்களின் தரம் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவைதான். முக்கியமாக நாட்பட்ட நோய்கள் குறிப்பாக சிறுநீரக நோயாளிகள் வைத்தியரின் அனுமதி இன்றி புரோட்டின் பவுடர்களை பாவிக்க வேண்டாம்.
நான் ப்ரோடீன் பவுடரை மட்டும் குறிப்பிட்டு சந்தேகங்களை கேட்க்க காரணம் ஆம்வே நிறுவனம் NUTRILIRE என சொல்லப்படும் மருத்துவ குணங்கள் உள்ள பொருட்களில் இதை தான் முன்னிறுத்தி விற்பனை செய்துவருகின்றனர்.
இன்னொரு விஷயத்தில் ஆம்வே நிறுவனத்தில் கவனிக்க வேண்டும் என்றால் இவர்களுடைய பொருட்களை வாங்குபவர்கள் எப்படியாவது முதல் முறை ஏமாற்றப்பட்டு வாங்கிவிடுகின்றனர், பின்பு அந்த பொருளை பயன்படுத்தும்போது விலை உயர்ந்த பொருள் என்று மனதில் நினைத்துக்கொண்டே பயன்படுத்துவதால் இதுதான் சிறந்தது என்ற முடிவுக்கு வந்துவிடுகின்றனர்(உளவியல் ரீதியில் இதுதான் நடந்து வருகிறது).
சில நாட்களுக்கு முன்பு எங்கள் உறவுக்காரர் ஊரில் இருந்து ஒரு திருமண விழாவிற்கு வந்திருந்தார். அவர் எப்போதும் ஹமாம் சோப்புதான் பயன்படுத்துவார், நாங்கள் வேறு ஏதேனும் ஒரு சோப்பை கொடுத்தால் வேண்டாம் எனக்கு ஹமாம் பழகிவிட்டது என்று சொல்வார். ஆனால் இந்த முறை அவருக்கு ஹமாம் சோப்பு கொடுக்கும்போது அவர் சொன்ன பதில் “ஆம்வே சோப்பு தவிர வேறு சோப்பு போட்டால் உடல் அரிக்கிறது” என்று. எனக்கு எப்படி சொல்வது என்று தெரியவில்லை பல ஆண்டுகளாக ஹமாம் சோப்பு பயன்படுத்தியவர் இப்போது இந்த விலை உயர்ந்த சோப்பை பயன்படுத்தவில்லை என்றால் உடல் அரிக்கிறது என்று கூறுகிறார் என்றால் பாருங்கள் இவர் எந்த அளவுக்கு உளவியல் ரீதியாக மனம் மாறிவிட்டார் என்று.
அதேப்போல்தான் இவர்கள் விற்பனை செய்யும் முகத்தை அழகுப்படுத்தும் க்ரீமும் , யாராவது ஒருவர் தன் கண் முன் கருப்பாக தெரிந்துவிடக்கூடாது உடனே இரண்டாயிரம் மூன்றாயிரம் என்று ஏதாவது ஒரு க்ரீமை பரிந்துரைத்து பணத்தை கரந்து விடுகின்றனர். ஆனால் உண்மை என்னவென்றால் இதுவரை ஒருநாளைக்கு ஒருமுறை முகம் கழுவியவன் இந்த க்ரீம் தடவுவதர்க்காகவே மூன்று நான்கு முறை தன் முகத்தை கழுவுகிறான். இதனால் முகம் கொஞ்சம் வெள்ளையாக தெரிந்தாலும் க்ரீம் மூலம் தான் வெள்ளை கிடைத்தது என்று நினைத்துக்கொண்டு மற்றவர்களிடமும் பரிந்துரைக்கின்றார். சாதாரணமாக எந்த ஒரு க்ரீமும் போடாமல் ஒருநாளைக்கு காலையும் மாலையும் முகத்தை கழுவினாலே முகம் பளிச்சிடும். ஆனால் ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே முகம் கழுவும் நபர்களை இப்படி விலைஉயர்ந்த பொருட்களை வாங்கவைத்து தனக்குள்ளேயே இவர்கள் பொருட்கள்தான் குணப்படுத்துகிறது என்று நினைக்கவைத்து மேலும் மேலும் ஏமாற்றி வருகின்றனர்.
அதே போல் இவர்கள் விற்பனை செய்யும் பேஸ்ட், பிரஷ் போன்றவற்றுக்கும் இவர்களைவிட விலைகுறைந்த தரமான இந்தியபொருட்க்கள் பலவற்றை கூறலாம். ஆனால் பரிந்துரைப்பவர் உறவினர் நண்பர் என்பதால் முகத்தாட்ச்சனைக்காக வாங்கிவிட்டு பிறகு விலை உயர்ந்த பொருள் என்பதால் தனது மனதுக்குள்ளேயே தான் இதற்க்கு முன் பயன்படுத்திய பொருளை விட நன்றாக உள்ளது என்று தன்னை தானே ஏமாற்றி கொள்கின்றனர்.
ஆம்வே மோசடி என்று அமெரிக்க ஆணையமே கூறியுள்ளது.
அமெரிக்க அரசின் தன்னாட்சி அமைப்பான ‘கூட்டாட்சித் தொழில் ஆணையம்’ ( Federal Trade commision) என்ற அமைப்பு வணிக நிறுவனங்கள் பணம் சம்பாதிப்பதைப் பற்றியும், அவை கடைபிடிக்கும் வணிக முறைகள் பற்றியும் ஆய்வு செய்து பட்டியல் தயாரித்து அளிக்கும். அவ்வாறான பட்டியலில் சங்கிலித் தொடர் நிறுவனங்களை இந்த ஆணையம் சேர்க்க மறுத்துவிட்டது. தொழில் வாய்ப்பு விதிகளின் கீழ் (Business rules and oppurtunities) சங்கிலித் தொடர் வணிகத்தை அங்கீகரிக்க முடியாது என மேற்கண்ட ஆணையம் கூறிவிட்டது. மார்ச் 2008-இல் இந்த ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் சங்கிலித் தொடர் வணிகம் வாடிக்கையாளர்களை வணிகம் செய்யத் தூண்டுவதை விட மூளைச் சலவை செய்கிறது. மத நம்பிக்கையை போல விசுவாசத்தை பரப்புகிறது. இந்த வழிமுறையைத் தொழில் வழிமுறையாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று ஆணையம் கூறியது. புகழ் பெற்ற அமெரிக்க சங்கிலித் தொடர் வணிக நிறுவனமான ஆம்வே(Amway) நிறுவனத்தை இந்த “மூளைச்சலவை” வழிமுறைக்கு எடுத்துக்காட்டாக ஆணையம் கூறியது. (பார்க்க: http://www.ftc.gov/opa/2008/03/busrule.shtm) அமெரிக்காவின் வணிக ஆணையத்தின் கண்டனத்திற் குள்ளான ஆம்வே சங்கிலித் தொடர் வணிக நிறுவனம் தமிழகத்தில் எந்த தடையும் இன்றி கொடிகட்டி பறக்கிறது. சங்கிலித் தொடர் வணிக நிறுவனங்கள் வாங்குவோரிடம் பொருள் பற்றிய முழுத் தகவல்களை சொல்லாமல் திரித்துக் கூறி வணிகம் செய்வதை வழக்கமாக கொண்டிருப்பதால் அதனை ஞாயமான வணிகமாக அங்கீகரிக்க முடியவில்லை என்று அமெரிக்க ஆணையம் கூறுவது கவனிக்கத்தக்கது.
திறந்தப் பொருளாதாரமும் தனியார்மயமும் கோலோச்சுகிற அமெரிக்காவிலேயே சங்கிலித் தொடர் வணிகம் ஐயத்தோடு பார்க்கப்படும் போது இந்தியாவில் இந்த மோசடி வணிகத்திற்கு எந்தக் கண்காணிப்பும் இல்லை என்பது வெட்கக் கேடானது. ‘கோல்ட் க்வெஸ்ட்’; நிறுவனத்தில் ஒருவர் ரூ 30,000 கொடுத்து உறுப்பினராவார். அந்நிறுவனம் அவருக்கு தங்கக் காசு ஒன்றைக் கொடுக்கும்.
அவ்வாறு சேர்ந்த பின்பு அவர் 3 பேரை உறுப்பினர்களாக இதே போல் சேர்க்க வேண்டும். சேர்த்து விடப்பட்ட மூவரும் அவரவர்கள் 3 பேரை உறுப்பினர்களை சேர்த்து விட்டுக் கொண்டே போவர். எத்தனை பேரை சேர்க்கின்றனரோ அதற்கு ஏற்றாற் போல் முதல் முதலில் சேர்ந்தவர் முதல் அவருக்கு பின் சேர்பவர்கள் அனைவருக்கும் தரகு பணம் கொடுக்கப்படும். இதன் மூலம் எளிதில் பணம் பார்த்துவிடலாம் என்று கவர்ச்சிகரமாக விளம்பரப் படுத்திய பல ‘பிரபல’ங்களை யெல்லாம் பேசவிட்டு மூளைச்சலவை செய்து உறுப்பினர்களை சேர்த்து வந்தது இந்நிறுவனம். இப்படி இந்நிறுவனத்தில் சேர்பவர்கள் அனைவரும் 3 பேரை சேர்த்து விட முடியாது. ஒரு சிலர் தான் சேர்ப்பர். எவரையும் சேர்க்க முடியாதவர்கள் அவர்கள் கொடுத்த பணத்தை இழந்திட வேண்டியது தான். அவர் கட்டிய பணத்தை நிறுவனம் அப்படியே எடுத்துக் கொள்கிறது. இவ்வாறு இந்நிறுவனம் சுமார் ரூ.100 கோடி அளவில் மோசடி செய்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித் துள்ளனா;. இந்நிறுவனத்தின் 300 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களும் காவல்
துறையினரால் முடக்கப்பட்டுள்ளன. இந்நிறுவனத்தில் ஏமாந்த பலரும் இந்நிறுவனம் பன்னாட்டு நிறுவனம் என சொன்னதால் தான் இதில் இணைந்தோம் என்று செய்தி ஊடகங்களுக்கு பேட்டியும் கூட அளித்தனர். பன்னாட்டு நிறுவனம் என்றால் அவ்வளர் கவர்ச்சி.

கடவுள் இருக்கின்றார், 99.9 % உருதிபடுத்தியுள்ளது ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகம்!


கடவுளின் அணுத்துகள் என்று அழைக்கப்படும் ஹிக்ஸ் போஸான் இருப்பது 99.999% உறுதி செய்யப்பட்டுள்ளதாக இது தொடர்பான ஆராய்ச்சியை நடத்தி வரும் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
இதன்மூலம் ஹிக்ஸ் போஸான் இருக்கிறதா இல்லையா என்பது தொடர்பான கேள்விகளுக்கு ஓரளவுக்கு விடை கிடைத்திருக்கிறது.
Big Bang எனப்படும் பெரு வெடிப்பைத் தொடர்ந்தே அணுக்களும், மூலக்கூறுகளும், கிரகங்களும், இந்த பேரண்டமும் (universe) உருவாயின என்பது தியரி.
இதன்படி பிக் பேங் வெடிப்பு நிகழ்ந்த கணத்தில் அணுக்கள் ஒலியை விட பயங்கரமான வேகத்தில் எல்லா திசைகளிலும் சிதறின. அப்போது அந்த அணுக்களுக்கு எந்த நிறையும் (mass) இல்லை.
ஆனால், ஹிக்ஸ் போஸான் எனப்படும் ‘சக்தியோடு’ அவை தொடர்பு கொண்ட பிறகே அந்த அணுக்களுக்கு நிறை கிடைத்தது. இது தான் இந்த பேரண்டம் உருவானதன் அடிப்படை என்று சொல்கிறது ஸ்டாண்டர்ட் மாடல் தியரி.
இந்த கோட்பாட்டின்படி (தியரி) இந்த யுனிவர்ஸ் உருவாக முக்கிய அடிப்படையாக இருந்தவை 12 வகையான அணுத் துகள்கள். அடுத்தடுத்து நடந்த ஆய்வுகளில் 11 அணுத் துகள்கள் அடையாளம் காணப்பட்டுவிட்டன. அவை இருப்பதையும் பார்த்துவிட்டோம்.
ஆனால், இதுவரை கண்ணுக்குப் புலப்படாத ‘சூப்பர் ஸ்டார்’ தான் ஹிக்ஸ் போஸான். சரி, இதைத் தான் கண்டுபிடிக்கவே முடியவில்லையே, விட்டுவிட வேண்டியது தானே என்றால், அதுவும் முடியாது. காரணம், அது இந்த யுனிவர்ஸ் உருவானது தொடர்பான ஒட்டு மொத்த தியரிகளையும் குப்பைக்குக் கொண்டு போய்விடும்.
இதையடுத்தே ஹிக்ஸ் போஸானை கண்டுபிடிக்கும் முயற்சிகள் தொடங்கின. அமெரிக்காவில் தான் முதலில் இந்த ஆய்வுகள் நடந்தன. பல ஆண்டுகள் நீடித்த இந்த சோதனைகள் எந்த முடிவையும் எட்டாததால், அந்த ஆய்வுகளுக்கு நிதி தருவதை அமெரிக்க அரசு நிறுத்திவிட்டது.
இதைத் தொடர்ந்தே பிரான்ஸ்-சுவிஸ் எல்லையில் ஜெனீவா அருகே ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகம் (CERN) அமைத்த மாபெரும் வட்ட சுரங்க ஆய்வகத்தில் இந்தச் சோதனைகள் தொடங்கின.
அணுத் துகள்களுக்கு நிறையைத் தருவதாகக் கருதப்படும் ஹிக்ஸ் போஸான் தான் நம்மைச் சுற்றியுள்ள இந்த பேரண்டத்தின் பெரும் பகுதியை நிறைத்திருக்கிறது. இதனால் பாதிக்கப்படாத ஒரே அணுத் துகள் ஒளிக் கதிர்களான போட்டான்கள் மட்டுமே. இதனால் தான் போட்டான்களுக்கு நிறை இல்லை. மற்ற எல்லா அணுத் துகள்கள் மீதும் இந்த ஹிக்ஸ் போஸான் தனது ஆதிக்கத்தைச் செலுத்தி நிறையைத் தந்துவிடுகிறது என்று சொல்கிறது ஸ்டாண்டர்ட் மாடல் தியரி.
ஆனால், அதில் விடுபட்டு நிற்கும் ஒரே கேள்வி அணுத் துகள்களுக்கு நிறையைத் தரும் ஹிக்ஸ் போஸானின் எடை என்ன என்பதே. (நிறை என்றால் என்ன?. ஒரு பொருளின் எடை மைனஸ் புவிஈர்ப்பு விசை தான் நிறை. அதாவது நமது எடை 55 கிலோ என்றால் நம் உடலின் மீது புவிஈர்ப்பு விசை செலுத்தும் இழுவிசையைச் சேர்த்தது தான் 55 கிலோ எடை. இதில் புவிஈர்ப்பு விசையை கழித்துவிட்டால் மிச்சமிருக்கும் எடையே நிறை)
பார்க்கவே முடியாத ஹிக்ஸ் போஸானை நிரூபிக்க ஒரே வழி. அதன் எடையைக் கண்டுபிடிப்பதே. இந்த ஆய்வைத் தான் CERN நடத்தியது.
இதற்காகத் தான் சிறிய அளவிலான Big Bang வெடிப்பை செயற்கையாக நடத்திப் பார்த்தனர். இதற்காகத் தான் நியூட்ரான்-புரோட்டான்களின் அதி பயங்கர மோதலை நடத்தினர். இந்த மோதலில் வெடித்துச் சிதறிய பல்வேறு அணுத் துணைத் துகள்கள், கதிர்வீச்சுகளுக்கு இடையே ஹிக்ஸ் போஸானையும் (அதன் எடையை) தேடினர்.
ஸ்டாண்டர்ட் மாடல் தியரியின் படி ஹிக்ஸ் போஸானின் எடை 125 கிகா எலெக்ட்ரோ வோல்ட்ஸ் (GeV) என்ற அளவில் இருக்க வேண்டும். அதாவது அணுக்களுக்குள் இருக்கும் துணைத் துகளான புரோட்டானின் எடையை விட 125 மடங்கு அதிகமாக இருக்க வேண்டும்.
CERN விஞ்ஞானிகள் நடத்திய ஆராய்ச்சியில் 125.3+ GeV எடை கொண்ட துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது 99.999% ஹிக்ஸ் போஸானாகத் தான் இருக்க வேண்டும் என்கிறார்கள்.

-இணையதள பத்திரிக்கையில் வெளியான செய்தி
இது குறித்து TimesNow வெளியிட்டுள்ள வீடியோ செய்தி
http://timesofindia.indiatimes.com/home/science/God-particle-CERN-Scientists-find-new-particle-probably-the-Higgs-boson/articleshow/14671907.cms

ஜெமினி பாலத்தில் பஸ் கவிழ்ந்த விபத்து!‎ உயிர்காக்கும் பணியில் உடனடியாக களம் கண்ட டிஎன்டிஜே



ஜெமினி பாலத்தில் பஸ் கவிழ்ந்த விபத்து!‎ உயிர்காக்கும் பணியில் உடனடியாக களம் கண்ட டிஎன்டிஜே கடந்த ஜூன் 27ஆம் தேதி புதன்கிழமை அன்று சென்னை ஜெமினி ‎மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த நகரப் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை ‎இழந்து ஜெமினி பாலத்தின் பக்கச் சுவர்களை இடித்துக் கொண்டு ‎பாலத்திலிருந்து 20அடி ஆழத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 39 ‎பயணிகள் காயங்களுடன் உயிர்தப்பினர். இந்த விபத்து நடந்த நேரத்தில் ‎அந்த வழியாக மண்ணடியிலிருந்து தி.நகருக்கு சவாரி ஏற்றிச் சென்ற ‎தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் உறுப்பினரான ஆட்டோ ஓட்டுனர் ரியாஸ் ‎அவர்கள் அந்த வழியாக தேனாம்பேட்டையை நோக்கிச் சென்று ‎கொண்டிருந்துள்ளார்.‎ ‎
பஸ் கவிழ்ந்து விழுந்த போது, அவரது ஆட்டோ அந்த பாலத்திற்கு கீழே ‎சென்று கொண்டிருந்துள்ளது. அல்லாஹ்வுடைய மிகப்பெரும் கிருபையால் ‎சில நொடிப் பொழுது வித்தியாசத்தில்தான் இந்த ஆட்டோவும், ஆட்டோவில் ‎சென்றவர்களும் வல்ல இறைவனால் பாதுகாக்கப்பட்டுள்ளனர்.
இவரது ‎ஆட்டோவிற்கு முன்புதான் பஸ் கவிழ்ந்து விழுந்துள்ளது. சில நொடிகள் ‎இவரது ஆட்டோ முன்னேறிச் சென்றிருக்குமேயானால் 20அடி ‎உயரத்திலிருந்து கவிழ்ந்து விழுந்த பேருந்து சரியாக இவரது ஆட்டோவின் ‎மீதுதான் விழுந்திருக்கும். அந்த வகையில் அல்லாஹ் இவருக்கு பேரருள் ‎புரிந்துள்ளான் என்றுதான் சொல்ல வேண்டும்.‎ ‎
பஸ் கவிழ்ந்து விழுவதை நேருக்கு நேராக ஆட்டோ ஓட்டும் பொழுது ‎பார்த்த ரியாஸ் அவர்களுக்கு பஸ் விழுந்த இடம் புகை மூட்டமாக காட்சிதர, ‎பேருந்திலிருந்து அலறல் சப்தங்கள் விண்ணைப் பிளக்க, தனது ஆட்டோவை ‎அந்த இடத்திலேயே நிறுத்திவிட்டு, சவாரி வந்தவர்களிடத்தில், “விபத்தில் ‎பாதிக்கப்பட்டவர்களை மீட்டு, அவர்களுக்கு உதவி செய்ய வேண்டிய கடமை ‎எனக்கு உள்ளது. எனவே நீங்கள் வேறு ஆட்டோ பிடித்து தி.நகருக்குச் ‎செல்லுங்கள்” என்று கூறி அவர்களை அனுப்பி வைத்துவிட்டு உடனடியாக ‎உயிர்காக்கும் உன்னதப் பணியில் குதித்துள்ளார் டிஎன்டிஜே உறுப்பினர் ‎ரியாஸ்.‎
ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்த முதல் நபர் :‎ ‎ 
உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்கு தனது தொலைபேசியிலிருந்து தகவல் ‎கொடுத்துள்ளார். விபத்து நடந்த உடனேயே ஆம்புலன்ஸுக்கு தகவல் ‎கொடுத்த முதல் நபர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.‎
ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து டிஎன்டிஜேவிற்கு தகவல் ‎பறந்தது:‎ ‎ 
ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து தமிழ்நாடு தவ்ஹீத் ‎ஜமாஅத்தின் மாநில நிர்வாகிகளுக்கு இந்தத் தகவலை உடனடியாக அவர் ‎தெரிவிக்க, மாநில நிர்வாகத்திலிருந்து உடனடியாக வடசென்னை மற்றும் ‎தென்சென்னை நிர்வாகிகளுக்கு தகவல் பறக்க, வடசென்னை மற்றும் ‎தென்சென்னை மாவட்ட நிர்வாகிகள் உடனடியாக விபத்து நடந்த இடத்திற்கு ‎அருகில் உள்ள கிளை நிர்வாகிகளுக்குத் தகவல் கொடுக்க 20நிமிடங்களில் ‎சம்பந்தப்பட்ட மாவட்ட மற்றும் கிளைகளின் நிர்வாகிகள் விபத்து நடந்த ‎இடத்தை முற்றுகையிட்டு உயிர்காக்கும் மீட்புப்பணியில் ரியாஸ் ‎அவர்களுடன் இணைந்து கொண்டனர்.‎
முதலில் தூக்கியது பேருந்து ஓட்டுனரைத்தான்:‎ ‎ 
தலைகுப்புற கவிழ்ந்திருந்த பேருந்தின் கதவுகள் அனைத்தும் ‎ஆட்டோமேட்டிக் லாக் மூலமாக பூட்டப்பட்டிருந்ததால் கதவை திறந்து ‎கொண்டு பயணிகளால் வெளியே வர முடியவில்லை.‎ ‎ 
ரியாஸ் அவர்கள் முதலில் டிரைவருடைய இருக்கைப் பகுதிக்குச் சென்று ‎பேருந்து ஓட்டுனரை தூக்கியுள்ளார். அவரது காலில் பலத்த அடிபட்டிருந்த ‎நிலையில் அவரது கையில் ஒன்றுக்கு இரண்டு செல்ஃபோன்கள் ‎இருந்துள்ளது.‎ ‎ 
உடனடியாக பேருந்துக்கு மேலே ஏறிய அவர் பேருந்தின் பூட்டப்பட்டிருந்த ‎கதவை உடைத்த பிறகுதான் பயணிகள் ஒவ்வொருவராக வெளியில் வர ‎ஆரம்பித்துள்ளனர்.
இவர்தான் பேருந்தின் கதவை உடைத்து அனைத்து ‎பயணிகளும் உடனடியாக வெளியே வர உதவியுள்ளார்.‎ ‎ 
அங்கிருந்த சில சகோதரர்களுடன் சேர்ந்து இவர் கணிசமான பயணிகளை ‎வெளியில் மீட்டெடுத்த பிறகுதான் விபத்து நடந்த அந்த இடத்திற்கு 108 ‎மற்றும் அப்போலோ மருத்துவமனையின் ஆம்புலன்ஸ்கள் வந்து ‎சேர்ந்துள்ளன.‎ ‎
விபத்து நடந்த இடத்திற்கு 20 நிமிடங்கள் வரைக்கும் எந்தக் காவல்துறை ‎அதிகாரிகளும் உடனடியாக வரவில்லை என்பதை வேதனையுடன் சொன்ன ‎ரியாஸ் அவர்கள், காவல்துறையினர் வந்தவுடன் அங்கு மீட்புப்பணி செய்து ‎கொண்டிருந்த சகோதரர்களை துரத்தியடித்ததுதான் வேதனையிலும் வேதனை ‎என்கின்றார்.‎ ‎ 
விபத்து நடந்ததை நேரில் பார்த்து, உடனடியாக ஆம்புலன்ஸுக்கு தகவல் ‎கொடுத்து, உயிர்காக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, தன்னலம் ‎பாராமல் சேவையாற்றிய டிஎன்டிஜேயின் உறுப்பினரான ஆட்டோ ஓட்டுனர் ‎ரியாஸ் அவர்களை அனைத்து மீடியாக்களும் பாராட்டியுள்ளன.‎ ‎ 
அவரது பேட்டியை முன்னணி தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் ‎அனைத்து பத்திரிக்கைகளும் முக்கியத்துவப்படுத்தி வெளியிட்டிருந்தன.‎ ‎ 
இவரது புகைப்படத்தோடு செய்தி வெளியிட்டு இவரது பேட்டியையும் ‎அனைத்து செய்தி சேனல்களும் ஒளிபரப்பிய போதும் இது குறித்து கருத்து ‎தெரிவித்த ரியாஸ் அவர்கள், “இந்த விபத்து நடக்கும் இடத்திற்கு குறிப்பிட்ட ‎நேரத்தில் என்னை அங்கு செல்ல வைத்து, பேருந்து என் ஆட்டோவின் மேல் ‎விழாமல் பாதுகாத்து, அந்த விபத்தில் சிக்குண்டவர்களது உயிர்காக்கும் ‎உன்னதப் பணியை செய்யும் வாய்ப்பை அல்லாஹ் எனக்கு வழங்கியதற்காக ‎வல்ல இறைவனுக்கு நான் நன்றி செலுத்து கின்றேன்.
இதற்கான ‎முழுமையான கூலியை வல்ல இறைவனிடத்தில் எதிர் பார்க்கின்றேன்” என்று ‎கூறி முடித்தார்.‎ ‎ 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வடசென்னை மாவட்டம் துறைமுகம் ‎கிளையின் உறுப்பினராக உள்ள முத்துப்பேட்டையைச் சேர்ந்த ரியாஸ் ‎அவர்கள் பிறமத அழைப்புப்பணி செய்வதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். ‎அழைப்புப்பணியில் இவர் காட்டும் ஆர்வம் குறித்து ஏற்கனவே உணர்வு 16:30 ‎‎(மார்ச் 23 – 30) இதழில் நாம் விளக்கியுள்ளோம்.‎ ‎ 
ஆட்டோ ஓட்டுனராக உள்ள ரியாஸ் அவர்கள் தனது ஆட்டோவை ‎ஏகத்துவ பிரச்சார வாகனமாக மாற்றிய செய்தியையும், கிறித்தவ விவாத ‎டிவிடிக்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக தனது ‎ஆட்டோவையே பிரச்சாரக் களமாக அவர் பயன்படுத்தி கிறித்தவ ‎பாதிரிமார்கள் மற்றும் கிறித்தவ சகோதரர்கள் மத்தியிலும், தனது ‎ஆட்டோவில் சவாரி வரக்கூடிய பிறமத சகோதரர்கள் மத்தியிலும் அவர் ‎செய்யும் பிறமத அழைப்புப்பணி குறித்து அந்த இதழில் விரிவாக விளக்கி ‎யிருந்தோம்.‎ ‎ 
இத்தகைய நிகழ்வுகளின் மூலம் இஸ்லாத்தைச் சரியான கோணத்தில் ‎விளங்கிக் கொண்ட வர்களான ஏகத்துவவாதிகள், தாங்கள் எங்கு சென்ற ‎போதிலும், தங்களது உயிர் மூச்சான இந்த அழைப்புப் பணியையும், ‎மறுமையில் மகத்தான நன்மைகளைப் பெற்றுத்தரும் மனித நேயப் ‎பணிகளையும் செய்வதிலேயே குறிக்கோளாக இருப்பார்கள் என்பது ‎தெளிவாகின்றது.‎ ‎ 
மேலும் இத்தகைய செயல்களை ஊக்குவிப்பதும், அதை செவ்வனே ‎செய்வதும், அதற்கு முதலிடம் கொடுத்து முக்கியத்துவம் அளிப்பதும்தான் ‎இந்த ஜமாஅத்தின் தலையாயப் பணி.
அதற்காகத்தான் இந்த ஜமாஅத் ‎மக்களுக்கு சேவையாற்றி வருகின்றது. மறுமை வெற்றி ஒன்றுதான் இந்த ‎ஜமாஅத்தின் குறிக்கோள் என்பதை அழுத்தம் திருத்தமாக இத்தகைய ‎நிகழ்வுகள் நிரூபித்து வருகின்றன. இத்தகைய நிகழ்வுகள் இந்த ஜமாஅத்தின் ‎நோக்கத்தை இன்னும் அழுத்தம் திருத்தமாக தெளிவுபடுத்துகின்றன.
இந்த ‎ஜமாஅத்தினரின் தன்னலம் பாராத இந்தப் பணி சிறக்கவும், இம்மை மறுமை ‎வெற்றியை நாம் பெறவும் எல்லாம் வல்ல இறைவனிடம் ‎பிரார்த்திக்கின்றோம்.‎ அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.‎

பா.ஜ.கவுடன் கைகோர்த்த ம.ம.கட்சி!‎



அதிமுகவின் சிறுபான்மைப் பிரிவாக செயல்படுவதிலிருந்து விலகி, பா.ஜ.கவின் ‎சிறுபான்மைப் பிரிவாக மாறி அவர்களுடன் கூட்டணி வைக்க திட்டமா?‎ – வெளிவராத உண்மைகள்!!‎
மாமல்லபுரத்தின் மைய பகுதியில் அமைந்துள்ளது தலசயன பெருமாள் கோயில். ‎இதை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கும் முடிவை தொல்லியல் துறை ‎எடுத்துள்ளது. இந்தக் கோவிலை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கக்கூடாது. ‎அவ்வாறு அறிவித்தால் அந்தக் கோவிலில் நடக்கக்கூடிய பூஜைகள் தடைபட்டுவிடும்; ‎அதுமட்டுமல்லாமல் அங்கு பூஜை செய்ய வரக்கூடிய பக்தர்கள் இதனால் ‎பாதிக்கப்படுவார்கள் என்று சங்பரிவாரங்கள் கூப்பாடு போட்டு வருகின்றனர்.‎
ஏற்கனவே 6 ஆம் நூற்றாண்டில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட பழைய ‎அலைவாயில் கோவில் மத்திய தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் பூஜைகள் ‎இன்றி பாழடைந்து கிடக்கும் நிலையில், 14ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டு பலமுறை ‎புதுப்பிக்கப்பட்டு பக்தர்களின் அனுதின வழிபாட்டில் உள்ள கீர்த்திக்குரிய தலசயன ‎பெருமாள் கோவிலை மத்திய தொல்பொருள் துறை தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் ‎கொண்டுவர கடந்த 20.05.2012 அன்று தேதியிட்ட நாளிதழ்களில் விளம்பரப்படுத்தி ‎உள்ளது. இந்தக் கோவிலை மத்திய தொல்பொருள் துறை எடுத்துக் கொள்ள ‎முயற்சிப்பது வன்மையான கண்டனத்திற்கு உரியது” என்று இந்த கோவிலுக்கு ‎ஆதரவாக கண்டன அறிக்கை விட்டு வருகின்றனர்.‎
பக்தியின் அடிப்படையில் இவ்வாறு அவர்கள் அறிக்கை விடுவது மேலோட்டமாக ‎அணுகக் கூடிய விஷயம் அல்ல, பழமையான ஆலயங்களை பழமையான ‎கட்டடங்களைப் பாதுகாக்க இந்த நாட்டில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அந்தச் ‎சட்டத்தின்படி இவ்வளவு காலம் கடந்து விட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ‎கட்டடங்களை தொல் பொருள் துறை எடுத்துக் கொள்ளலாம் என்ற சட்டத்தின் படியே ‎ஏராளமான கோவில்களும் சில பள்ளிவாசல்களும் இன்னும் பல புராதனக் ‎கட்டடங்களும் மத்திய அரசின் தொல் பொருள் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி ‎வருகின்றன.‎
இப்படி ஒரு சட்டம் இருப்பது நமக்கு உடன்பாடானது அல்ல. பழைய கட்டடங்களை ‎பாதுகாக்கிறோம் என்ற பெயரில் மக்களின் கோடான கோடி ரூபாய்கள் பாழாக்கப்படு ‎கின்றன. பழைய கட்டடங்களை இடிப்பது அல்லது அதுவாக விழும் வரை ‎விட்டுவிடுவதுதான் இந்தியா போன்ற ஏழை நாடுகளுக்கு நல்லது. இதுதான் ‎அறிவுப்பூர்வமானது.‎
ஆனால் இந்தச் சட்டம் இருக்கும் வரை அதற்கேற்ப நடவடிக்கை இருந்து ‎கொண்டுதான் இருக்கும்.‎
இந்து பக்தர்கள் போராடுவதாக இருந்தால் அந்த சட்டத்தை நீக்கக் கோரி போராட்டம் ‎நடத்துவதை விட்டு விட்டு சட்டப்படி ஒரு கோயிலை புராதனச் சின்னமாக ‎அறிவிப்பதை எதிர்ப்பது பயனற்றதாகும். ஆனாலும் அவர்கள் பக்தியின் பெயரால் ‎இப்படி செய்வதில் நமக்கு ஏதும் பாதிப்பு இல்லை.‎
ஆனால் வேலூர் கோட்டையில் உள்ள பள்ளிவாசலை தொல்பொருள் துறை எடுத்துக் ‎கொண்டுள்ளது. அது போல் அதே கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் ‎ஆலயத்தையும் எடுத்துக் கொண்டுள்ளது.‎
ஆனால் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் இந்து பக்தர்கள் பூஜை செய்ய அனுமதிக்கப் ‎படுகிறது. ஆனால் பள்ளிவாசலில் தொழுகை நடத்த அனுமதி இல்லை. இதை எதிர்த்து ‎தவ்ஹீத் ஜமாஅத் உட்பட பல அமைப்புகள் போராட்டங்கள் நடத்தியுள்ளன. ‎தமுமுகவும் போராட்டம் நடத்தியது. அப்போது இந்துத்துவா இயக்கங்கள் ‎பள்ளிவாசலை வழிபாட்டுக்கு திறந்து விடக் கூடாது என்று எதிர்ப்போராட்டம் ‎நடத்தின.‎
அப்படி இருக்கும் போது அதைக் கூட கவனத்தில் கொள்ளாமல் மானம் சூடு ‎சொரணை அனைத்தையும் வந்த விலைக்கு விற்ற ம.ம.கட்சி ஜால்ரா மன்னன் செய்த ‎வேலை ம.ம.கட்சியினருக்கே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் ‎அடிக்கும் ஜால்ரா பற்றி மாபெரும் மக்கள் வெள்ளத்தில் தோலுரித்துக் காட்டப்பட்ட ‎பின்னர் சூடு சொரணை இல்லாதவனை அல்லாஹ் பார்க்க மாட்டான் என்று ‎ஆதாரத்துடன் சுட்டிக்காட்டிய பிறகும் ஜால்ரா தலைவருக்கு ரோஷம் வந்து கொஞ்சம் ‎சமுதாய உணர்வோடு நடப்பார் என்று ம.ம.கட்சியின் தொண்டர்கள் எதிர்பார்த்தனர்.‎
சங்பரிவாரத்துடன் இணைந்து கொண்டு ஜால்ரா மன்னன் ஜவாஹிருல்லாவும் ‎களத்தில் குதித்து தான் ஒரு மானம் கெட்ட ஜென்மம் என்பதை நிரூபித்துக் காட்டி ‎விட்டார்.‎
மேலே உள்ள புகைப்படத்தில் பிஜேபியின் மூத்த தலைவர் இல.கணேசனுடன் ‎கையோடு கைகோர்த்து போஸ் கொடுப்பது யார் என்று தெரிகின்றதா?‎
அட! நம்ம ம.ம.கட்சியின் வாத்தியார்தாங்க. இப்போது பிஜேபியுடன் புதிய கூட்டணி ‎அமைத்துள்ளார்கள் போலும்.‎
கடந்த 28.06.12 அன்று தலசயன பெருமாள் கோயிலை தொல்லியல்துறை ‎கையகப்படுத்தக்கூடாது என்று கூறி அதைக் கண்டித்து நடைபெற்ற தொடர் முழக்க ‎போராட்டத்தில்தான் இந்த கேவலமான இழிசெயலை இவர் செய்துள்ளார். ‎இஸ்லாமியர்களை கருவறுக்க வேண்டும் என்ற கொள்கையுடையவர்களுடன் ‎அவர்களது கொள்கை நிலைபெற வேண்டும் என்பதற்காக கூட்டுச் சேர்ந்து ‎கைகோர்த்து இவர்கள் போஸ் கொடுக்கின்றார்கள் என்றால் இந்த சமுதாய ‎துரோகிகளை என்ன செய்வது?‎
நரேந்திர மோடி வந்து இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தாலும் ‎அவனுடனும் இந்த சமுதாய துரோகி கைகோர்த்து இருப்பார் என்பதுதான் மறுக்க ‎முடியாத உண்மை. அந்த அளவிற்கு இவர்களுக்கு பதவி சுகம் தேவைப்படுகின்றது.‎
வாத்தியார் பா.ஜ.க வின் பினாமியா?:‎
பா.ஜ.க விடுக்கும் கோரிக்கையை நமது மானம்கெட்ட வாத்தியார் ஏன் வழிமொழிய ‎வேண்டும். அவர் என்ன பா.ஜ.க வின் பினாமியா?. அநேகமாக வரக்கூடிய ‎பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து தேசிய நீரோடையில் ‎கலக்க திட்டம் தீட்டியுள்ளார்களோ என்னவோ தெரியவில்லை.‎
அம்மாவை குளிர்விக்க எந்த தியாகம் வேண்டுமானாலும் செய்யத் தயார் :‎
ஒருவேளை அம்மாவுக்கு ஜால்ரா தட்டும் இந்த ஜால்ரா மன்னன், பா.ஜ,கவுடன் நாம் ‎நெருங்கினால்தான் அம்மா அவர்கள் மனம் குளிரும். அதனால் பா.ஜ.கவுடன் நாம் ‎நெருக்கமாகிவிடலாம் என்று களத்தில் குதித்துவிட்டாரோ என்னவோ தெரியவில்லை.‎
இப்படிக் கேவலப்படும் நிலையை அல்லாஹ் இவர்களுக்கு ஏற்படுத்திவிட்டான்.‎
இவர்களது இந்த செய்கையின் வாயிலாக எந்த அளவிற்கு கேவலாமான ‎வேலையையும் தாங்கள் செய்யத் தயார் என்பதைத்தான் இந்த சமுதாய துரோகிகள் ‎அடையாளம் காட்டியுள்ளனர்.‎
கொள்கைதான் இல்லை. மற்றவர்கள் திட்டுகின்றார்களே என்ற வெட்க ‎உணர்விலாவது இது போன்ற கேடுகெட்ட செயல்களை செய்யாமல் ‎தவிர்க்கலாமல்லவா? அந்த வெட்க உணர்வையும் இவர் உதிர்த்து விட்டார் என்றால் ‎இனிமேல் இவரை எதைச் சொல்லி, என்ன சொல்லி திட்டுவது? எருமை மாட்டின் மேல் ‎மழை பெய்தது என்ற பழமொழிதான் இங்கு ஞாபகம் வருகின்றது.‎
இந்த ஜனாஸாவின் அட்டகாசமும், அட்டூழியமும் தாங்க முடியவில்லை. ‎இப்போதுதான் ஓராண்டு முடிந்துள்ளது. இன்னும் 4ஆண்டுகள் பாக்கி உள்ளன. ‎அதற்குள் இன்னும் என்னவெல்லாம் செய்யப்போகின்றதோ இந்த ஜனாஸா? இந்த ‎ஜனாஸாவிடத்திலிருந்து இந்த சமுதாயத்தை அல்லாஹ்தான் பாதுகாக்க வேண்டும்.‎
பாஜகவுக்கு ஜால்ரா அடிப்பது இது முதல் முறை அல்ல பாஜகவின் ஏஜெண்டாக ‎இவர்கள் செயல்பட்ட பல சம்பவங்கள் உள்ளன. ஓரிரு சம்பவங்களை மட்டும் இங்கே ‎சுட்டிக்காட்டுகின்றோம். ‎
• பாபர் மசூதி விஷயத்தில் அலகாபாத் உயர்நீதிமன்றம் கூறிய கட்டப்பஞ்சாயத்து ‎தீர்ப்பை அற்புதமான தீர்ப்பு என்று கூறி வரவேற்று அறிக்கை வெளியிட்டது

• இடஒதுக்கீட்டில் இழைக்கப்படும் துரோகத்தை ஆதரித்து அதற்கு முட்டுக் ‎கொடுத்து ஆளுங்கட்சிக்கு ஜால்ரா தட்டி, முஸ்லிம்களை கருவறுக்கும் வேலையை ‎கையில் எடுத்திருப்பது

• இராமேஸ்வரத்தை புனித நகரமாக அறிவிக்கச் சொல்லி கோரிக்கை வைத்தது

இது போன்ற சம்பவங்களுடன் தற்போது இல.கணேசனுடன் உற்சாகத்தோடு‎கைகோர்த்து போஸ் கொடுத்திருப்பதையும் இணைத்தால் இவர்தான் தமிழகத்தின் ‎ஏஜெண்டாக இருப்பாரோ! என்ற சந்தேகம் வலுப்பெறுகின்றதா? இல்லையா?‎
-TNTJ.NET
 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்