Tuesday, July 12, 2011

அறிஞர் பீ.ஜெ. அவர்களின் வரலாறு, தொடர் - 3

அறிஞர் பீ.ஜைனுல் ஆபிதீன் - பன்முக ஆளுமையும் தஃவாப் பணியும்
தொடர்-3
எம்.ஏ.ஹபீழ் ஸலபி,இலங்கை.
 
 
இரண்டாவது தொடரில் முபாரக் மதனி கூட்டம் சவூதி முப்திகளை மார்க்கத்தின் அதாரடிகளாக நினைத்து பீஜே பற்றி கிபாருல் உலமாக்களுக்கு இவர்கள் எழுதிய கடிதம் தொடர்பாகப் பார்த்தோம்.சவுதி அரசாங்கம் அறிஞர் பீஜே அவர்களை கவ்ரவ விருந்தினராக அழைத்த போது,அதற்குப் பீஜே எழுதிய பதில் கடிதம் உண்மையில் அவரின் உன்னதமா பணிகளைப் பற்றி கிபாருல் உலமா அறிந்து கொள்ள வாய்ப்பாக அமைந்தது.

எனினும்,அக்கடிதத்தில் முபாரக் மதனிக் குழு குறிப்பிடும் பல விடயங்களில் முபாரக் மதனியே முரண்பட்டுள்ளார். ஆதாரபூர்வமானதாக இவர்கள் நம்பும் ஹதீஸ்களை பீஜே மறுக்கின்றார்.அதனால், இவர் முஃதஸிலாக் கொள்கையுடையவர் என வாதிடும் இவர், அதே வேலையை தனது முதல் மொழிபெயர்ப்பு நூலிலேயே ஆரம்பித்துள்ளார்.
 
சவூதி நாட்டைச் சேர்ந்த கலாநிதி ஸாலிஹ் பின் பவ்ஸான் அல் பவ்ஸான் என்பவர் கிதாபுத் தவ்ஹீத் என்று எழுதிய அறபி நூலை முபாரக் மதனி மொழிமாற்றம் செய்தார். தமிழில் இதுதான் தவ்ஹீத் என்ற தலைப்பில் ஸவூதி அரேபியர் ஒருவரின் நிதி உதவி மூலம், இலங்கையிலுள்ள அன்ஸாருஸ் சுன்னா முஹம்மதிய்யா (20.05.2000) அன்று இலவசமாக வெளியிட்டது.
இம்மொழிபெயர்ப்பில் ஸஹீஹான ஹதீஸை காரணமின்றி இருட்டடிப்புச் செய்து, மறுத்துள்ளார் முபாரக் மதனி .இது, கிதாபுத் தவ்ஹீத் என்ற  நூலில் 76ம் பக்கம் இடம் பெற்றுள்ளது.

கலாநிதி ஸாலிஹ் பின் பவ்ஸான் அல் பவ்ஸான் என்பவரின் கிதாபுத் தவ்ஹீத் மூலத்தையும் இவர்களின் இருட்டடிப்பு மொழிபெயர்ப்பையும் இதோ தருகின்றோம்.

عروة بن مسعود لقريش  وقال عروة بن مسعود لقريش : يا قوم واللّه لقد وفدت إلى كسرى وقيصر والملوك فما رأيت ملكا يعظمه أصحابه ما يعظم أصحاب محمد محمدا صلى الله عليه وسلم ، واللّه ما يحدون النظر إليه تعظيما له ، وما تنخم نخامة إلا وقعت في كف رجل منهم فيدلك بها وجهه وصدره ، وإذا توضأ كادوا يقتتلون على وضوئه . انتهى (1)

உர்வா பின் மஸ்ஊத் என்பவர் குறைஷிகளைப் பார்த்து ‘நான் ரோம்,பாரசீக மன்னர்களிடமும் இன்னும் பல அரசர்களிடமும் தூதுக் குழுக்களோடு சென்றிருக்கின்றேன். ஆனால்,முஹம்மத்(ஸல்)அவர்களை அவர்களது தோழர்கள் மதிப்பது போன்று அவர்கள் எவரையும் அவரது தோழர்கள் மதிப்பதை நான் காணவில்லை. நபி(ஸல்) அவர்கள் மீது அவர்கள் வைத்திருக்கும் மரியாதையால் எப்போதும் அவர்களை உற்று நோக்கியவர்களாகவே அவர்களது தோழர்கள் இருக்கிறார்கள்’  என்று கூறினார்.(இருட்டடிப்பைப் பார்க்க பக்கம்:129)

பீஜேவுக்கு எதிராக வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கும் இவர் வேண்டுமென்றே நீண்ட வாக்கியத்தையே விட்டு விட்டு மொழிபெயர்த்துள்ளார். ஒரு பெரிய வாக்கியமே நடுவில் உருவி எடுக்கப்படுவது தற்செயலாக நடந்திருக்குமா?
அரபியையும் இவர்களது இருட்டடிப்பையும் பாருங்கள்.

وما تنخم نخامة إلا وقعت في كف رجل منهم فيدلك بها وجهه وصدره ، وإذا توضأ كادوا يقتتلون على وضوئه . انتهى (1
 
மேலே உள்ள பகுதியை அப்படியே மறைத்து,இருட்டடிப்புச் செய்துவிட்டார்கள்.

அதன் தமிழாக்கத்தைப் பாருங்கள். ‘நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காரி உமிழ்ந்தால், அது கீழே விழாது. யாருடைய கையிலாவது தான் விழும். 
(அதாவது அந்தச் சளி கீழே விழாமல் ஒவ்வொருவரும் கையை நீட்டி அதைப் பெற முயல்வார்களாம்) யார் கையில் அது விழுந்ததோ அதன் மூலம் தமது முகத்திலும் நெஞ்சிலும் அதைத் தடவிக் கொள்வார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உளுச் செய்தால் அந்தத் தண்ணீருக்காக சண்டையிட்டுக் கொள்வார்கள்.
 
இவ்வளவு பெரிய வாக்கியம் கவனக் குறைவால் விடுபட்டிருக்க முடியுமா?
 
இது புகாரியில் இருந்தாலும் இது சரியானதாக இருக்க முடியாது என்று இவரின் ஆழ் மனது கூறியதால் இவர் இந்த இருட்டடிப்புச் செய்திருந்தால் இவரின் உள் மனதும் குர்ஆனுக்கு முரணான ஹதீஸ்களை ஏற்கக் கூடாது என்பதைத் தானே சொல்கிறது.
 
குர்ஆனுக்கு மாற்றமான இது போன்ற செய்திகள் புகாரியில் இருந்தாலும் இதை நம்பக் கூடாது என்று இவரின் மனசாட்சி கூறியிருக்கிறது.
இதை பீஜே வெளிப்படையாக எடுத்துக் காட்டி, இச் செய்தி தவறு என்று கூறுகிறார்.
 
முபாரக் மஸ்வூத் லெப்பை போன்றவர்கள் அதை மக்கள் காதுகளுக்குப் போகாமல் மறைக்க எண்ணுகின்றனர்.  ஆதாரப்பூர்வமான செய்தியில் அந்தச் செய்தியின் ஹைலைட்டாக இருக்கும் வாக்கியத்தை மறைத்து, மோசடி செய்து விட்டு, பத்வாக் கேட்டு சவூதி முப்திகளுக்குக் கடிதமும் எழுதுகின்றார்.
 
இவர்கள் மறைத்தாலும் ரஹ்மத் டிரஸ்ட் வெளியிட்ட புகாரி தமிழாக்கத்தின் மூலம் இது மக்களை அடையுமே  அப்போது எதைப் போட்டு மூடுவார்கள்? புகாரியைத் தடைசெய்யச் சொல்லி யாருக்கு எழுதப் போகின்றார்கள்?
 
ஒரு விடயம் இவர்களது அறிவுக்கு புரியவில்லை என்றால், மறுத்து, மறைத்து, இருட்டடிப்புச் செய்வார்களாம். பீஜே நியாயமான காரணம் குறிப்பிட்டால், பத்வாக் கேட்டு அவமானப்படுவார்களாம்.
 
இவர்கள் வாதப்படி ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை இருட்டடிப்புச் செய்வது, நபித்துவத்தை மறுப்பதற்குச் சமனானது. எந்தவித நியாயமுமின்றி அந்த வேலையைத்தானே செய்துள்ளார்.
 
மக்களே! இவர்களை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.
 
கலாநிதி பவ்ஸான் அவர்கள் மூலத்தில் குறிப்பிட்டுள்ளதையே இவர்கள் இருட்டடிப்புச் செய்துள்ளதால், இவர்கள் ஏனைய விடயங்களில் எவ்வளவு இருட்டடிப்புச் செய்வார்கள் என்பதைக் கொஞ்சம் நிதானமாக சிந்தித்துப் பாருங்கள்.
 
பீஜேவை விமர்சிப்பதற்கு இவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது?இவர்கள் விமர்சிப்பதிலும் நேர்மையற்றவர்கள் என்பதற்கு இதே பெரிய ஆதாரமாக உள்ளது.

வித்தியாசமான பண்புக் கூறுகள்
அறிஞர் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்களின் எழுத்துக்களையும் உரைகளையும் ஆழ்ந்து நோக்கும் போது, அரபு, ஆப்ரிக்க, ஐரோப்பிய, ஆசிய நாடுகளில் அவ்வப்போது சில துறைகளில் மட்டும் சீர்திருத்தப் பணிகளை மேற்கொள்ள முனைந்தவர்களையோ, அரசியல் அதிகார வீச்சுக்கு முக்கியத்துவம் அளித்து, நபி வழியை விட்டு விலகி, கிலாபத் கனவு கண்ட இயக்கவாதிகளையோ அவர் பின்பற்றவில்லை என்பது மிகத் தெளிவாகத் தெரிகின்றது. ஏனெனில், மற்றவர்களின் சாயல் படியாத தனித்துவமான பண்புக் கூறுகளுடையதாக பீஜேவுடைய எழுத்தும் பேச்சும் காணப்படுகின்றன. அவரது தஃவா அணுகுமுறையும் அவர்களிலிருந்து வேறுபாடுடையதாக உள்ளது. 

இவைகள்தான் அவரை வேகமாக முன்னணிக்குக் கொண்டு வந்த பின்னணிகள் என்று கூட கருத வாய்ப்புள்ளது.

இந்த ஒப்பீடு மற்ற அறிஞர்களது பணியைக் குறைத்து மதிப்பிடுவதற்கான முயற்சியாக யாரும் தவறாக அர்த்தப்படுத்திவிடக் கூடாது. ஆனால், பீஜேவுடைய பணி பன்முகத் தன்மையுடையது என்பதை மறுக்க முனைபவர்களுக்கும் ஏற்கத் தயங்குபவர்களுக்கும் தக்க பதிலைப் பதிவு செய்ய நான் கடமைப்பட்டுள்ளேன்.

மிகக் குறுகிய காலத்தில் மிகப் பெரிய மக்கள் சக்தி மிக்க இயக்கமாக அவர் உருவாக்கிய தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், சமய மற்றும் சமுதாயப் பிரச்சினைகளில் மக்கள் நலனை மையப்படுத்திப் போரடுவதிலும் முஸ்லிம்களின் உரிமையை விட்டுக் கொடுக்காமலிருப்பதிலும் மிக முக்கிய அங்கமாக உள்ளது. அதனது தொடர் போராட்டத்தில் அது அடைந்த முஸ்லிம்களுக்கான தனி இட ஒதுக்கீடு, தமிழக வரலாற்றில் ஒரு மைல்கல் எனலாம். அதேவேளை, அவர் ஒதுக்கிவிட்டு வெளியேறிய இயக்கங்கள் வெறிச்சோடிக் கிடப்பதையும், அவர் உருவாக்கிய தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்  வீரியம் பெறுவதையும் அதன் அதிர்வுகள் இந்தியாவிற்கு வெளியேயும் வேகமாக செல்வாக்குச் செலுத்தி வருவதையும் அவதானிக்க முடிகிறது. இது பல இயக்கங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தனிநபர் தாக்ககுதலை ஆரம்பித்துள்ள இவர்களின் நடவடிக்கைகள் இதை மேலும் உறுதிப்படுத்துகின்றன.

எனினும், அவர் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சமகால அரசியல், பொருளியல், சமய, சமூகப் பிரச்சினைகளுக்கு இஸ்லாத்தின் மூலாதாரங்களான அல்குர்ஆன், ஹதீஸ் என்பன மட்டும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் முன்வைக்கும் காத்திரமான தீர்வை, ஆழமான ஆய்வுத் தேடலினடியாய்க் கிட்டும் அதன் முடிவுகள் மூலம் தானாக முகம் கொடுக்கின்றார். மக்களுக்கு விரிந்த தெளிவை வழங்கும் ரமழான் மாத தொடர் சொற் பொழிவை இதன் மணிமகுடமாக நோக்க முடியும். அவரது இத்தொடர் சொற்பொழிவுகள் மிகப் பெரிய ஆய்வுப் பரிமாணம் கொண்டவைகள்.

இந்த வகையில் நோக்கும் போது, நவீன பிரச்சினைகளுக்குரிய பல்துறை சார்ந்த சிக்கல்களுக்கு அவர் நல்ல பல தீர்வுகளையும் தீர்ப்புக்களையும் வழங்கியுள்ளார். ஒரு புதிய பிரச்சினை தலை தூக்கும் போது, இது பற்றி பீஜே என்ன கருத்துச் சொல்லியுள்ளார் என்று அவரை எதிர்ப்பவர்கள் கூட ஆவலுடன் கூர்ந்து அவதாணிக்கும் நிலையை அவரது காத்திரமான பத்வாக்கள் கனதியான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன.

உலக அதிசயங்களைப் பற்றி பெரும்பாலானோர் அதிசயத்தில் இருந்த போது, உலக அதிசயம் எது? என்று அவர் ஆற்றிய உரை  விழிப்புருவங்களையும் வியப்படைய வைத்தது.அவரை எதிர்ப்பவர்கள் கூட இவ்வுரையைக் கேட்டு விட்டு எப்படி அவரால் மட்டும் இவ்வாறு வித்தியாசமாக சிந்திக்க முடிகிறது என்று என்னிடம் வியந்த பல சந்தர்ப்பங்கள் உண்டு. உலக அதிசயம் எது? என்ற உரை ரியாதிற்கு வரத் தாமதமானதும் எத்தனை பேர் அதை விரைவாக அழைப்பித்துத் தாருங்கள் என்று ஜாலியாத் மவ்லவிமார் உட்பட பலர் பல முறை முறையிட்டதை நான் ரியாத் மண்டலத்தில் அவதானித்தேன்.

இந்நிகழ்வுகள் எல்லாம் அவரது சிந்தனைகளும் பத்வாக்களும் காத்திரமான சுதந்திர சிந்தனைப் பள்ளிக்கு உரிமை கோரக் கூடியனவாக இருக்கின்றன என்பதைப் பட்டவர்த்தனமாகப் புலப்படுத்துகின்றன. எனவே, பழைமைவாதிகளால் இதைப் பொறுத்துக் கொள்ளவும் புரிந்து கொள்ளவும் முடியவில்லை.அதனால், அவர்கள் பொறாமைப்பட ஆரம்பித்து, நிலை தடமாற்றத்திற்கு ஆளாகிவிடுகின்றனர். இவ்வாறு தடம்புரண்டவர்களின் தடையங்களும் அவ்வப்போது இதில் அடையாளப்படுத்தப்படும்.

நவீன பிரச்சினைகளுக்கும் சவால்களுக்கும் இஸ்லாமிய மூலாதார  ஆழியில் ஆய்வினடியாய் அவர் எடுத்து வைக்கும் காத்திரமான தீர்வுகள், அல்குர்ஆன் – சுன்னா என்பனவற்றின் மீதுள்ள அவரின் உறுதியான நம்பிக்கையையும் அவற்றில் அவருக்குள்ள விரிந்த புலைமையையும் உறுதிப்படுத்துகின்றன.
 
இஸ்லாத்தின் மீது வசைபாடுவோர் சார்ந்து நிற்கும் மாற்று மதங்களின் உறுதியற்ற நிலை பற்றிய தெளிவான பார்வையும் அவருக்கு உண்டு. இதற்கு நிறைய ஆதாரங்களைத் தரமுடியும். இவை பற்றி மத ஒப்பீட்டாய்வு பற்றிய அவரது பங்களிப்பு எனும் பகுதியில் விரிவாகப் பேசவுள்ளேன். இப்போது, ஓர் உதாரணத்தை இங்கு சுட்டிக்காட்ட ஆசைப்படுகின்றேன்.
 
சில வருடங்களுக்கு முன்னர் ‘வுhந டீiடிடந யனெ ஞரசயn’ எனும் தலைப்பிட்டு நியூஸ் வீக் வார இதழ் ஒரு கட்டுரை வெளியட்டது. அதில், ‘பைபிளும் – அல் குர்ஆனும் ஒரே செய்தியைத் தான் சொல்கின்றன. இரண்டுமே கடவுளின் தூதர்களைப் பற்றியும் மீட்சியைப் பற்றியும் நரகத்தைப் பற்றியும் தான் பேசுகின்றன. இவ்வாறு இரண்டிற்கும் ஒற்றுமை இருக்க மதத்தின் பெயரால் போராட்டம் ஏன்?’ என்று ‘நியூஸ் வீக்’ இதழில் அல்குர்ஆனையும் – பைபிளையும் ஒப்பிட்டு சில தவறான கேள்விகளை எழுப்பி ஒரு கட்டுரையை வெளிளிட்டது.
 
அந்தக் கட்டுரையிலிருந்து சில பகுதிகளைத் தருகின்றோம். படித்துவிட்டு அதற்கான பீஜேவுடைய பதிலைப் படித்துப்பாருங்கள். நாம் மேலே குறிப்பிட்ட உண்மைக்கு இது ஓர் உதாரணமாகிவிடும்.
 
‘பைபிளைப் போலவே, குரானிலும் தெய்வீக அதிகாரம் வலியுறுத்தப்படுகிறது. ஆனால், தெய்வீக அருள் பெற்ற மனிதர்கள்தான் பைபிளை எழுதினார்கள் என்று யூதர்களும், கிறித்தவர்களும், கருதுகிற போது, அல்லாஹ்வின் நிரந்தரமான வார்த்தைகளாகவே குரானை முஸ்லிம்கள் நினைக்கிறார்கள். குரான் என்றால் ஒப்பித்தல் என்று அர்த்தம். ஆக, கடவுளின் சொற்களை வெளிப்படுத்த முஹம்மத் ஒரு கருவியாக இருந்திருக்கிறார்; அவராக அவற்றை உருவாக்கவில்லை. மேலும், முஹம்மதுவிடம் கடவுள் பேசிய மொழி அரபி, ஆதலால், குரானின் மொழிபெயர்ப்புகள், கடவுளின் அசல் உரைகளுக்கு விளக்க உரைகளாகவே கருதப்படுகின்றன.
 
பைபிளைப் படிக்கிறவர்கள், ஆபிரகாம், மோஸஸ், டேவிட், ஜான் த பாப்டிஸ்ட், ஜீஸஸ் – ஏன், கன்னிமேரி ஆகிய பெயர்களைக் குரானிலும் பார்க்கலாம். ஆனால், இவர்களைப் பற்றிய செய்திகள் பைபிளில் இருப்பதற்கு முற்றிலும் மாறுபட்டவை. குரானில், தேவ தூதர்கள் எல்லோருமே முஸ்லிம்கள், உதாரணமாக, ஆபிரகாம் (இப்ராஹீம்), முதல் முஸ்லிம் ஆகக் கருதப்படுகிறார். ஏனெனில், அவர் தமது தகப்பனாரின் மதத்தை ஏற்காமல் அல்லாஹ்வைச் சரண் அடைந்தார்; அவருடைய பெயரும் பைபிளில் குறிப்படப்படவில்லை. இஸ்லாமிய புனிதத் தலமான மெக்காவில் அவர் காபா கட்டிய குறிப்பும் இல்லை. குரானில் பேசப்படும் மூஸா பைபிளில் வரும் மோஸஸ் போல இருக்கிறார். பெற்றோருக்குப் பணிந்து நடக்க வேண்டும் என்பது திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது. குரானில் வரும் ஈஸா, பைபிளில் வரும் ஜீஸஸ் போன்றே சித்தரிக்கப்பட்டிருக்கிறார். மெக்காவில் முஹம்மதுவை முதலில் மக்கள் நிராகரித்து அலட்சியம் பண்ணியது போலவே அவரையும் வெறுத்திருக்கிறார்கள். ஆனால், ஏசு கடவுளின் குழந்தை என்ற கிறிஸ்தவர்களின் கூற்றை குரான் ஏற்கவில்லை. சிலுவையில் ஏசு அறையப்பட்டதைக் கூட மேலோட்டமாகத்தான் சொல்லுகிறது. ஆனால், குரானின்படி ஏசுபிரான் மர்மமான முறையில் இறக்கவில்லை.அல்லாஹ் அவரை சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்கிறார்!
 
அரசியல் ரீதியாக, மேற்கத்திய நாடுகளில் தற்போதைய நிலை குரானுக்கு எப்படித் தவறாகச் சிலர் அர்த்தம் கற்பிக்கிறார்கள் என்பதுதான். குரான் ஒரு ஒன்றுபட்ட முஸ்லிம் சமுதாயத்தைப் பற்றிச் சொல்லுகிறது. ஆனால், சரித்திரத்தைப் பார்த்தால், மதரீதியான அதிகாரத்துக்கும், இஸ்லாமிய அரசுகளுக்கும், தொடர்ந்து போராட்டம் இருந்து வருவது தெரியும். ஒரு காலத்தில் குரானில் அடிப்படையில் நடுவர்கள் தீர்ப்பளித்து வந்தார்கள். இன்றைய இஸ்லாமிய நாடுகளைப் பொறுத்த வரை அதிகாரப்பூர்வமான மதத் தலைமையின் கருத்துக்களுக்கு முழுதுமான மதிப்பும், அங்கீகாரமும் கிடைப்பதில்லை.
 
எல்லா நாடுகளிலும் உள்ள மதவாதிகளைப் போலவே, முஸ்லிம்களும் தமது விதண்டாவதங்களுக்கு எல்லாம் அல்குர்ஆனை ஆதாரம் காட்ட ஆரம்பித்து விடுகிறார்கள். தங்களுக்குச் சாதகமாக இவற்றைக் கூற ஆரம்பித்து விடுகிறார்கள். உஸாமா பின் லாடன் அவர்களில் ஒருவர் எனக் கூறலாம்.’
 
மேற்கண்ட ‘நியூஸ் வீக்’ இதழின் தவறான கருத்துப் பற்றி அறிஞர் பீ.ஜைனுல் ஆபிதீனிடம் கல்கி வார இதழ் நிருபர் சித்தார்த் பேட்டி எடுத்தார். இது மத ரீதியான போராட்டம் அல்ல!’பைபிளும் – அல் குர்ஆனும் அடிப்படையில் ஒன்றல்ல என்பதை அவர் ஆணித்தரமாக நிறுவினார்.
 
(‘பைபிளிலும், திருக்குர்ஆனிலும் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களில் அடிப்படையாகவே பல வேறுபாடுகள் உண்டு.
 
  1. கடவுளுக்கு மனைவி, மக்கள் இல்லை. இது இஸ்லாத்தின் அடிப்படை. ஆனால், கிறிஸ்தவம் ஏசுவை கடவுளின் குமாரர் என்கிறது.
  2. கிறித்துவம் பிதா – சுதன் – பரிசுத்த ஆவி என்ற திரித்துவத்தைச் சொல்கிறது.
  3. மனிதன் பாவியாகவே பிறக்கிறான் என்று பைபிள் சொல்கிறது. ஆனால் ஒரு பாவமும் அற்றவனாகப் பிறக்கிறான் என்று இஸ்லாம் சொல்கிறது.
  4. எல்லோருடைய பாவங்களையும் சுமந்து கொள்வதற்காக ஏசு தன்னைத்தானே சிலுவையில் பலியாக்கிக் கொண்டார் என்று கிறித்துவம் சொல்கிறது. ஒருவரது பாவத்தை மற்றவர் சுமக்கவே முடியாது என்று இஸ்லாம் சொல்கிறது.
  5. பாவம் செய்து விட்டால் மதகுருமார்களிடம் ஊழகெநளளழைn செய்வதன் மூலம் பாவ நிவர்த்தி அடையராம் என்று கிறித்துவம் சொல்கிறது. ஆனால், இஸ்லாமோ கடவுளிடம் நேரடியாகப் பாவ மன்னிப்பு பெற வேண்டும் என்று சொல்கிறது.
சொர்க்கம், நரகம் பற்றி இரண்டு வேதங்களில் பேசப்பட்டாலும், அதை அடைவதற்கான வழிகளில் இரண்டும் வித்தியாசப்படுகின்றன. ஒருவன் செய்யும் நன்மை, தீமைக்கேற்ப, சொர்க்கமா, நரகமா என்பதைக் கடவுள் தீர்மானிப்பார் என்று மிகத் தெளிவாகவே குரானில் சொல்லப்பட்டிருக்கிறது.
 
பைபிளிலும், அல்குர்ஆனிலும் கிட்டத்தட்ட ஒத்த பெயருடைய பலரைப் பற்றிச் செய்திகள் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனால், அவர்களை அறிமுகப்படுத்தும் விதத்தில் வித்தியாசப்படுகின்றன. உதாரணமாக, தாவீது (அல்குர்ஆனில் தாவூத்) லோத்து (அல்குர்ஆனில் லூத்) ஆகியோரைப் பற்றி பைபிளில் தவறான முறையில் சொல்லப்பட்டிருக்கின்றன. அல்குர்ஆன் இதை மறுக்கிறது.
 
இரு மதங்களுக்கிடையே போராட்டம் என்பது முற்றிலும் தவறாகும். அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவு அளிப்பதும், கிறித்துவ மார்க்கத்தைப் பரப்புவதற்காகவோ நிலை நிறுத்துவதற்காகவோ அல்ல. உண்மையில் யூதர்கள்தான் கிறித்தவர்களுக்கு முதல் எதிரி. ஏசுவைக் கொன்றவர்கள் மட்டுமல்ல, அவர் வாழ்ந்த காலத்தில் இழிசொற்களால் ஏசியவர்களும் யூதர்களே! எண்ணெய் வளம் மிக்க மத்திய கிழக்கில் தமது ஆதிக்கத்தை நிலைநாட்டவே இஸ்ரேலை ஊக்கப்படுத்தி, முஸ்லிம் நாடுகளை மிரட்டி வருகிறது அமெரிக்கா. உஸாமா பின் லாடனைப் பிடிப்பதற்காக ஆப்கான் மீது படையெடுத்து அப்பாவிகளைக் கொன்றது கிறித்துவ மார்க்கத்தின் நோக்கமாக இருக்கவே முடியாது. ஆப்கான் மீது தன் ஆதிக்கத்தை நிலை நாட்டவே இந்தப் படையெடுப்பு.
 
திருக்குரானில் இரண்டு விதமான கட்டளைகள் உள்ளன. தனி மனிதர்கள் பின்பற்ற வேண்டியவை, அரசுகள் பின்பற்ற வேண்டியவை என்று இரு வகைகள். துரதிஷ்டவசமாக  குரானில் உள்ள போர் குறித்த கட்டளைகளை, முஸ்லிம் அல்லாதவர்கள் – அதிலும் இஸ்லாத்தை வெறுப்பவர்கள், இஸ்லாத்துக்குத் தவறான வடிவம் தர பயன்படுத்திக் கொள்கிறார்கள். குரானில் ‘வெட்டுங்கள்; கொல்லுங்கள்’ என்ற வசனங்கள் உண்டு. ஆனால், இவற்றைத் தனியாகப் பார்க்கக்கூடாது. இந்த வசனங்களுக்கு முன் உள்ள வசனங்களைப் பார்த்தால் யுத்த களத்தில், செயல்படுத்த வேண்டிய கட்டளைகள் என்பது புரியும் (உதாரணம், இரண்டாவது அத்தியாயம்: 190,191)
 
முஸ்லிம்களிலும் அரைகுறையாகப் புரிந்து கொள்ளும் சிலர் மக்களைத் தூண்டி ஆள் சேர்ப்பதற்காக இத்தகைய வசனங்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இரண்டுமே தவறாகும்.
கல்கி (03.03.2002)
 
இதே போல் இஸ்லாத்தின் மீது சேறு பூச முனையும் அசத்தியவாதிகளுக்கு அவர் மறுப்பளிக்கும்போது, அணல் ததும்பும் அந்த வார்த்தைகளில் அவர்கள் கதிகலங்கிப் போவதை அப்படியே அவதானிக்க முடியும். இதற்கு பெண் சல்மான் ருஷ்டிக்கு ஆதரவு அளித்த இந்தியா டுடேக்கு, பெண் சல்மான் ருஷ்டியா? ஒரு உலகளாவிய சதி என்று அவர் பதில் அளித்துத் தீட்டிய ஆசிரியர் தலையங்கம் அல்ல சவுக்கடியை கொஞ்சம் படித்துப் பாருங்கள்.அதில்தான் எத்தனை வேகம்! எத்தனை விவேகம்!
 
‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலம் முதல் இன்று வரை இஸ்லாம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகின்றது! அதைப் பின்பற்றி நடப்போர் அதிகரித்து வருகின்றனர்! சமீப காலமாக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெகு வேகமாக இஸ்லாம் பரவி வருகின்றது!
 
இந்த வளர்ச்சியினால் பாதிக்கப்பட்ட யூத, கிறிஸ்தவ சக்திகளும் நமது நாட்டிலுள்ள இந்து வெறி சக்திகளும் இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த சர்வதேச அளவில் திட்டம் தீட்டிச் செயல்பட்டு வருகின்றன.
எப்படியாவது, ‘இஸ்லாம் ஒரு பிற்போக்கான மார்க்கம்’ என்று காட்ட பல முனைகளில் சூழ்ச்சி செய்து வருகின்றன. இந்தியாவிலும் உலக அளவிலும் நடக்கும் நிகழ்ச்சிகள் இதை ஊர்ஜிதம் செய்கின்றன. இஸ்லாமிய சமுதாயம் மிக்க விழிப்புடனிருக்க வேண்டிய நேரமிது!
 
அமேரிக்க அதிபர் கிளின்டன் சல்மான் ருஷ்டி என்ற மஞ்சள் எழுத்தாளனைச் சந்தித்ததை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இந்தச் சந்திப்பை இந்தியாவில் உள்ள செய்தித் தாள்கள் முக்கியத்துவத்துடன் வெளியிட்டதை இதற்குச் சான்றாகக் கொள்ளலாம்.
 
இதைச் சாதாரண சந்திப்பாக அறிவுடையோர் கருத முடியாது. ஏனெனில், உலகின் ஒரே வல்லரசாகச் சமீப காலத்தில் தனக்குத் தானே முடிசூட்டிக் கொண்ட நாடு அமேரிக்கா. உலகிலேயே அதிக அதிகாரம் பொருந்திய பதவி அந்நாட்டு அதிபர் பதவி. உள்நாட்டு விவகாரங்களிலும் மூக்கை நுழைக்க வேண்டிய ‘பிஸி’ ‘யான பதவி அது!
 
அயல் நாட்டு மன்னர்களும் அதிபர்களும் அமைச்சர்களும் கூட எளிதில் சந்திக்க முடியாத அமேரிக்க அதிபரைச் சர்வ சாதாரணமாக சல்மான் ருஷ்டி சந்திக்க முடிகின்றது.
 
இவர் ஏதேனும் ஒரு நாட்டின் அதிபரா? மாபெரும் விஞ்ஞானியா? சிறந்த சமூக சேவகரா? மிகப் பெரும் தியாகியா? பெரிய வீரரா? எதுவுமே இல்லை! ஒரு எழுத்தாளன்! அவ்வளவு தான்.
 
எழுத்தாளன் என்றால், தூங்கிக் கொண்டிருக்கும் சமுதாயத்தைத் தட்டி எழுப்பும் புரட்சிகரமான எழுத்தாளரா? அல்லது அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களைத் தட்டி எழுப்பும் துணிச்சல் மிக்க எழுத்தாளரா? போதைப் பொருட்கள், ஒழுக்கக் கேடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டி, மக்களை நல்வழிப்படுத்தும் சீர்திருத்த எழுத்தாளரா? தீராத பிரச்சினைகளுக்குத் தீர்வு கூறும் சிந்தனை மிக்க எழுத்தாளரா? மனித நேயம் வளரப் பாடுபடும் மனிதாபிமானமுள்ள எழுத்தாளரா? நிச்சியமாக இல்லை. ஒரு கீழ்த்தரமான மஞ்சள் எழுத்தாளர்!
இழிந்த நடையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றியும் அவர்களின் துணைவியர் பற்றியும் அவதூறுகளை எழுதிய நரகல் நடை எழுத்தாளர்! 

இதைத் தவிர எழுத்துலகில் வேறெந்தச் சாதனையும் செய்ததில்லை. இந்தக் கழிசடையைத்தான் அமேரிக்க அதிபர் சந்திக்கிறார். இந்த செய்தியைத்தான் பத்திரிகைகள் பெரிதாக விளம்பரப்படுத்தின.
 
(இவனது ‘சாத்தானிய வசனங்கள்’ என்ற நூலுக்கு ‘வேதம் ஓதும் சாத்தான்கள்’ என்று நாம் எழுதிய மறுப்பு நூலில் இவனது உளறல்கள் அடையாளம் காட்டியுள்ளோம்.)
 
குறைந்த பட்ச தகுதி கூட இல்லாத இவனை அமேரிக்க அதிபரும் பிரிட்டன் அதிபரும் சந்திக்க நேரம் ஒதுக்குகிறார்கள் என்றால் என்ன அர்த்தம்? இங்குள்ள பத்திரிகையாளர்கள் இதைப் பெரிதுபடுத்துகிறார்கள் என்றால் என்ன அர்த்தம்?
முஸ்லிம் பெயர் தாங்கியை வைத்தே இஸ்லாத்தை கொச்சைப்படுத்த முயல்வதைத் தவிர இதற்கு வேறு அர்த்தம் இருக்க முடியாது.
 
மேலை நாடுகளில் கிறித்தவ மதத்தை நார் நாராகப் பலர் கிழித்துள்ளனர். இன்றளவும் கூட கிறித்தவத்துக்குச் சமாதி கட்டிக்கொண்டிருக்கின்றனர். அவர்களை எல்லாம் இந்த அதிபர்கள் சந்தித்ததில்லை. இந்துக்களாகப் பிறந்த தி.க.வினர், கம்யூனிஸ்டு இயக்கத்தவர், பா.ம.க. மற்றும் ம.க.இ.க. ஆகிய கட்சியினர் இந்து அறிவுப்பூர்வமான இந்த விமர்சனங்கள் பற்றி இந்த நாட்டின் செய்தித்தாளகள் என்றேனும் வரவேற்று எழுதியதுண்டா? இல்லவே இல்லை. முற்போக்கும் புரட்சிகரச் சிந்தனையும் தான் ருஷ்டியை முன்னிலைப்படுத்தக் காரணம் என்றால், டாக்டர் சேப்பன், பிரபஞ்சன் போன்றோரை அதே காரணத்துக்காக இந்த மேல் சாதிப் பத்திரிகைகள் முன்னிலைப்படுத்தியதுண்டா?
 
பிற்போக்குத் தனத்தின் மொத்த வடிவமாக அமைந்துள்ள தங்கள் மதத்தை விமர்சிப்பதைக் கண்டு கொள்ளமாட்டார்களாம். பிற்போக்குத் தனத்தைப் புறமுதுகிடச் செய்த இஸ்லாத்தைத் தவறாக எவரேனும் விமர்சனம் செய்தால் அவர் புரட்சியாளராம்!
 
தங்கள் மதத்தைச் சேர்ந்தவர்கள் பலர் தங்கள் மதத்தை விமர்சிப்பது போல் இஸ்லாத்தை விமர்சிக்கும் முஸ்லிம் பெயர் தாங்கிகள் கிடைக்க மாட்டார்களா? என்று ஏங்கிக் கொண்டிருந்தவர்கள், இஸ்லாம் தோன்றியது முதல் இன்று வரை இரண்டு கழிசடைகளைத் தான் பெற முடிந்துள்ளது. இந்தப் பதினான்கு நூற்றாண்டுகளில் சல்மான் ருஷ்டி, தஸ்லிமா நஸ்ரீன் என்ற இரண்டு அறிவீனர்களைத் தான் அவர்களால் பிடிக்க முடிந்துள்ளது.
 
இந்தியப் பத்திரிகையாளர்களுக்கு இப்போது கிடைத்திருப்பர் தஸ்லிமா நஸ்ரீன்.
‘பெண்களும் புரட்சிகர சிந்தனைகளும் மூலையில் முடங்கிக் கிடக்க வேண்டும் என்று கருதப்படுகின்ற ஒரு சமூகத்தில் தன் கருத்துக்களை நெஞ்சு நிமிர்த்திச் சொல்லி அசாத்திய துணிச்சலுடன் வாழ்க்கை நடத்துவதற்காகவாவது இந்த எழுத்தாளரை எத்தனை பாராட்டினாலும் தகும்’ என்று உச்சியில் ஏற்றுகிறது இந்தியா டுடே, ஏனைய பத்திரிகைகளும் கூட இதே போக்கைத் தான் கடைப்பிடிக்கின்றன.
 
இந்தியா டுடேயில் இவரைப் பற்றிய கட்டுரையில் கூறப்படுவதன் அடிப்படையிலேயே இந்தியப் பத்திரிகையாளர்களை நாம் அடையாளம் காண முடியும்.
 
‘பெண்கள் வித்தியாசமாக நடத்தப்படுவதை என்னுடைய ஒன்பதாவது வயதில் முதல் முறையாக உணர்ந்தேன். எனக்கு பத்து வயதாகும் போதே இனி மேல் வெளியே போகக்கூடாது என்று சொல்லி விட்டார்கள். ஆனால், என் இரண்டு சகோதரர்களுக்குத் தடையில்லை என்கிறார்.’ (இந்தியாடுடே – 93, டிசம்பர் 6       -         20)
 
இவள் இஸ்லாத்தை வெறுத்ததற்கு கூறிய காரணத்தை இந்தியாடுடேயும் ஒப்புக் கொண்டு வெளியிட்டுள்ளது. இந்தியாடுடே இன்னொரு இடத்தில் கூறுவதைப் பாருங்கள்!
 
-மூன்று வருடங்களுக்கு முன்பு டாக்கா மெடிக்கல் காலேஜில் அனஸ்தீஸியாலஜிஸ்டாக இருந்த நஸ்ரீனால் நோயாளிகளுக்குச் சிகிச்சை தரவும் முடியவில்லை-
 
இந்த இரண்டுக்குமிடையில் உள்ள முரண்பாடு இந்தியாடுடேயின் முற்போக்குக்(?) கண்களுக்குத் தெரிய நியாயமில்லை. ஒன்பது வயதிலேயே வெளியே செல்ல விடாமல் தடுக்கப்பட்ட இவள் எப்படி ஆங்கில மருத்துவம் கற்று டாக்கா மருத்துவக் கல்லூரியில் மருத்துவராகப் பணிபுரிந்தாள்? இவள் கூறுவது பச்சைப்பொய் என்பதை இந்தியாடுடே உணரவில்லை. ஒருவேளை காளிதாசனுக்கும் ஞான சம்பந்தனுக்கும் ஞானம்(?) பொங்கியது போல் தஸ்லீமா நஸ்ரீனுக்கும் மருத்துவ அறிவு பொங்கியதாக நினைத்து விட்டது போலும்!
 
இவள் எத்தகைய வேஷக்காரி என்பதற்கும் பொய்யிலேயே ஊறிப்போனவள் என்பதற்கும் இதைவிட வேறு சான்று தேவையில்லை.
 
ஆண் – பெண் உடலுறவு பற்றிப் பச்சையா எழுதக் கூடியவர்கள் இந்த நாட்டிலும் உள்ளனர். பெரும்பாலும் பெண்கள் பெயரில் ஒளிந்து கொண்டு ஆண்களே எழுதி வருகின்றனர். இவர்களையெல்லாம் எவ்வளவு பாராட்டினாலும் தகும் என்று இப் பத்திரிகைகள் போற்றியதில்லை.
 
‘ஆண், பெண் செக்ஸுவாலிடி பற்றி வெளிப்படையாக இவர் எழுதியிருக்கிறார். புத்தகங்களின் தலைப்பே இதைப் படம் பிடித்துக்காட்டும்’ என்றும் இந்தியாடுடே கூறி மகிழ்கிறது.
 
ஆபாசமான தலைப்புகளில் ஆண், பெண் உடலுறவு பற்றிப் பச்சையாக எழுதியதில் ஆனந்தப்படுகிறார்கள். இவள் புரட்சிகர எழுத்தாளராம்!
இவள் எவ்வளவு தரங்கெட்டவள் என்பதற்கும் இந்தியாடுடே சாட்சி சொல்லுகிறது.
 
‘இவர் எழுதிய ஒரு கதையில் வெறுத்துப்போன இரண்டு குடும்பத் தலைவிகள் தங்கள் செக்ஸ் வாழ்வைப் பற்றி பேசுவதாக வருகிறது’ என்று இந்தியா டுடே வெளிச்சம் போடுகிறது.
 
உலக வரலாற்றில் எவரும் செய்யாத பெரும் புரட்சி ஒன்றையும் இவள் செய்திருக்கிறாள். மஞ்சள் பத்திரிகையில் பச்சையாகப் பலரும் எழுதி வருகின்றனர். ஆண்களே இந்தக் கேவலமானதைச் செய்து வருகின்றனர்.
தகாத உறவுகளை நியாயப் படுத்துவோர் உள்ளனர். ஓரினப் புணர்ச்சிக்கு வக்காலத்து வாங்குவோர் உள்ளனர். இந்தக் கீழ்த்தர எழுத்து வியாபாரிகள் கூட ‘ஆண்களே! நீங்கள் கண்ட பெண்களைக் கற்பழியுங்கள்’ என்று எழுதியதில்லை. அவர்களே எழுதத் துணியாத’  புரட்சிகரமான(?) இந்த யோசனையைக் காம வெறி கொண்ட இவள் எழுதியிருக்கிறாள்.
 
‘ஒருதரம் ஆண்களைப் பலாத்காரம் செய்ய ஆரம்பிக்கும் படி பெண்களைத் தூண்டினார்’ என்றும் இந்தியா டுடே பெருமிதப்படுகிறது.
 
தகாத உறவு கூட, இருவரும் விரும்பியதால் நடப்பதாகத் தான் மஞ்சள் பத்திரிகையாளர்கள் எழுதி வந்தனர். இவளோ ஆண்களைப் பலாத்காரம் செய்யும்படி ஏவுகிறாள்.
 
இந்த மேல் சாதிப் பத்திரிகையாளர்களை நாம் கேட்கிறோம். சொரணை இருக்குமானால் நேரடியாக இதற்குப் பதில் கூறட்டும்!
 
இவளது இது போன்ற எழுத்துக்கள் புரட்சி என்றால் உங்கள் குடும்பத்துப் பெண்கள் இவள் எழுதியது போல் எழுதவும் இவளைப் போல் நடக்கவும் உற்சாகமூட்டுவீர்களா? அனுமதியாவது கொடுப்பீர்களா? குறைந்த பட்சம் கண்டு கொள்ளாமலாவது இருப்பீர்களா? இதைப் புரட்சி என்று கூறும் நீங்கள் இந்தப் புரட்சிக்கு உங்கள் குடும்பத்துப் பெண்களைத் தயார்படுத்துவீர்களா? மாட்டீர்கள் என்றால் இவளுக்கு எந்த முகத்துடன் வக்காலத்து வாங்குகிறீர்கள்?
 
பெண்கள் கிடக்கட்டும்! ஆண்களாகிய நீங்கள் உங்கள் பத்திரிகையில் இந்தப் புரட்சியை ஆரம்பித்து வைப்பீர்களா? ஒரு பெண் பலருடன் நடத்திய செக்ஸ் வாழ்க்கையை எழுதினால் பிரசுரிப்பீர்களா? கண்ட இடங்களில் ஆண்களைப் பெண்களும் பெண்களை ஆண்களும் பலாத்காரம் செய்யுமாறு அறிவுரை கூறுவீர்களா? அவ்வாறு செய்து விட்டு இவளை ஆதரித்தால் அதில் உள்ள நியாயத்தை எங்களால் புரிந்து கொள்ள முடியும்.
 
‘இவையெல்லாம் மனித நாகரீகத்துக்கு அப்பாற்பட்டவை! மனித அறிவை மழுங்கடிக்கக் கூடியவை! இவ்வாறு எழுதுவது கேவலமான பிழைப்பு என்று நீங்கள் கருதினால், இவளை ஆதரிப்பதற்கும் விளம்பரப்படுத்துவதற்கும் நீங்கள் வெட்கப்பட வேண்டாமா?
 
இவளது காமவெறிப் போக்குக்கு மற்றுமொரு சான்றையும் இந்தியா டுடே தருகின்றது.
 
பொதுவாக பத்திரிகையாளர்கள் பரந்த மனப்பான்மையுடயவர்கள். கவிஞர்கள் அதை விடவும் பரந்த மனப்பான்மை உடையவர்கள் என்று கருதப்படுகின்றனர். முனைவியை இவர்கள் அடக்கியாள மாட்டார்கள்; அவளுக்குப் போதிய சுதந்திரம் வழங்குவார்கள் என்றெல்லாம் நம்பப்படுகிறது.
‘கடந்த பத்து வருடங்களில் அடுத்தடுத்து மூன்று முறை திருமண வாழ்க்கை தோல்வி அடைந்ததால், ஆண்கள் பற்றி இப்படி ஒரு அணுகுமுறை அவருக்குள் உருவாகியிருக்கலாம். ஒரு கவிஞருடனும் இரண்டு பத்திரிகையாளர்களுடனும் வாழ்ந்து பார்த்தவர் இவர் என்று இந்தியா டுடே கூறுகிறது.
 
ஒரு தடவை திருமண ஒப்பந்தம் முறியலாம்! இரண்டு தடவi முறியலாம். பத்தாண்டுகளில் மூன்று திருமணம் செய்து உறவை முறித்துக்கொண்டால்’ நாகரித்தை விரும்புகின்ற பத்திரிகையாளர்கள், கவிஞர்களுடன் கூட இவளால் வாழ்க்கை நடத்த முடியவில்லை என்றால் கோளாறு எங்கே என்பதை யாரும் அறியலாம்.
 
‘நான் ஆவேசமும் நம்பிக்கையும் அடிக்கடி மாறும் மனநிலை கொண்டவள்’ என்று அவளே கூறியதாக இந்தியா டுடே குறிப்பிடுகின்றது.
 
இது புரட்சியா? அல்லது பைத்தியமா? இத்தகைய தடுமாற்றத்துக்கும் அடிக்கடி தன்னை மாற்றிக் கொள்வதற்கும் பெயர்தான் புரட்சி என்று நீங்கள் கருதினால் இந்த நாட்டின் அரசியல் வாதிகளுக்குப் பட்டுக் கம்பளம் விரியுங்கள்! அடிக்கடி நிலைமாறும் அரசியல்வாதிகளைச் சந்தர்ப்பவாதிகள் என்று விமர்சிக்கும் நீங்கள் இவளை மட்டும் புரட்சிக்காரி என்பது ஏன்?
 
மனநிலை சரியில்லாதவள், துணிந்து பொய் சொல்பவள், காம வெறி பிடித்து அலைபவள், இளைஞர்களின் மனதைக் கெடுப்பவள் என்றெல்லாம் தெரிந்திருந்தும் இவளை நீங்கள் ஆதரிப்பதன் காரணத்தைச் சொல்ல மாட்டீர்கள். நீங்கள் சொல்லாவிட்டாலும் எங்களுக்கு நன்றாகத் தெரியும்.
 
அவள் இஸ்லாத்தை விமர்சித்து விட்டாள் என்பதைத் தவிர வேறு எந்தக் காரணமும் இல்லை. அவள் பைத்தியக் காரியானாலும் அவள் கூறுவது பச்சைப் பொய் என்றாலும் வெறி பிடித்து அலைபவள் என்றாலும் இஸ்லாத்தை அவள் குறை கூறி இருக்கும் போது அவளைப் பாராட்டாமல் உங்களால் இருக்க முடியாது.
 
‘மதம், பெண்களை எப்படி போகப் பொருளாக நடத்துகின்றது என்று நீரூபிக்க குரானில் உள்ள வாசகங்களை மேற்கோள் காட்டி
விளாசித்தள்ளியிருந்தார் நஸ்ரீன்.’ இது இந்தியா டுடேயின் வாசகம்.
எவ்வளவுதான் மறைத்தாலும் இவர்களின் உள்நோக்கம் இப்போது தெளிவாகத் தெரிந்து விட்டது. பயன்படுத்தியிருக்கும் வார்த்தையைக் கவனித்தீர்களா? 

எழுதினார்; குறிப்பிட்டார் என்று கூட எழுதவில்லை. ‘விளாசித் தள்ளினார்’ என்று மகிழ்ச்சித் துள்ளலுடன் தேர்வு செய்து இந்த வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளது இந்தியா டுடே. காமவெறி பிடித்த பைத்தியக் காரியைக் கூட புரட்சியாளராகச் சித்திரிக்கக் காரணம் இதுதான்.
 
இந்தியப் பத்திரிகையாளர்களுக்கு மீண்டும் சொல்கிறோம். எழுதுவதை எழுதிவிட்டு, பிறகு பல்டி அடித்து மன்னிப்புக் கேட்டு தடுமாறக் கூடிய சல்மான் ருஷ்டி போன்ற கோழைகளையும், மனநிலை சரியில்லாத கேவலமான தஸ்லீமா நஸ்ரீனையும் தான் உங்கள் வலையில் சிக்க வைக்க முடியும். ஒழுங்கான ஒரு முஸ்லிமைக் கூட உங்களால் பிடிக்க முடியாது.
அப்படி என்ன விளாசித் தள்ளிவிட்டார் என்பதை விளக்கமாகக் கூறினால், நாமும் கொஞ்சம் விளாசித் தள்ளலாம். அதை இந்தியா டுடே குறிப்பிடவில்லை.
 
‘நீங்கள் அவர்களுக்கு ஆடை அவர்கள் உங்களுக்கு ஆடை’ என்று ஆண் – பெண் சமத்துவத்தைக் குர்ஆன் கூறுகிறதே அதை விளாசினாரா?
 
‘ஆண்களுக்கு இருப்பது போன்ற உரிமைகளும் கடமைகளும் பெண்களுக்கும் உள்ளன’ எனக் குர்ஆன் கூறுகிறதே அதை விளாசினாரா?
 
ஆண்களாயினும் பெண்களாயினும் சட்டத்தின் முன் சமம் என்று இஸ்லாம் கூறுகிறதே அதை விளாசினாரா?
 
அவள் விளாசித் தள்ளியது எது என்று இந்தியா டுடே தெளிவுபடுத்தினால் பதிலளிக்க நாம் தயாராக இருக்கிறோம்.
 
இவளுக்கு எங்கிருந்தெல்லாம் ஆதரவு கிடைக்கின்றது என்று பாருங்கள்!
 
‘அலேன்கின்ஸ்பெர்க், குந்தர்கிராஸ், ஜான் இர்விங், நார்மன்மெய்லர், ஆழிடான் போன்ற சர்வதேச எழுத்தாளர்கள் இவருக்கு ஆதரவு தெரிவித்து மரண தண்டனை விதித்ததைக் கண்டித்திருக்கிறார்கள். சக தோழர் சல்மான் ருஷ்டியும் தான்’ என்று இந்தியா டுடே கூறுகிறது!
 
இதில் ஆச்சரியப்பட ஏதுவுமில்லை. இவளுக்காக நாளை  வெள்ளை மாளிகையின் கதவுகள் கூட திறக்கப்படலாம்! பிரிட்டிஷ் மகாராணியும் போப்பாண்டவரும் கூட இவளைக் கட்டி அணைக்கலாம்? ஆயினும் இஸ்லாத்தை இழிவுபடுத்தும் இவர்களின் திட்டம் ஒருக்காலும் வெற்றி பெறப்போவதில்லை.
 
இவளது தகாத நடத்தைக்கும் போக்குக்கும் எதிராக பங்களாதேஷ் மக்கள் திரண்டெழுந்திருப்பதைப் பிற்போக்கு என்று வர்ணிக்கும் இந்தியப் பத்திரிகையாளர்களுக்கு நாம் சிலவற்றை நினைவு படுத்துகிறோம்.
 
பல ஆண்டுகளுக்கு முன்னர் எழுத்தாளர் சுஜாதா ஒரு தொடர்கதையைக் குமுதத்தில் எழுதினார். (‘இரத்தம் ஒரே நிறம்’ என்று நினைவு) அத்தொடர் கதையில் நாடார் சமூகத்தைப் பற்றி அவர் பயன்படுத்திய வார்த்தைக்காக அந்த சமூகமே கொதித்தெழுந்தது. குமுதம் இதழ்கள் சாலை நடுவே எரிக்கப்பட்டன. உடனடியாக அத்தொடரை குமுதம் நிறுத்தியது. இது போன்றுதான் கி. ராஜ நாராயணன் விஸ்வகர்ம சமுதாயத்தைப் பற்றி எழுதிய போதும் எதிர்ப்பு வந்தது. அவர் மன்னிப்புக் கேட்டார்.
 
எந்த சமூகம் பற்றியும் தவறாக எழுதுவதை அந்தச் சமூகம் சகித்துக் கொள்வதில்லை. இது மனித இயல்பு. இதை உணர்ந்து குமுதமும் நடந்து கொண்டது. எழுதியவர்களும் நடந்து கொண்டனர். புரட்சி வசனம் பேசிக் கொண்டிருக்கவில்லை. புரட்சியாக எழுதக் கூடியவர்களும் கூட அதற்குரிய இலக்கணத்துடன் எழுத வேண்டும்.
 
சினிமா டைரக்டரான பாலசந்தர் தனது சமூகமான பிராமண சமுதாயப் பெண்ணைப் பற்றி ‘அரங்கேற்றம்’ சினிமா எடுத்த போது, இப்பத்திரிகைகள் கொதித்ததை நாம் மறக்கவில்லை. சமீபத்தில் உ.பி.யில் ‘ஸஹமத்’ அமைப்பு நடத்திய நிகழ்ச்சியின் சுவரொட்டியில் ராமனின் தங்கை சீதை என்று குறிப்பிட்டிருந்ததைக் காரணம் காட்டி நாடாளு மன்றத்தையும் நாட்டையும் ரகளையால் திணறச் செய்தார்களே! ஒரு ராமாயணத்தின் அடிப்படையில் ஆதாரத்தோடு வெளியிடப்பட்ட செய்திக்கே இத்தனை காலாட்டா செய்தார்களே! ஸஹமத்தைக் கண்டித்து வேண்டாத வேலையிலீடுபடுவதாகத் தலையங்கம் எழுதினார்களே! சுஜாதாவுக்கெதிராகவும் கி.ராஜநாராயணனுக்கெதிராகவும் ஸஹமத்துக்கெதிராகவும் போராடியது மட்டும் முற்போக்காம். பங்களாதேஷ் மக்களது நடத்தை பிற்போக்காம். இதுதான் இந்தியப் பத்திரிகைகளின் ‘பத்ரிகா தர்மம்.’
 
இந்தியப் பத்திரிகையாளர்களின் ஒரு தலைப்பட்சமான போக்குக்கு இன்னொரு சான்றையும் கூட நாம் குறிப்பிட முடியும்.
 
ஹைதராபாத் சிறுமிகள் இருவரை இரண்டு அரபிகள் திருமணம் செய்ததை இந்தப் பத்திரிகைகள் பரபரப்பான செய்தியாக்கின. பெண்ணின் விருப்பமின்றி நடைபெறும் திருமணத்தை இஸ்லாம் அங்கீகரிக்க மறுப்பதால் நாமும் அதனைக் கண்டிக்கின்றோம்.
 
நாள் தோறும் தலைப்புச் செய்தியாக்கி நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்கச் செய்து ஆட்டம் போட்டார்களே அது நல்ல நோக்கத்தில் செய்தது தானா? உண்மையிலேயே பொருந்தாத திருமணத்தை எதிர்ப்பதென்றால் இது போல் நடக்கும் அனைத்துத் திருமணங்களையும் அவர்கள் எதிர்க்க வேண்டுமல்லவா?
 
N.T. ராமாராவ் அடுத்தவரின் மனைவியை திருமணம் செய்தது சரிதானா? அப்பெண்ணின் கணவர் புகார் செய்த பின்னரும் கூட இதை அவ்வளவு பெரிய விடயமாக இந்தியப் பத்திரிகைகள் எடுத்துக் கொள்ளவில்லையே அது ஏன்? 

ஒரு சாமியார் திடீரெனக் காணாமல் போகப் பலவிதமான வதந்திகள் வந்தனவே அது பற்றிப் பாராளுமன்றத்தில் எவரும் வாய் திறக்கவில்லையே? பத்திரிகைகள் கண்டு கொள்ளவில்லையே அது ஏன்?
 
எந்தச் செய்தியாவது இஸ்லாத்தை மாசுபடுத்த உதவும் என்றால் இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தப் பயன்படும் என்றால் இவர்கள் அதைப் பெரிய விசயமாக ஆக்குவது என்று செய்து விட்டார்கள். சர்வதேச அளவில் இந்த சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது என்பதை சமுதாயம் கண்டுகொள்ள வேண்டும்.’)
 
பீஜே அல் ஜன்னத் பத்திரிகை ஆசிரியராக இருக்கும்போது,அது ஒரு மந்தி இதழாக வெளி வந்து கொண்டிருந்தது.பல ஆயிரம் வாசகர்களை ஏகத்துக் கொள்கையின் நிழலில் கொண்டுவந்து சேர்த்தது.இன்று அது முடவன் கையில் வசை பாடும் ஏடாக முடங்கிக் கிடக்கிறது வேதனையளிக்கிறது.
 
பல பத்திரிகைகள் இஸ்லாமிய ஒழுக்க நியமங்களை துச்சமாக மதித்து எழுதவும், இறைத் தூதரின் புனிதமான ஆளுமைகளுக்கு மாசு கற்பிக்கவும் துணிந்த போது, பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்ற உலமாக்கள் எந்த மறுப்பும் அளிக்காமல் உறங்கிக் கொண்டிருந்தனர்.
 
ஆனால், பீஜே அவர்கள் இஸ்லாத்திற்கு எதிரான இவ்வாறான சவால்களை எதிர் கொள்ள, துணிந்து அறை கூவல் விடுத்ததையும் அவற்றை முறியடிக்க தன் பேனாவை வலிமையாகப் பயன்படுத்தியதையும் அவரது எழுத்துகளிலிருந்தே புரிந்து கொள்ள முடிகிறது.
 
இதேபோல் சல்மான் ருஷ்டி இஸ்லாத்தை விமர்சித்து எழுதிய போது, அவனது உளரல்கள் நிறைந்த ‘சாத்தானியக் கவிதை’ நூலின் அபத்தங்களுக்கு தமிழ் உலகில் ஆணித்தரமான பதில் அறிஞர் பீஜே அவர்களால் அளிக்கப்பட்டது. அது வேதம் ஓதும் சாத்தான்கள் என்ற தலைப்பில் இலங்கையில் அன்ஸாருஸ் சுன்னாவினரால் கூட வெளியிடப்பட்டது. இதை வாசிக்க விரும்புவோர் தற்போது ஆன்லைன்பீஜேயில் முழமையாக வாசித்துக் கொள்ளலாம். ‘சாத்தானியக் கவிதை’கள் பற்றி மாற்று மதத்தினர் எழுப்பிய கேள்விகளுக்கு இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்ற நிகழ்ச்சியில் ஆரம்ப காலங்களிலேயே பதில் அளித்துள்ளார்.
 
பீஜே அவர்கள் அல் ஜன்னத் பத்திரிகை ஆசிரியராக இருக்கும்போது, அவர் தீட்டிய கட்டுரைகள் இலங்கையிலுள்ள பாமர,படித்த மக்கள் தொடக்கம் பல்கலைக்கழக மாணவர்களையும் ஈர்த்து நின்றது. இந்த வகையில், இலங்கைத் தவ்ஹீத் எழுச்சியில் பீஜேவுடைய பங்களிப்பு தனியாக மதிப்பீடு செய்யப்படவேண்டியது. இது பற்றிய சில குறிப்புக்களை ஆன்லைன்பீஜேயில் விமர்சனங்கள் என்ற பகுதியில் அண்மையில் வெளியிடப்பட்ட இலங்கையில் தவ்ஹீத்  அமைப்புகளின் பிரிவினைக்கு யார் காரணம்? என்ற கட்டுரையில் பெற்றுக்கொள்ளலாம்.

இஸ்லாமிய சிந்தனையின் நவீனத்துவப் பிரமாணங்களைக் கற்றறிந்து விளக்குவதிலும், நவீன இஸ்லாமிய ஆய்வறிவு மரபிலும், அதன் தாக்கத்தை மதிப்பீடு செய்வதிலும் பீஜே ஆற்றும் வகிபங்கு, தென்னிந்தியா, இலங்கை தமிழ் மொழி பேசும் மக்களின் சிந்தனை மரபிலும் பரந்த தமிழ் கூறும் நல்லுலகிலும் பாரிய செல்வாக்குச் செலுத்திவருகிறது. அவரது தஃவா அனைத்துத் துறைகளையும் தழுவி நிற்கிறது. அவர் அண்மையில் (06-12-2009) அன்று சேப்பாக்கத்தில் பாபர் மஸ்ஜித் இடிப்பும் சூழ்ச்சியும் என்ற தலைப்பில் ஆற்றிய உரை ஒரு மிகப் பெரிய வரலாற்று ஆய்வாளனுக்குரிய மிடுக்கை வெளிக்காட்டுமுகமாக இருந்தது. ராமரா? பாபரா? என்று அவர் சில வருடங்களுக்கு முன்னர் ஆற்றிய உரையில் இந்திய வரலாற்றாசிரியர்கள் மற்றும் லிபரான் போன்றோர் கால் மடித்து அமர்ந்து கேட்டுத் தெளிவு பெற வேண்டிய விடயங்கள் நிறையவே உள்ளன.

தனித் தன்மையுடைய இவ்வாறான அவரின் ஒட்டுமொத்தப் பணியின் விளைவுகளையும் தாக்கத்தையும் எதிர்கால வரலாறே முழுமையாக மதிப்பீடு செய்யும். சமகால நமது மதிப்பீடுகளைவிட அது வலுவானதாக இருக்கும்.  ஏனெனில், அவரது சிந்தனைகள் சமகால தாக்கங்களைவிட எதிர்காலத்தில் விரிந்த வாசிப்பைப் பெறும். பல கோணங்களில் அவரது பணிகள் பற்றிய ஆய்வுகள் மலரும்.அப்போது, தாக்கங்கள் இன்னும் வலுவாகும்.

வரலாறு இன்னும் வளரும் இன்ஷா அல்லாஹ்…

0 comments:

Post a Comment

 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்