Sunday, January 27, 2013

இன்று (27-01-2013) சென்னையில் நடந்த பொதுக்கூட்ட வீடியோ

அல்லாஹ்வின் கிருபையால் இன்று (27-01-2013) சென்னை மண்ணடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சகோ.பி. ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள் ஆற்றிய உரை.

தலைப்பு - விஸ்வரூபம் அடுத்தது என்ன?

Saturday, January 26, 2013

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தின் விடுமுறை தினத்தை சிறந்த முறையில் கழிக்க நேற்று (25-01-2013) சிறப்பு "இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்" கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்த கேள்வி பதில் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அமீரகத்திலிருந்து வரவழைக்கப்பட்ட  சகோதரர். ஹமீன் இப்ராஹிம் அவர்கள் வந்திருந்த சகோதர சகோதரிகளின் கேள்விகளுக்கு குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் மிகத் தெளிவாக விளக்கினார்கள்.

நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளில் சில
  • பெண்கள் காது குத்தலாமா?
  • ஒருவர் அக்கா தங்கை என்ற இரண்டு பெண்களை திருமணம் செய்யலாமா? 
  • எஞ்சியதற்கு தான் ஜகாத் என்பதன் விளக்கம் என்ன?
  • திருக்குர்ஆனின் 36ஆவது அத்தியாயமான யாஸீனில் உள்ள 42ஆவது வசனத்தின் விளக்கம் என்ன?
  • யூதர்களின் வரலாறு மற்றும் அவர்களின் கடவுள் நம்பிக்கை என்ன? 
என்பன போன்ற பல கேள்விகளை கேட்டனர். இந்த அனைத்து கேள்விகளுக்கும் குர்ஆன் மற்றும் ஆதரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் அழகாக விளக்கமளித்தார்கள்.

இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!! 

மாற்று மதத்தினருக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி


அல்லாஹ்வின் கிருபையால், தற்போதுள்ள தமிழ் அமைப்புகளின் தாவா பணிகளில் தலை சிறந்து விளங்குவது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மட்டுமே என்பது அனைவரும் அறிந்ததே. அதன் ஒரு கிளையான பஹ்ரைன் மண்டலத்தில் "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (பிற மதத்தினருக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி)" என்ற நிகழ்ச்சி நேற்று (25-01-2013) ஏற்பாடு செய்யப்பட்டது.

இதின் ஆரம்பகட்டமாக நமது மண்டல தலைவரான சகோ. முபாரக் அவர்கள் வரவேற்புரை கூறி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இதுபோன்ற மாற்று மதத் தினருக்காக சிறப்பு நிகழ்ச்சிகளை தமிழமெங்கும் நடத்தி வருகிறது எனபதை வந்திருந்த மாற்று மத நண்பர்களுக்கு எடுத்துச் சொல்லி விளக்கினார்கள்.

அவரைத் தொடர்ந்து அமீரகத்திலிருந்து சிறப்பு விருந்தினராக வரவழைக்கப்பட்ட சகோ.ஹமீன் இப்ராஹிம் அவர்கள் "இஸ்லாம் ஓர் அறிமுகம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். 

இந்த இஸ்லாத்தை பற்றிய அறிமுக உரையானது, வந்திருந்த மாற்று மத நண்பர்கள் இஸ்லாத்தை புரிந்துக் கொள்ளக்கூடிய வகையில் மிக எளிதாகவும், அறிவுப்பூர்வமாகவும் இருந்தது. 

இதை தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சிகள் ஆரம்பமானது. தொடக்கத்திலியே சகோதரர்கள் மிகவும் ஆர்வமாகவும், ஆக்கப்பூர்வமான கேள்விகளை தொடுத்தனர். இதற்க்கு நமது சகோதரர் மிகவும் தெளிவாக விளக்கினார்கள். இன்றைய நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளில் சில உங்கள் பார்வைக்கு.
  1. மத மாற்றம் என்றால் என்ன?
  2. முஸ்லீம் பெண்கள் பர்தா அணிவது ஏன்?
  3. விஸ்வரூபம் படத்திற்கு முஸ்லீம்கள் ஏன் இவ்வளவு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்? 
  4. இலங்கயை சேர்ந்த ரிஸானா நஃபிக் என்ற பெண்ணிற்கு சவுதியில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது ஏன்?
இது போன்ற இன்னும் பல கேள்விகளை குழுமியிருந்த நண்பர்கள் கேட்டு விளக்கம் பெற்றனர். 
 
இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைத்து மாற்று மத அன்பர்களுக்கும் இஸ்லாத்தை தெரிந்து கொள்ளவதற்காக் இஸ்லாம் சம்பந்தமான விளக்க நூல் மற்றும் CDகள் இலவசமாக வழங்கப்பட்டன.
 
பிறகு மாற்று மத நண்பர்களுக்கு உணவு பரிமாறப்பட்டு சபை களைந்தது.

இந்த நிகழ்ச்சியில் மாற்று மத நண்பர்கள் மற்றும் நமது சகோதரர்கள் என பெரும் திரளாக வந்து கலந்து கொண்டனர். 

இந்த நிகழ்ச்சியை சிறப்பித்து தந்த அல்லாஹ்விற்க்கே எல்லாப் புகழும்!!!!

சிறப்பு எளிய மார்க்கம் - பெண்கள்

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தின் விடுமுறை தினத்தை சிறந்த முறையில் கழிக்க 24-01-2013 அன்று சிறப்பு பெண்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்த கேள்வி பதில் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அமீரகத்திலிருந்து வரவழைக்கப்பட்ட  சகோதரர். ஹமீன் இப்ராஹிம் அவர்கள் வந்திருந்த சகோதரிகளின் கேள்விகளுக்கு குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் மிகத் தெளிவாக விளக்கினார்கள்.

நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளில் சில
  • கணவன் மனைவிக்கு செய்யும் கடமைகள் என்ன?
  • தாவா யாரெல்லாம் செய்யலாம்? 
  • பெண்களில் பள்ளியில் தொழுவது சிறந்ததா? 
என்பன போன்ற பல கேள்விகளை கேட்டனர். இந்த அனைத்து கேள்விகளுக்கும் குர்ஆன் மற்றும் ஆதரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் அழகாக விளக்கமளித்தார்கள்.

இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!! 

நிர்வாக தர்பியா

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தின் விடுமுறை தினத்தை சிறந்த முறையில் கழிக்க 24-01-2013 அன்று நிர்வாகிகளுக்கான தர்பியா நமது மண்டல நிர்வாகிகளின் தலைமையில் சிறப்பாக அரங்கேறியது.

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அமீரகத்திலிருந்து சகோதரர். ஹாமீன் இப்ராஹிம் அவர்கள் வந்திருந்து, நிர்வாகிகளுக்கான தர்பியா நிகழ்ச்சியை நடத்தினார்கள்.

இதில் சகோதரர் அவர்கள் நிர்வாகிகள் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகளையும், மக்களுக்கு மத்தியில் பின்பற்ற வேண்டியவைகளையும் மிக சிறப்பாக விளக்கினார்கள்.

இதில் நமது மணடல மற்றும் கிளை நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ். 

Saturday, January 19, 2013

வாராந்திர நிகழ்ச்சி - தலைமை - 18-01-2013


அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல தலைமையில் வாராந்திர நிகழ்ச்சி மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நேற்று (18-01-2013) நடைபெற்றது.
 
இந்த நிகழ்ச்சியில் சகோதரர். முஹம்மது பந்தர் அப்துல் ஹமீது அவர்கள், "இஸ்லாத்தின் பார்வையில் உடல் நலம் பேணுவோம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
 
இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

ஆன்லைன் நிகழ்ச்சி - ஹித் - 18-01-2013



அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல ஹித் கிளையில் சிறப்பு நிகழ்ச்சியாக ஆன்லைன் பயான் நேற்று (18-01-2013) மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு கிளை நிர்வாகிகளின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தாயகத்திலிருந்து சகோதரர். E. ஃபாரூக் அவர்கள் "இன்னும் நாம் தயங்குவது ஏன்?" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் அதிகமானோர் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

Wednesday, January 16, 2013

ஆன்லைன் மூலம் குர்ஆன் தஃப்ஸீர் வகுப்பு


அல்லாஹ்வின் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலத்தில் சார்பாக கடந்த 15-01-2013 அன்று குர்ஆன் தஃப்ஸீர் வகுப்பு தாயகத்திலிருந்து ஆன்லைன் மூலம் சகோ.முஹம்மது சலீம் அவர்கள் நடத்தினார்கள். 

இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இந்த வகுப்பை சகோதரர் அவர்கள் சிறப்பாகவும், அனைவருக்கும் எளிதில் புரியும் வகையில் நடத்தினார் அல்ஹம்ந்துலில்லாஹ்.

Saturday, January 12, 2013

வாராந்திர நிகழ்ச்சி - ஹித் - 11-01-2013

அல்லாஹ்வின் கிருபையால், ஹித் கிளையில் பயான் நிகழ்ச்சி நேற்று (11-01-2013) மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சகோ. முஹம்மது பந்தர் அப்துல் ஹமீது அவர்கள் "இன்றைய உலகமும் இஸ்லாமிய சட்டங்களின் தேவையும்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்ததப்பட்டது.

இதில் நமது ஹித் பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

வாராந்திர நிகழ்ச்சி - தலைமை - 11-01-2013


அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல தலைமையில் வாராந்திர நிகழ்ச்சி மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நேற்று (11-02-2013) நடைபெற்றது.
 
இந்த நிகழ்ச்சியில் சகோதரர். திருச்சி ஜெய்லானி அவர்கள், "சாதனையாளர்களின் மறுபக்கம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
 
இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

வாராந்திர நிகழ்ச்சி - ரிஃபா - 11-01-2013


அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல ரிஃபா கிளையில் வாராந்திர நிகழ்ச்சி இஷா தொழுகைக்குப் பிறகு நேற்று (11-01-2013) நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் சகோ.திட்டச்சேரி அலீம் அவர்கள், "மறைவான விஷயம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். 

இந்த நிகழ்ச்சியில் ரிஃபா கிளையைச் சேர்ந்த நமது தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

Saturday, January 5, 2013

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் - வட்டி

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல மாதாந்திர ஆன்லைன் நிகழ்ச்சி இன்று (04-01-2013) "இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்" என்ற கேள்வி பதில் நிகழ்ச்சி, பிரத்யேகமாக வட்டி தொடர்பான சந்தேகங்களை தெளிவுபடுத்துவதர்காக நமது மண்டல நிர்வாகிகளின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த கேள்வி பதில் நிகழ்ச்சியில் தாயகத்திலிருந்து சகோதரர். அப்பாஸ் அலி அவர்கள் வந்திருந்த சகோதர சகோதரிகளின் கேள்விகளுக்கு குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் மிகத் தெளிவாக விளக்கினார்கள்.

நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளில் சில
  • வங்கிகளில் சேர்த்து வைக்கும் சேமிப்பு தொகைக்கு அதிகமாக கொடுக்கப்படும் தொகை வட்டியாகுமா?
  • வட்டி எப்பொழுது ஹராம் ஆக்கப்பட்டது?
  • அடைமனம் சம்பந்தமாக மார்க்கத்தின் நிலை என்ன? 
  • வியாபரத்திற்கு கொடுக்கப்படும் தொகை திரும்பப்பெருவது வட்டி கணக்கில் ஆகுமா?
  • பல்வேறு சமுதாய பிரச்சனைகளை களத்தில் காணும் தவ்ஹீத் ஜமாஅத், ஏன் வட்டியை தடுக்க வட்டியில்லா கடன் உதவி திட்டம் ஏற்படுத்த கூடாது?
என்பன போன்ற பல ஆக்கப்பூர்வமான வட்டி தொடர்புடைய கேள்விகளை கேட்டனர். இந்த அனைத்து கேள்விகளுக்கும் குர்ஆன் மற்றும் ஆதரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் அழகாக விளக்கமளித்தார்கள்.

இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

Friday, January 4, 2013

சன் நியூஸ் தொலைக்காட்சியில் நேருக்கு நேர் – TNTJ vs மாதர் சங்கம்!



மதுரை ஆதினம் கூறிய கருத்து சரியா?
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் VS மாதர் சங்கம்
நேருக்கு நேர் – (மகளிர் விவாதம்)
சன் நியூஸ் தொலைக்காட்சியில்
இன்ஷா அல்லாஹ்…..
05.01.13 – சனிக்கிழமை இரவு 9மணி முதல் 9.30 வரையிலும்,
அதன் மறுஒளிபரப்பு
06.01.13 – ஞாயிறு காலை 8.30 மணி முதல் 9 மணி வரையிலும் ஒளிபரப்பாக உள்ளது.
இதனுடைய தொடர்ச்சி இரண்டாம் பாகம் :
அடுத்த 12.01.13 – சனிக்கிழமை இரவு 9மணி முதல் 9.30 வரையிலும்,
இரண்டாம் பாகத்தின் மறுஒளிபரப்பு
13.01.13 – ஞாயிறு காலை 8.30 மணி முதல் 9 மணி வரையிலும் சன் நியூஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.

காணத்தவறாதீர்கள்!

 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்