Monday, December 24, 2012

காவல்துறை மிருகங்களைக் கண்டித்து


விழிப்புணர்வு பிரசுரம் கொடுத்ததற்காக முஸ்லிம் வீடுகளில் நள்ளிரவில் நுழைந்து அப்பாவிகளைக் கைது செய்தும்

வீட்டில் இருந்த முஸ்லிம் பெண்களை புருஷனை வெளியே அனுப்பி விட்டு யாருடன்............ என்று கேவலமாகப் பேசி முஸ்லிம் பெண்களை இழிவுபடுத்திப் பேசியும்

நியாயம் கேட்ட முஸ்லிம்கள் மீது மிருகவெறி தாக்குதல் நடத்தி வெறியாட்டம் போட்டும்

முஸ்லிம்களுக்கு எதிராகப் போர் தொடுத்துள்ள காவல்துறை அதிகாரிகள் போர்வையில் நடமாடும் மனித மிருகங்களைக் கண்டித்தும் அவர்களைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்

திருவல்லிக்கேணியில் 29-12-2012 சனிக்கிழமை கண்டனப் பொதுக் கூட்டம் நடத்தப்படும்.

பீஜே அவர்கள் கண்டன உரை நிகழ்த்துகிறார்.

இன்ஷா அல்லாஹ் இந்தக் கூட்டம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்

காவல்துறை முஸ்லிம்கள் மீது துவங்கியுள்ள யுத்தத்திற்கு பதிலடி கொடுக்கும் மாபெரும் போராட்டம் அந்தக் கூட்டத்தில் அறிவிக்கப்படும்.

அறிவிக்கப்படும் போராட்டம் போலீசாரின் தடியகளுக்கும் துப்பாக்கித் தோட்டாக்களுக்கும் முஸ்லிம்கள் அஞ்ச மாட்டார்கள் என்பதை உணர்த்தும் வகையிலும், சிறைக்கு முஸ்லிம்கள் அஞ்ச மாட்டார்கள் என்பதை உணர்த்தும் வகையிலும் இருக்கும்.

சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் வரை ஓய்வில்லா போராட்டமும் அறிவிக்கப்படும். இன்ஷா அல்லாஹ்

29 -12-2012
அன்று நடைபெறும் கண்டனப் பொதுக் கூட்டத்துக்கும் அதைத் தொடர்ந்து நடக்கும் போராட்டத்திலும் பங்கு கொள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அழைக்கிறது.

அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டது, அனைத்து முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பு நடத்திய போராட்டத்தில் நடந்த அசம்பாவிதங்களால் முஸ்லிம்களின் போராட்டத்தை நாங்கள் இப்படித்தான் எதிர்கொள்வோம் என்று திமிராகப் பேசிய DC கிரி என்பவனையும் AC செந்தில் குமரன் என்பவனையும் பதவி நீக்கம் செய்யாமல் முஸ்லிம் சமுதாயம் ஓயாது என்பதை உணர்த்தி எதிர்காலத்தில் முஸ்லிம் சமுதாயத்தின் மீது இது போன்ற தாக்குதல் நடக்காமல் தடுத்திட அலைகடலென திரண்டுவருமாறு அழைக்கிறது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

மேலதிக விபரங்களுக்கு - www.tntj.net

Friday, December 21, 2012

வாராந்திர நிகழ்ச்சி - தலைமை - 21-12-2012


அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல தலைமையில் வாராந்திர நிகழ்ச்சி மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு இன்று (21-12-2012) நடைபெற்றது.
 
இந்த நிகழ்ச்சியில் சகோதரர்.முஹம்மது பந்தர் அப்துல் ஹமீது அவர்கள், "மறைவான ஞானம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
 
இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

வாராந்திர நிகழ்ச்சி - ரிஃபா - 21-12-2012


அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல ரிஃபா கிளையில் வாராந்திர நிகழ்ச்சி இஷா தொழுகைக்குப் பிறகு இன்று (21-12-2012) நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் சகோ.திருச்சி மொய்தீன் அவர்கள், "வெற்றியின் சோதனை" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். 

இந்த நிகழ்ச்சியில் ரிஃபா கிளையைச் சேர்ந்த நமது தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

மருத்துவ முகாம்

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல விடுமுறை தினத்தை சிறந்த முறையில் கழிக்க மற்றும் மக்களுக்கு பயனுள்ள வகையில் அமைய கடந்த 17-12-2012 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இரத்த தான, இரத்த அழுத்தம் இரத்தத்தில் சர்க்கரை கண்டறியும் முகாம் மற்றும் கண் பரிசோதனை முகாம் போன்ற முகாம்கள் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அதிகமான மாற்று மத சகோதரர்களும் கலந்து கொண்டு பயன் பெற்றனர். குறிப்பாக இரத்த தான முகாமில் மனிதநேயத்தை பறை சாற்றும் விதமாக பல மாற்று மத அன்பர்களும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும் அதிகமான சகோதரர்கள் குருதி கொடை அளித்தனர்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் அமைக்கப்பட்டிருந்த இரத்த பரிசோதனை முகாம்களிலும் அதிகமான மாற்று மத சகோதரர்கள் உள்பட பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாற்று மத சகோதரர்களுக்கு இஸ்லாத்தை அறிந்து கொள்ளும் வகையில் பல புத்தகங்களை இலவசமாக வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பெரும் திரளாக மக்கள் கலந்து கொண்டனர். எல்லாப்புகழும் இறைவனுக்கே!!!

குழந்தைகளுக்கான வகுப்பு



அல்லாஹ்வின் கிருபையால், குழந்தைகளுக்கான குர்ஆன் வகுப்பு கடந்த 16-12-2012 அன்று நடைபெற்றது. 

இந்த வகுப்பில் அரபி ஓதித்தருதல், சிறிய சூராக்களை மனனம் செய்தல், சிறிய துஆக்களை மனனம் செய்தல் போன்றவற்றையும் கற்றுக் கொடுக்கப்படுகிறது.

இதில் அதிகமான குழந்தைகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்!!!! 

Friday, December 7, 2012

வாராந்திர நிகழ்ச்சி - தலைமை - 07-12-2012

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல தலைமையில் வாராந்திர நிகழ்ச்சி மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு இன்று (07-12-2012) அன்று நடைபெற்றது.

 
இந்த நிகழ்ச்சியில் சகோதரர்.வடகரை ஜெய்லானி அவர்கள், "உலகமா? மறுமையா?" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
 
இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

குழந்தைகளுக்கான வகுப்பு


அல்லாஹ்வின் கிருபையால், குழந்தைகளுக்கான குர்ஆன் வகுப்பு கடந்த 10-12-2012 அன்று நடைபெற்றது. 

இந்த வகுப்பில் அரபி ஓதித்தருதல், சிறிய சூராக்களை மனனம் செய்தல், சிறிய துஆக்களை மனனம் செய்தல் போன்றவற்றையும் கற்றுக் கொடுக்கப்படுகிறது.

இதில் அதிகமான குழந்தைகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்!!!! 
 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்