Saturday, March 31, 2012

வாராந்திர நிகழ்ச்சி - ரிஃபா - 30-03-2012

அல்லாஹ்வின் கிருபையால், ரிஃபா கிளையில் பயான் நிகழ்ச்சி நேற்று (30-03-2012) இஷா தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில்சகோ.ஜெய்லானி அவர்கள், "சொற்பொழிவும் நாமும்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.



இதில் நமது ரிஃபா பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

வாராந்திர நிகழ்ச்சி - ஹித் - 30-03-2012


அல்லாஹ்வின் கிருபையால், ஹித் கிளையில் பயான் நிகழ்ச்சி வெள்ளியன்று (30-03-2012) மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது.

இதில் சகோ.ஹாஜா குத்புதீன் அவர்கள், "உறுதியான ஈமானுக்கு என்ன வழி" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இதில் நமது ஹித் பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

வாராந்திர நிகழ்ச்சி - 30-03-2012


அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல தலைமையில் வாராந்திர நிகழ்ச்சி மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நேற்று (30-03-2012) நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில்சகோ.அப்துல் ஹமீது அவர்கள், "இஸ்லாமும் இன்றைய முஸ்லீம்களும்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

Thursday, March 29, 2012

இலங்கைக்கு எதிரான கேலிக் கூத்தான தீர்மானம்



இலங்கைக்கு எதிராக ஐநா சபையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் குறித்து காரசாரமான வாதப்பிரதி வாதங்கள் தூள் பறக்கின்றன. இந்த விவாதங்கள் அனைத்தும் உண்மைக்குமாற்றமாகவும் உலக மக்களை ஏமாற்றும் வகையிலும் உள்ளன என்பது நமது நிலைப்பாடாகும்.

அமெரிக்காவும் அனைத்து உலக நாடுகளும் மக்களை முட்டாள்களாக்கப் பார்க்கின்றன என்பதற்கும். தமிழர்கள் பெயரில் இயக்கம் நடத்தும் அனைவரும் தமிழர்களை முட்டாள்களாக்கப்பார்க்கின்றனர் என்பதற்கும்  ஆதாரமாக ஐநாவில் கொண்டு வந்த தீர்மானம் அமைந்துள்ளதால் அறிவுடைய மக்கள் யாரும் இது போன்ற கிறுக்குத்தனங்களை ஆதரிக்க முடியாது. மக்களை ஏமாற்றும் இது போன்ற தீர்மான்ங்களை சிந்தனையாளர்கள் ஆதரிக்கமாட்டார்கள் என்பட்தை முதலில் நாம்தெளிவுபடுத்துகிறோம்.

நாட்டில் உள்ள ஊடகங்களும்தமிழக மக்களை உசுப்பேற்றி வந்த தமிழினத் தலைவர்களும் மக்களிடம் என்ன சொன்னார்கள்?இலங்கை அதிபர் ராஜ்பக்சே போர்க்குற்றம் செய்திருக்கிறார். நிராயுதபாணிகளைக் கொன்று குவித்துள்ளார். சரணடைய வந்ததமிழர்களை ஏமாற்றி சுட்டுத் தள்ளி இருக்கிறார். சிறுவர்களையும் பெண்களையும் கூட கொன்று குவித்துள்ளார். அவரைச் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி போர்க்குற்றம் செய்ததற்காக மரண தண்டனை வாங்கிக் கொடுக்கப் போவதுபோலவும் அந்த நேரம் நெருங்கி விட்டது போலவும் படம் காட்டினார்கள்.

திரும்பத் திரும்ப ஊடகங்கள் காட்டிய கோரக்காட்சிகளும் அதற்கு நியாயம் கிடைக்க உள்ளது என்ற பிரச்சாரமும் எந்த அளவுக்கு இருந்தன என்பதை நாம் அறிவோம். அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம் என்ன என்பதை அறியாமலே இவர்களே தீர்மானத்தைத் தயாரித்தவர்கள் போல வீறாப்பு காட்டினார்கள். ஆனால் ஐநாவில் கொண்டு வந்த தீர்மானத்தில் இவர்கள் சொன்னது போல் ஒன்றுமே இல்லை.

தீர்மானத்தின் விவரம்:

2009 மே மாதத்தில் இலங்கை அரசு விடுதலைப் புலிகள் இடையே போர் முடிவுக்கு வந்த நிலையில்போரின் இறுதிக் கட்டத்தில் ராணுவத்தினரின் மனித உரிமை மீறல்கள் மீது நடவடிக்கைபோரால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்த்தல் போன்றவற்றுக்கு இலங்கை அரசுக்கு ஆண்டு கால அவகாசம் அளிக்கப்பட்டது. அந்நாட்டு அரசு நியமித்ததெரிய வந்த பாடங்கள் மற்றும் மறுசீரமைப்பு கமிஷன்(எல்.எல்.ஆர்.சி.)’ அளித்த பரிந்துரைகளை அமல்படுத்தும் என்று அமெரிக்கா எதிர்பார்த்தது. ஆனால்,எல்.எல்.ஆர்.சி.யின் பரிந்துரைகள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்ததுமனித உரிமை மீறல்கள் மீது கூடுதல் நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய அவசியம் ஆகியவற்றை வலியுறுத்தி அமெரிக்கா தீர்மானம் கொண்டு வருகிறது. இதை நிறைவேற்ற ஐ.நா. மனித உரிமை கவுன்சில் பரிசீலிக்க வேண்டும். எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக இலங்கை அரசுடன்விவாதித்துஉரிய ஆலோசனைகளை ஐ.நா. கவுன்சில் அளிக்க வேண்டும்.

இது தான் தீர்மான வாசகம்

அதாவது இலங்கை அரசு நியமித்த கமிஷன் அளித்த பரிந்துரைகளை இலங்கை அரசு நிறைவேற்றவில்லையாம். அதை நிறைவேற்ற வேண்டுமாம். இது தான் தீர்மானத்தின்சாராம்சம்.

இதன் மூலம் இலங்கையில் வாழும் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு சில நிவாரணங்கள் கிடைக்கலாம். ஆனால் இவர்கள் விழுந்து விழுந்து படம் காட்டியதற்கு ஒரு தீர்வையும் காணோம். போர்க்குற்றவாளியை ஐநா பாதுகாப்புப் படை பிடித்து வந்துதூக்கில் போடப்போவது போல் என்னமோ நடக்கப் போவதாகப் பிரச்சாரம் செய்து வந்தார்கள். பூ இவ்வளவு தானாஇதற்குத் தானா இந்த ஆர்ப்பாட்டம்?

எந்தக் கொடுங்கோல் அரசாக இருந்தாலும் செய்ய வேண்டிய கொடுமைகளைச் செய்து விட்டு எஞ்சி இருப்பவர்களுக்கு சில வசதிகளைச் செய்து கொடுப்பது எல்லா நாடுகளிலும் நடக்கக் கூடிய ஒன்று தான். இந்தத் தீர்மானம் இல்லாவிட்டாலும் இதைச் செய்வதற்கு இலங்கைக்கு எந்தச் சங்கடமும் கிடையாது. தமிழர்களுக்கு வீடு கட்டிக் கொடுப்பதோவேலை வாய்ப்பு கொடுப்பதோ ராஜபக்சேவுக்குச் சிரமமானதல்ல. சொல்லப் போனால் நாட்டில் பிரச்சனை இல்லாமல் இருக்க இது அவருக்கு உதவவே செய்யும்.

தீர்மானம் என்ற பெயரில் உலக மக்கள் அனைவரையும் எல்லா அரசுகளும் ஏமாற்றியுள்ளன. அவர்களை மன்னிக்கலாம். ஆனால் தமிழர்களின் காவலர்களாக வேடம் போடும் தமிழ்த் தலைவர்கள் இந்தத் தீர்மானத்தை பார்த்த பிறகாவது அமெரிக்காவும் மற்றநாடுகளும் சேர்ந்து அயோக்கியத்தனம் செய்துள்ளன என்று கொந்தளிக்க வேண்டுமல்லவாஆனால் என்னால் தான் இந்த வெற்றி என்று கருனாநிதியும் ஜெயலலிதாவும் மற்ற அனைத்து தமிழ்ச் சமுதாயக் காவலர்களும் கூறி தமிழக மக்களைஏமாற்றுகின்றனர். ஒன்றும் இல்லாத ஒரு விஷயத்துக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தால் இவர்கள் அமெரிக்கக் கைக்கூலிகளாக இருக்க வேண்டும். அல்லது அடி முட்டாள்களாக இருக்க வேண்டும்.

பயனற்ற ஒரு விஷயத்துக்காக உலகமே சேர்ந்து குரல் கொடுத்தாலும் தவ்ஹீத் ஜமாஅத் அந்த வழியில் செல்லாது.

அடுத்ததாக ராஜ பக்சே போர்க்குற்றம் செய்தார் என்பது உண்மை தான். ஆனால் ராஜபக்சே சந்தித்த நிலையை எந்த நாடு சந்தித்தாலும் அந்த நாடுகள் ராஜபக்சே போல் தான் செயல்படும். தனது நாட்டில் தலைவலியைக் கொடுத்துக் கொண்டு ஆயுதம் தாங்கிப் போராடுவோரை அழிக்க இது போன்ற வழிமுறைகளைத் தான் கையாள்வார்கள். சில நாடுகள் இது போல் செய்யவில்லை என்றால் அவர்கள் ராஜ்பக்சே சந்தித்தது போன்ற நிலையைச் சந்தித்தது இல்லை. அந்த வாய்ப்பு இல்லாததால் தான் சில நாடுகள் போர்க்குற்றம் செய்யவில்லையே தவிர மற்ற எல்லா நாடுகளுமே போர்க்குற்றவாளிகள் தான்.

ஜப்பானில் சரணடைந்த மக்கள் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசி அப்பாவிகளைக் கொன்றதற்கு நிகரான ஒரு போர்க்குற்றம் உலகில் நடந்தது இல்லை. வியட்நாம்கவுதமாலா,ஆப்கானிஸ்தான்ஈராக் ஆகிய நாடுகளில் அமெரிக்க மிருகங்கள் நடத்திய போர்க் குற்றத்தில் இலட்சத்தில் ஒரு பங்காகக் கூட ராஜபக்சேயின் போர்க் குற்றம் இருக்கவில்லை.

ஏன் நமது நாட்டிலும் கூட மாவோயிஸ்டுகளுக்கு எதிராகவும் காஷ்மீர் மக்களுக்கு எதிராகவும் நடந்து கொண்டிருப்பதும் ராஜ்பக்சே செய்தது போன்ற குற்றம் தான். தமிழகத்தில் நக்ஸலைட்டுகளை ஒழிக்கிறோம் என்ற பெயரில் தேவாரம் என்ற அதிகாரி தலைமையில் நடந்த வேட்டைகளும் இந்த வகையானது தான். வீரப்பனைத் தேடுவதாகச் சொல்லிக் கொண்டு அப்பாவி கிராம மக்களைக் கொன்று புதைத்ததும்,சித்திரவதை செய்ததும் இந்த வகையானது தான். ஏன் சமீபத்தில் நடந்த என்கவுண்டர்களும் கூட இந்த வகையானது தான். இவை அனைத்துமே சட்டப்படி செய்யக் கூடாத காரியங்கள் தான். இலங்கை அரசு செய்ததும் இது போன்றது தான்.

 இதனால் தான் எந்த நாடும் போர்க்குற்றம் தொடர்பான தீர்மானங்களைக் கொண்டு வருவதுமில்லை. ஆதரிப்பதும் இல்லை. நாளை நமக்கு எதிராகவும் இது போன்ற தீர்மானங்கள் வந்து விடுமே என்ற அச்சம் தான் இதற்குக் காரணம்.

இதன் காரணமாகவும் நாம் இதை ஆதரிக்க முடியாது. போர்க்குற்றம் என்று தீர்மானம் கொண்டு வந்தால் ராஜ்பக்சே போல் செயல்பட்ட ஜார்ஜ் புஷ் உட்பட அனைவருக்கும் எதிராகத் தீர்மானம் கொண்டு வரவேண்டும். உலகை ஏமாற்ற பெரிய போர் குற்றவாளி சிறிய போர்க்குற்றவாளிக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தால் அதை ஆதரிக்க முடியாது. இந்தக் காரணத்தாலும் இந்தத் தீர்மானத்தை நாம் ஆதரிக்க முடியாது.

மேலும் இலங்கை அரசு எந்த மாதிரியான போர்க்குற்றம் செய்ததோ அதே போன்ற போர்க் குற்றங்களைச் செய்தவர்கள் தான் விடுதலைப்புலிகள்.

யாழ்ப்பானம் உள்ளிட்ட தமிழர் பகுதிகளில் இருந்து சொத்துக்கள் அனைத்தையும் பறித்துக் கொண்டு முஸ்லிம்களை வெளியேற்றினார்கள். ஒரு முஸ்லிம் கூட அங்கே இல்லாதவகையில் துடைத்து எறிந்தனர்.

மேலும் கிழக்கு மாகான முஸ்லிம்கள் வசிக்கும் ஊர்களுக்குள் புகுந்து பள்ளிவாசல்களில் தொழுது கொண்டிருந்த முஸ்லிம்களைச் சுட்டுக் கொன்ற மாபாவிகள் தான் விடுதலைப் புலிகள்.

நாங்கள் இலங்கை சென்றிருந்த போது கொழும்பில் இருந்து புறப்பட இருந்த நாளில் இலங்கை விமான நிலையத்தில் திடீர் தாக்குதல் நடத்தி கொன்று குவித்தார்களே அவர்கள் அனைவரும் அப்பாவி மக்கள் தான். அரை  மணி நேரம் நாங்கள் முன்னதாகச்சென்றிருந்தால் அந்தப் பட்டியலில் நாங்களும் இடம் பெற்றிருப்போம்.

கணக்கெடுத்துப் பார்த்தால் ராஜபக்சேயை விட அதிகமான அப்பாவிகளைக் கொன்றவர்கள் தான் விடுதலைப் புலிகள். அவர்களும் போர்க் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட வேண்டும்.அவர்களை ஆதரிப்பவர்களும் போர்க் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட் வேண்டும். அப்படி இருந்தால் தான் போர்க்குற்றம் குறித்த தீர்மானம் நேர்மையானதாக இருக்க முடியும்.

புலிகள் ஒழித்துக் கட்டப்பட்ட பின்னர் தான் தமிழர்களும் முஸ்லிம்களும் இலங்கையில் நிம்மதியாக வாழ முடிகிறது என்பதை நியாயமான பார்வை உள்ள யாரும் மறுக்கமாட்டார்கள்.

எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உலக முஸ்லிம் சமுதாயத்தால் மறக்க முடியாத விடுதலைப் புலிகளின் வெறியாட்டக் காட்சிகளில் சில.








காத்தாங்குடி பள்ளிவாசலில் தொழுது கொண்டிருந்த மக்கள் மீது புலி பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தி சிறுவர்கள் முதியவர்கள் என எந்த வித்தியாசமும் பார்க்காமல் ராஜ பக்சேய்யைவிட படு பயங்கரமான குற்றத்துக்கு இவை சாட்சிகள். ராஜ பக்ச்சே கோவிலுக்குள் அல்லது சர்ச்சுக்குள் புலிகள்நடத்தியது போன்ற பயங்கரவாதத்தை நிகழ்த்தியதில்லை .
-ஆன்லைன் பிஜே 

Saturday, March 24, 2012

வாராந்திர நிகழ்ச்சி - 23-03-2012


அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல வாராந்திர நிகழ்ச்சி மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நேற்று (23-03-2012) நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சகோ.ஜெய்லானி அவர்கள், "சிந்திக்க ஒரு நிமிடம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

வாராந்திர நிகழ்ச்சி - ரிஃபா - 23-03-2012


அல்லாஹ்வின் கிருபையால், ரிஃபா பகுதியில் பயான் நிகழ்ச்சி நேற்று (23-03-2012) இஷா தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில்சகோ.நிரஞ்சர் ஒலி அவர்கள், "முன் மாதிரி முஸ்லீம்"என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இதில் நமது ரிஃபா பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

இந்த வார பிரசுரம் - 23-03-2012


Sunday, March 18, 2012

பணம் கொடுத்து மதமாற்றம் செய்யும் தொண்டு நிறுவனங்கள்



சென்னை, மார்ச்.18: அரசு சாரா போலி தொண்டு நிறுவனங்கள் குடிசைப் பகுதிகளிலும், ஏழைகள் வசிக்கும் பகுதிகளிலும் சேவை செய்கிறோம் என்ற பெயரில் பணம் கொடுத்து மதமாற்றம் செய்வது நாள்தோறும் அதிகரித்து வருவதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைவர் பீ.ஜைனுல் ஆபிதீன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

இந்தியாவில் கிறித்தவ மதத்தைச் சேர்ந்த அரசு சாரா போலி தொண்டு நிறுவனங்கள் குடிசைப் பகுதிகளிலும், ஏழைகள் வசிக்கும் பகுதிகளிலும் சேவை செய்கிறோம் என்ற பெயரில் பணம் கொடுத்து மதமாற்றம் செய்வது நாள்தோறும் அதிகரித்து வருகிறது. பணமாகவும், வீடுகளாகவும் எப்படி இவர்களை இத்தனை கோடிகளைச் செலவிட்டு ஆள் பிடிக்க முடிகின்றது? தனியார் தொலைக்காட்சிகளில் மாதந்தோறும் பல லட்சம் ரூபாய்கள் கட்டணம் செலுத்தி எப்படி நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட மதப்பிரச்சார நிகழ்ச்சிகளை நடத்த முடிகிறது என்ற சந்தேகங்களுக்கு இப்போதுதான் அரசின் சார்பில் விடையளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, ஜெர்மனி, பிரிட்டன், இத்தாலி, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து ஆண்டுதோறும் 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் அந்நியப் பணம் வருவதாகவும், இவ்வாறு அந்நிய நாட்டு பணம் பெறக்கூடிய 22 ஆயிரம் நிறுவனங்கள் உள்ளதாகவும் மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. தமிழகத்துக்கு மட்டும் ஆண்டு தோறும் சுமார் 2000 கோடி ரூபாய் வருகின்றன என்றும், சென்னைக்கு மட்டும் 871 கோடி ரூபாய் வருகின்றது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

எவ்வளவு நிதி வந்துள்ளது என்பதை அறிவித்துள்ள மத்திய அரசு, ஏழை மக்களின் வறுமையைப் பயன்படுத்தி மதத்திற்கு ஆள் பிடிப்பதற்காகவே அந்தப் பணத்தில் 90 சதவிகிதம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற உண்மையை மட்டும் இருட்டடிப்பு செய்துள்ளது.

சாதராண பொதுமக்களுக்குக்கூட தெரிந்த இந்த உண்மை மத்திய அரசுக்குத் தெரிந்திருந்தும் இதை மத்திய அரசு இருட்டடிப்பு செய்தது ஏன் என்று புரியவில்லை.

சுதந்திரப் போராட்ட காலத்தில்தான் திருச்சபைகள் வெள்ளையர்களுக்கு அடிமைச் சேவகம் செய்தார்கள் என்றால், நாடு சுதந்திரம் அடைந்த பின்னரும் அவர்களை எஜமானர்களாக ஆக்கிக் கொண்டு, அவர்களிடம் கூலி வாங்கிக் கொண்டு ஆள்பிடிப்பதைக் கண்டு கொள்ளாமல் இருப்பது தேசிய அவமானமாகும்.

இதுபோன்ற தேசவிரோத சக்திகளுக்கு அந்நிய நாடுகளில் இருந்து வரும் நிதியாதாரங்களை அறவே தடை செய்ய வேண்டும். இதை இரும்புக் கரம் கொண்டு மத்திய மாநில அரசுகள் ஒடுக்க வேண்டும். பணம் கொடுத்து மதமாற்றம் செய்து மனித குலத்தை இழிவுபடுத்தும் இவர்கள் சிறுபான்மையினர் என்ற போர்வையில் ஒளிந்து கொண்டு தப்பிக்க இடமளிக்கக்கூடாது என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்துகிறது.

அந்நிய சக்திகளின் ஏஜென்டுகளைக் கொண்டு இயங்கும் நிறுவனங்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாநிலம் முழுவதும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாபெரும் போராட்டங்களை நடத்தும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
-நன்றி: தினமணி

Saturday, March 17, 2012

வாராந்திர நிகழ்ச்சி - ரிஃபா - 16-03-2012


அல்லாஹ்வின் கிருபையால், ரிஃபா பகுதியில் பயான் நிகழ்ச்சி நேற்று (16-03-2012) இஷா தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில்சகோ.முபாரக் அவர்கள், "செல்வமும், இறை நம்பிக்கையும்"என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இதில் நமது ரிஃபா பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

வாராந்திர நிகழ்ச்சி - 16-03-2012


அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல வாராந்திர நிகழ்ச்சி மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நேற்று (16-03-2012) நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில்சகோ.நிரன்ஜர் ஒலி அவர்கள், "முன் மாதிரி முஸ்லீம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

Friday, March 16, 2012

உம்ரா வகுப்பு

அல்லாஹ்வின் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தாவா மற்றும் சமுதாய பணிகளில் சிறந்து விளங்குவதை அனைவரும் அறிந்ததே. அதே போல் அதன் கிளைகளாக செயல்பட்டு வரும் மண்டலங்களில் ஒன்றான பஹ்ரைன் மண்டலத்திலும் தாவா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு கட்டமாக, பஹ்ரைன் மண்டலத்தில் நமது தமிழ் பேசும் மக்கள் சிலர் அல்லாஹ் கூறியுள்ள உம்ரா என்ற வழிபாட்டை செய்ய திட்டமிட்டுள்ளனர். அந்த சகோதரர்களில் ஒருவர், நாம் வருடா வருடம் ஏற்பாடு செய்து சிறப்பாக நடந்த உம்ரா நிகழ்ச்சிகளில் கல்ந்து கொண்டிருக்கிறார். 

அவர் நம்மை அணுகி, "சில தமிழ் பேசக்கூடிய சகோதரர்கள் என்னோடு சேர்ந்து உம்ரா செல்ல இருக்கிறார்கள். அவர்களுக்கு நீங்கள் ஒரு உம்ரா சம்பந்தமான சட்ட திட்டங்கள் பற்றிய ஒரு வகுப்பு நடத்த முடியுமா?" என்று நம்மை அணுகினார்கள். 

அதற்கு நாம மறுக்காமல், தாரளாமாக செய்கிறோம் என்று ஒப்புக்கொண்டு இன்று (16-03-2012) அஸர் தொழுகைக்குப் பிறகு இந்த நிகழ்ச்சியை பஹ்ரைன் மண்டல தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

இதில் சகோ. அப்துல் ஹமீது அவர்கள் உம்ரா சம்பந்தமான சட்ட திட்டங்களை வந்திருந்த சகோதர சகோதரிகளுக்கு புரியக்கூடிய அளவில் மிக சிறப்பாக விளக்கினார்கள். மேலும் அவர்களது உம்ரா சம்பந்தமாக அவர்கள் கேட்ட சந்தேகங்களுக்கும் பதில் அளித்தார்கள்.

மேலும், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் உம்ரா சம்பந்தப்பட்ட விளக்கத்தை முன்பு ஆன்லைன் பிஜெ இணையதளத்திலிருந்து எடுத்து நமது பஹ்ரைன் மண்டல மக்களுக்கு உதவியாக இருக்கும் என்று மீள்பதிவு செய்த உம்ரா செய்யும் முறை புகைப்படங்களுடன் கூடியதை புத்தகமாக அடித்து அவர்களுக்கு கொடுக்கப்பட்டது. அதனுடன் மார்க்க சம்பந்தப்பட்ட சகோதரர் அல்தாஃபி ஆற்றிய உரை அடங்கிய ஏகத்துவ CD யும் அவர்களுக்கு வழங்கப்பட்டு நிகழ்ச்சி இனிதே நிறைவுபெற்றது. 

இதில் கலந்து அனைத்து சகோதர சகோதரிகளும் இந்த நிகழ்ச்சி சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் அமைந்திருந்து என்று கூறி விடை பெற்றனர்.

பஹ்ரைனில் அதிகமான தமிழ் பேசக்கூடிய ஜமாஅத்கள் இருந்தும் இவர்கள் நம்மை மட்டும் அணுகியது ஏகத்துவத்திற்க்கு தேம்புட்டும் வகையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Saturday, March 10, 2012

வாராந்திர நிகழ்ச்சி - ஹித் - 09-03-2012


அல்லாஹ்வின் கிருபையால், ஹித் பகுதியில் பயான் நிகழ்ச்சி வெள்ளியன்று (09-03-2012) மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது.

இதில் சகோ.மொய்தீன் அவர்கள், "தவ்பா (பாவ மன்னிப்பு)" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இதில் நமது ஹித் பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

வாராந்திர நிகழ்ச்சி - 09-03-2012


அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல வாராந்திர நிகழ்ச்சி மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு 09-03-2012 அன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சகோதரி.பெனஸிர் ஆலிமா அவர்கள், "பயனுள்ள கல்வி" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

வாராந்திர நிகழ்ச்சி - ரிஃபா - 09-03-2012


அல்லாஹ்வின் கிருபையால், ரிஃபா பகுதியில் பயான் நிகழ்ச்சி வெள்ளியன்று (09-03-2012)இஷா தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சகோ.ஜெய்லானி அவர்கள், "இலாபமா? நஷ்டமா?"என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இதில் நமது ரிஃபா பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

Saturday, March 3, 2012

மீண்டும் ஓடாமல், விவாதத்தை எப்பொழுது வைத்துக் கொள்வோம் என சொல்லுங்கள்!


விவாதத்தில் இருந்து எப்படி தப்பிப்பது என்பதை மட்டுமே  சான் குழுவினர் கவனத்தில் கொண்டு  கடிதம் எழுதுகின்றனர் என்பதற்கு மற்றுமொரு சான்றாக நேற்றையை (29-2-2012) அவர்களது மெயில் அமைந்துள்ளது.

”சரி நீங்க சொன்னபடியே உங்க மாநிலத்துக்கு வந்து நீங்க சொன்ன தலைப்புல  விவாதம் பன்ன நாங்க ரெடி நீங்க ரெடியாக? எப்பன்னு சொல்லுங்க என தெளிவாக அனுப்பிய மெயிலுக்கு அவர்கள் உண்மையில் விவாதம் செய்ய தயாராக இருந்தால் என்ன பதில் எழுதி இருக்கு வேண்டும் இன்ன தேதியில் வைத்துக் கொள்ளலாம் என எழுதி இருக்க வேண்டும்.
ஆனால் அவர்கள் ஆனால் அவர்கள் அவ்வாறு எழுதவில்லை.

அவர்களின் மழுப்பல் மெயில்:

Let the name of Yahweh, the only true name of God upon which all the true prophets have called, who in flesh was known by the name Lord Jesus Christ be glorified forever and ever. Amen.

Dear Friends at TNTJ,

We are in receipt of your partial reply dated February 28, 2012 to our email dated February 24, 2012. As you have mentioned that you will be sending another reply to our email dated February 24, 2012, we will wait to receive that as well before we respond to this partial reply.

If you cannot reply by March 3 as we requested, and require more time to respond fully, please take time till March 6. However, if you still require more time, do let us know by when you will be able to fully respond.

Or alternatively, if you have a change of mind and wants us to treat this reply as your full and final response to our email dated February 24, 2012, do let us know and we will respond to your suggestions. If not, we will respond to this partial email along with the response for your full email which is yet to be received.

Looking forward for a debate on Quran.

Thanks and regards,
SAN

இரு சாராரின் கடித போக்குவரத்துக்களை படிக்கும் எவரும் ”சான் குழுவினர் விவாதத்திலிருந்து தப்பிக்க மழுப்பிக் கொண்டே இருக்கின்றனர். இவர்களுக்கு விவாதம் செய்ய  திராணி இல்லை”  என்றே கருதுவார்கள்.

அந்த அவர்களது மழுப்பழுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றுமொரு அதிரடி  பதில் மின்னஞ்லை நேற்றே (29-2-2012) அனுப்பியது.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய தனக்கு மகனை ஏற்படுத்திக் கொள்ளாத எல்லாம் வல்ல ஒரே இறைவனாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்…

சான் குழுவினருக்கு,

உங்களது 24.02.2012 மெயிலில் உள்ள பொய்களுக்கும் புரட்டுகளுக்கும் பதில் சொல்வது அவசியமாகும். எனினும், விவாதம் நடைபெற வேண்டும் என்பது எங்களது முக்கிய நோக்கமாகும். அதனால் தான் விவாத ஒப்பந்தத்துக்குச் சமந்தமில்லாத விஷயங்களுக்கு பதில் எழுதுவதை தள்ளிவைத்து விட்டு விவாதம் தொடர்பான விஷயங்களை மட்டும் எழுதினோம்.

விவாத ஒப்பந்தத்துக்குச் சமந்தமில்லாத விஷயத்துக்குப் பதில் எழுதிக் கொண்டு விவாதத்துக்கு வராமல் நீங்கள் திசை திருப்புவதற்கு இடம் தரக்கூடாது என்பதே இதற்குக் காரணமாகும்.

அதனால்தான் உங்களது பொய்யான செய்திகளுக்குப் பதில் சொல்லும் எங்களது உரிமையைச் சற்று தாமதப்படுத்திவிட்டு, விவாதம் செய்வதற்கு நாங்கள் தயார் நீங்கள் ஏற்பாடு செய்யுங்கள் என்று விவாதத் தேதிகளையும் குறிப்பிட்டு உங்களுக்கு நேற்று பதில் அனுப்பினோம்.

இதன் பிறகும் விவாத ஏற்பாடுகளைச் செய்யாமல் உங்களுக்கு வசதியான தேதிகளையும் குறிப்பிடாமல் வழக்கம் போல் மழுப்பலான பதிலை அனுப்பியுள்ளீர்கள்.

உங்கள் பொய்களுக்குப் பதிலளிக்கும் உரிமையை நாங்கள் விட்டுத் தரமாட்டோம். விவாத ஒப்பந்தத்துக்குச் சமந்தமில்லாத விஷயங்களுக்கு விவாதத்தின் போது கூட நாங்கள் பதிலளிக்கலாம். அல்லது விவாதம் முடிந்த பின்னர் கூட நாங்கள் பதிலளிக்கலாம். அது எங்கள் வசதியைப் பொருத்த விஷயம். அந்தப் பதிலுக்கும் தற்போது நடக்க வேண்டிய விவாதத்துக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை.

எங்கள் பதில் என்னவாக இருந்தாலும் விவாத ஒப்பந்த்துக்கு அது சம்மந்தமில்லாத விஷயம் என்பதால் உங்களது கொச்சியில் உங்களது ஏற்பாட்டில் நீங்கள் சொல்லும் தலைப்பிலேயே விவாதம் செய்யத் தயார் என்று நாங்கள் ஏற்கனவே எழுதிய நிலைபாட்டுக்குத் தான் நீங்கள் பதிலளிக்க்க் கடமைப்பட்டுள்ளீர்கள்.

விவாத ஒப்பந்தத்துக்குச் சமந்தமில்லாத உங்களது பொய்களை அம்பலப்படுத்தி நாங்கள் எப்போது எழுதுகிறோமோ அப்போது நீங்கள் பதில் தந்தால் போதும். அது உங்களைப் பொய்யர்கள் என்றும் உலகிற்குத் தோலுரித்துக் காட்டும் கடிதமாகத் தான் அது இருக்குமே தவிர விவாத ஒப்பந்தம் சம்பந்தமானவை அல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

எனவே தாமதமில்லாமல் கொச்சி காவல்துறை ஆணையரை அணுகி அனுமதி ஆணையைப் பெற்று அரங்கை முன்பதிவு செய்து விவாத ஏற்பாடுகளைச் செய்யும்படி கேட்டுக் கொள்கிறோம்.

இதுகுறித்து நாங்கள் ஏற்கனவே எழுதிய மெயிலின் வாசகத்தை உறுதி செய்யும் வண்ணமாக அதன் முக்கிய பகுதியை கீழே தருகிறோம்.
  • ஆகவே, உங்கள் கொச்சியிலேயே வந்து மீண்டும் ஒரு முறை குர்ஆன் இறைவேதமா? என்ற தலைப்பில் விவாதிக்கத் தயாராக உள்ளோம். ஏற்கனவே நடந்த இந்த விவாதத்தை நாங்கள் லைவ் ரிலே பண்ணினோம். அதை நீங்கள் முழுமையாகப் பார்த்தீர்கள். முடிந்தால் அதற்குப் பதில் தயாரித்து வாருங்கள்.
  • இந்த விவாதம் முடிந்த மறு வாரம் சனி ஞாயிறுகளில் ஓடி ஒளிந்தது யார் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற வேண்டும்.
  • போலீஸ் அனுமதியைப் பெறுவதற்கு நீங்கள் தனித்தே பொறுப்பேற்றதால் நீங்களே முறையான அனுமதியைப் பெற்று விவாதம் நடக்கும் தேதிக்கு பதினைந்து நாட்களுக்கு முன்னதாக அதன் ஒரிஜினலை எங்களுக்கு அனுப்பித் தரவேண்டும்.
  • எங்கள் தரப்பில் 150 நபர்கள் கலந்து கொள்வார்கள். (அவர்கள் பயணச்சீட்டு முன்பதிவு செய்வதற்கு வசதியாக போலீஸ் அனுமதியைப் பதினைந்து நாட்களுக்கு முன்னரே தர வேண்டும்.)
  • காவல்துறையில் அனுமதி பெறும் போது முஸ்லிம்களுக்கும் கிறித்தவர்களுக்கும் இந்த தலைப்பில் நடத்தப்படும் விவாதத்துக்கு அனுமதி என்று தெளிவாக இருக்க வேண்டும். தெளிவற்ற முறையில் ஏதோ ஒரு நிகழ்ச்சி என்பது போல் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் பின்னர் விபரம் தெரிந்தவுடன் அனுமதியை மறுக்கும் நிலை ஏற்படும்.
  • சென்னையில் விவாதம் செய்ய நீங்கள் தயார் என்று சொன்னீர்கள். ஆனால் நேரடி ஒளிபரப்பு செய்ய போலீஸ் தடை விதித்துள்ளது என்று தான் மறுத்தீர்கள். எனவே நீங்கள் வாங்கும் அந்த போலீஸ் அனுமதியில் தொலைக்காட்சியிலும் இன்டர்நெட்டிலும் நேரடி ஒளிபரப்புச் செய்யலாம் என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
  • நீங்கள் ஒப்புக் கொண்டபடி இதற்கான செலவுகளை நீங்களே ஏற்றுக் கொள்வதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை.
    மார்ச் 17, 18 அல்லது மார்ச் 24, 25 அல்லது மார்ச் 31, ஏப்ரல் 1 அல்லது ஏப்ரல் 7, 8 அல்லது ஏப்ரல் 14, 15 அல்லது ஏப்ரல் 21, 22 அல்லது ஏப்ரல் 28, 29
  • ஆகிய ஏதாவது தேதிகளில் உங்களுக்கு வசதியான தேதியைத் தேர்வு செய்து எங்களுக்கு தாமதமின்றி தெரிவிக்கவும்.
  • இதில் எந்தவொன்றை நீங்கள் ஏற்க மறுத்தாலும் நீங்கள் ஒடி ஒளிந்தீர்கள் உறுதிபட தெளிவாகிவிடும்.
உங்களுக்கு வசதியான தேதியையும் விவாத ஏற்பாடுகளை துவங்கி விட்டோம் என்ற உங்களின் பதிலை மார்ச்-3 ஆம் தேதிக்குள் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.


மாதாந்திர ஆன்லைன் நிகழ்ச்சி - 02-03-2012


அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல மாதாந்திர ஆன்லைன் நிகழ்ச்சி 02-03-2012 அன்று மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நமது மண்டல நிர்வாகிகளின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.

இன்றைய நிகழ்ச்சியில் தாயகத்திலிருந்து மெளலவி.அப்துந் நாஸிர் அவர்கள் "மலக்குமார்களின் சாபமும் துஆவும்" என்ற தலைப்பில் ஆன்லைன் மூலம் புரேக்ஜடர் உதவி கொண்டு உரை நிகழ்த்தினார்கள்.

இதில் சகோதரர் அவர்கள் மலக்குமார்கள் நமக்காக் எப்பொழுதேல்லாம் சாபம்யிடுகின்றனர், எப்பொழுதேல்லாம் துஆ செய்கின்றனர் என்பதை குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் எடுத்துரைத்தார்கள்.

இந்த உரையை தொடர்ந்து நமது பஹ்ரைன் வாழ் தமிழ் சகோதர, சகோதரிகளின் மார்க்க சந்தேகங்களுக்கும் குர்ஆன் ஒளியில் தெளிவாக விளக்கினார்கள். 

இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் பெரும் திரளாக கலந்து கொண்டு பயனடைந்தார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

வாராந்திர நிகழ்ச்சி - ரிஃபா - 02-03-2012


அல்லாஹ்வின் கிருபையால், ரிஃபா பகுதியில் பயான் நிகழ்ச்சி வெள்ளியன்று (02-03-2012)இஷா தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில்சகோ.யாசர் அரஃபாத் அவர்கள், "எதில் போட்டி"என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இதில் நமது ரிஃபா பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.
 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்