Saturday, June 30, 2012

வாராந்திர நிகழ்ச்சி - ரிஃபா - 29-06-2012


அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல ரிஃபா கிளையில் வாராந்திர நிகழ்ச்சி இஷா தொழுகைக்குப் பிறகு நேற்று (29-06-2012) நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் சகோ.வடகரை ஜெய்லானி அவர்கள், "ஏன் இத்தனை கட்டுப்பாடு?" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். 

இந்த நிகழ்ச்சியில் ரிஃபா கிளையைச் சேர்ந்த நமது தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

வாராந்திர நிகழ்ச்சி - ஹித் - 29-06-2012


அல்லாஹ்வின் கிருபையால், ஹித் கிளையில் பயான் நிகழ்ச்சி வெள்ளியன்று (29-06-2012) அன்று மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது. 


இதில் சகோதரி.பெனாஸிர் அரஃபாத் ஆலிமா அவர்கள், "முகஸ்துதி" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இதில் நமது ஹித் பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

வாராந்திர நிகழ்ச்சி - தலைமை - 29-06-2012


அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல தலைமையில் வாராந்திர நிகழ்ச்சி மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நேற்று (29-06-2012) அன்று நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் சகோதரர்.பந்தர் அப்துல் ஹமீது அவர்கள், "பட்டோலைகள் விரிக்கப்படும் நாள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

Friday, June 29, 2012

இளைய தலைமுறைக்காக!



உலகப்படைப்பாளனாகிய அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்:
அல்லாஹ்வே உங்களைப் படைத்தான். பின்னர் உங்களை கைப்பற்றுவான். அறிந்ததற்குப் பின் எதையும் அறியாதவராக ஆகிட முதிர்ந்த வயது வரை தள்ளப்படுவோரும் உங்களில் உள்ளனர். அல்லாஹ் அறிந்தவன். ஆற்றலுடையவன். (அல் குர்ஆன்: 16:70) 

அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:  என் சமுதாயத்தவரின் அழிவு விவரமில்லாத இளைஞர்களின் கரங்களில் உள்ளது (அபூஹூரைரா(ரலி) புகாரி)

இளமை! இறைவனின் படைப்பில் அற்புதமான அருட்கொடை! வளம் பொருந்திய ஆக்கங்களுக்கும், வீரதீரமிக்க சாகசங்களுக்கும் உண்டான செயல் களமே இளமை! தயக்கமும் தடுமாற்றங்களும் இன்றி தரம் உயர்ந்த கனவுகளை மெய்ப்படுத்த முயற்சிக்கும் அருமையான காலகட்டமே இளமை!

இந்த பூவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொன்றும் அது கொள்கையானாலும் சரி, கோட்பாடுகளானாலும் சரி புதிய புதிய விஞ்ஞான தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்களானாலும் சரி அல்லது குடும்பப்பராமரிப்பானாலும் சரி அதன் பின்னே ஒரு இளைஞனின் கனவும் உழைப்புமே அஸ்திவாரமாய் இருப்பதைக் காணலாம்.

கடினமாய் தோன்றுபவைகள் எல்லாம் இளைஞனின் கைபட்டு இலகுவாய் ஆன சம்பவங்கள் மனித வரலாற்றில் மண்டிக் கிடப்பதை சர்வசாதரணமாய் நாம் பார்க்க முடிகிறது.

நபிமார்களானாலும் நல்லடியார்களானாலும் இறையருள் பிரமிக்க வைக்கும் அவர்களின் செயல்பாடுகள் இன்றளவும் வழிகாட்டும் வரலாறுகளாய் ஆனது அவர்கள் இளமையில் வளர்த்த செயல்திட்டங்களேயாம்.

அதனால் தான் அரசியல் கட்சிகளும் சரி, மதம் சார்ந்த அமைப்புகளும் சரி இளைஞர்களை கருத்தில் கொண்டு தான் செயல்படுகின்றனர். இளைஞர்களை கவரும் விதத்தில் தங்களின் செயல்பாட்டை அமைத்துக் கொள்கின்றனர். இளைஞர்களை வசீகரித்து அவர்களின் அந்த தன்னலமில்லாத, எதையும் சாதிக்க வேண்டும் என்கிற உந்துதலை தங்களின் சுயவளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொண்டு, இளைஞர்களை பகடைக் காய்களாக ஆக்கி விடுகின்றனா.

ஆனால் இஸ்லாமிய மாhக்கத்தில் எல்லாம் வல்ல அல்லாஹூதஆலா இளைஞர்களைக் கொண்டு தான் தன்னுடைய மார்க்கத்தை உறுதிப்படுத்தி இருக்கிறான். மேலும் இளைஞர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று இறைவன் நமக்கு தன்னுடைய வேதப்புத்தகத்திலே பல நபிமார்களின் வரலாறுகள் மூலமாக கற்றும் தருகிறான். மேலும் இந்த உலகில் நம்மை படைத்த இறைவன் நாம் மரணித்தப் பின் கேள்வி கேட்கப்படும் நாளில் எழுப்பப்படும்போது பின்வரும் கேள்விகளுக்கு பதில் சொல்லியாக வேண்டும் என்ற தன்னுடைய திருத்தூதர் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் மூலமாக எச்சரிக்கையும் செய்கிறான்.

மறுமை நாளில் ஒரு மனிதன் ஐந்து கேள்விகளுக்கு பதில் சொல்லாத வரையில் அவனது கால்கள் அவன் நின்ற இடத்;தை விட்டு அகலாது. 1.வாழ்நாளை எப்படி கழித்தாய். 2.உன் இளமையை எப்படி செலவழித்தாய் 3,4. எவ்வாறு சம்பாதித்தாய்: எப்படி செலவழித்தாய் 5.கல்வியை எந்த வழியில் பயன்படுத்தினாய் என்ற கேட்கப்படும்.(புகாரி முஸ்லிம்)

இந்த ஐந்து கேள்விகளில் ஒன்றுதான் கொடுக்கப்பட்ட இளமையை எப்படி செலவு செய்தோம். அல்லாஹ்வின் பாதையில் கழித்தோமா? அல்லது வீணடித்தோமா? 

ஆனால் இன்றைய இளைஞன் அந்தோ பரிதாபம்! தன்னுடைய இலக்கு என்ன? நாம் பயணிக்க வேண்டிய பாதை எது? என்பதை தெரிந்து கொள்ளாமல் நடிகர்களின் பின்னாலும் நடிகைகளின் பின்னாலும் சென்று கொண்டிருக்கும் அவலம்.ஆனால் எப்படி இருக்க வேண்டும் என்பதை கண்ணியமிக்க அல்லாஹ் அழகான வரலாற்றின் மூலம் சொல்லிக் காண்பிக்கிறான்.  

கேட்போருக்கு யூசுப்பிடமும் அவரது சகோதரர்களிடமும் பல சான்றுகள் உள்ளன.(12:7) 

என் இறைவா! இப்பெண்கள் அழைப்பதை விட சிறைச்சாலை எனக்கு மிக விருப்பமானது. இவர்களின் சூழ்ச்சியிலிருந்து நீ என்னைக் காப்பாற்றா விட்டால் இவர்களை நோக்கிச் சாய்ந்து விடுவேன் என்றார். (12:33)

அல்லாஹ்வின் தூதரான யூசுப் (அலை) அவர்கள் எந்த வீட்டில் வளர்ந்தார்களோ, யார் அவர்களை வளர்த்தாரோ அந்த பெண் அவரை தன்னுடைய இச்சைக்கு இசையுமாறு அழைக்கும் போது, அவர்கள் அல்லாஹ்வின் பயத்தால் அந்த தவறுகளிலிருந்து தப்பித்துக் கொள்கிறார்கள். அதை விட்டும் விலகுகிறார்கள். அந்த பெண்களின் சூழ்ச்சியை விட சிறைச்சாலை தனக்கு நல்லது என இறைவனிடம் பிரார்த்தனை செய்ததாக அல்லாஹ் தன்னுடைய திருமறையில் சொல்லிக் காட்டுகின்றான். 

ஆனால் இன்றோ, கல்லூரிகளில் படிக்கும் காலங்களில் பெற்றோர்கள் எவ்வளவு சிரமம் கொண்டு தங்களை படிக்க வைக்கின்றார்கள் அதற்காக அவர்கள் சிந்தும் தியாகங்கள் என்னவென்றெல்லாம் சிந்திக்காமல் தன்னோடு படிக்கும் சக மாணவிகளை காதலித்து படிக்கின்ற காலத்தில் பெற்றோர்களை தவிக்க வைத்து விட்டு ஒடிப் போய் அதனால் சிறைச்சாலைக்கு சென்று தியாகி பட்டத்தைப் பெற்றுக் கொள்கின்றனர்.

அதே போல் சாதிக்க வேண்டிய இளைஞர்கள் சாதித்துக் காட்டிட வேண்டிய பருவத்தில் தங்களின் பொன்னான நேரங்களை மகளிர் பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரி வாசல்களில் கன்னியரின் கடைக்கண் பார்வைக்காக  காத்துக்கிடக்கும் அவலம்.

மேலும் யூசுப் (அலை) அவர்கள் இளைஞர்களுக்கு ஒரு முன்மாதிரியாக திகழ்கின்றார்கள். அவர்கள் சிறைச்சாலையில் இருக்கும்போதுகூட எப்போது விடுதலையாவோம் என்று கவலைப்படாமல் அவர்கள் அங்கு அல்லாஹ்வின் மார்க்கத்தை நோக்கி அழைத்தது சரியான முன்தமாதிரி   அவருடன் இரண்டு வாலிபர்களும் சிறையில் புகுந்தனர். அவ்விருவரில் ஒருவன் நான் திராட்சை மது பிழிவதாக நிச்சயமாக ஒரு கனவு கண்டேன் என்று கூறினான். மற்றவன், நான் என் தலைமீது ரொட்டி சுமப்பதாகவும் அதிலிருந்துபறவைகள் தின்பதாகவும் கனவு கண்டேன் என்று கூறினான்.(பின் இருவரும் யூசுபே) எங்களுக்கு இவற்றின் விளக்கத்தை அறிவிப்பீராக: மெய்யாக நாங்கள் உம்மை நன்மை செய்பவர்களில் ஒருவராகக் காண்கின்றோம். 

அதற்கு அவர் கூறினார்: உங்களிருவருக்கும் அளிக்கக்கூடிய உணவு உங்களிடம் வ(ந்துசே)ருவதற்கு முன்னரும் (இக்கனவுகளின்) பலனை நீங்களிருவரும் அடைவதற்கு முன்னரும் இவற்றின் விளக்கத்தை உங்களிலிருவருக்கும் கூறி விடுகிறேன். இது என் இறைவன் எனக்குக் கற்றுக் கொடுத்தவற்றிலிருந்தும் உள்ளவை அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்களும் மறுமையை நிராகரிப்பவர்களுமான சமூகத்தாரின் மார்க்கத்தை நான் நிச்சயமாக விட்டு விட்டேன்.   12: 36 –37) 

தன்னிடம் கனவுக்கு விளக்கம் கேட்டவர்களிடம் கேட்டதற்கு பதில் சொல்வதற்கு முன்னால் தான் யார், தன்னுடைய கொள்கை என்னவென்பதை தெளிவாகக் கூறி விடுகிறார்கள். ஆனால் இன்றைய இளைஞர்களோ? மேலும்,  என் முன்னோர்களான இப்ராஹிம், இஸ்ஹாக், யஃகூப் ஆகியோரின் மார்க்கத்தைப் பின்பற்றுகிறேன். அல்லாஹ்வுக்கு எதையும் நாங்கள் இணையாக்கலாகாது. இது எங்களுக்கும் மனித குலத்துக்கும் அல்லாஹ் செய்த அருள், எனினும் அநேகமான மக்கள் நன்றி செலுத்துவதில்லை. 
(12:38)

என் சிறைத் தோழர்களே! ஏராளமான கடவுள்கள் (இருப்பது) சிறந்ததா? அடக்கியாளும் ஒரே ஒருவனாகிய அல்லாஹ்வா? (12:39) 

தன்னோடு சிறைச்சாலையில் இருக்கும் தோழர்களின் சந்தேகங்களுக்கு விடையளிக்கும் முன், தனக்கு கிடைத்த வாய்ப்பை தருணத்தை எதிர்பார்த்ததுபோல் அவர்களிடம் ஏக இறைவனைப் பற்றி அழகான முறையில் எடுத்தியம்பியதை இன்றைய இளைஞர்கள் சதா தொலைபேசியிலும், வலைதளங்களிலும் மூழ்கி தங்களின் பொன்னான நேரத்;தை வீணடிப்பதை பார்க்க முடிகிறது. 

மேலும் இன்றைய இளைஞர்கள் சமுதாயச் சேவைகளில் ஈடுபடுகிறோம், மார்க்கத்தைப் போதிக்கின்றோம் என்கிற ஆவலில் செயல்படுவதை காண்கின்றோம். ஆனால் அவர்கள் தங்களின் வழிகாட்டிகளாக சமுதாயத்தை ஏமாற்றுபவர்களையும், தங்களின் அரசியல் வாழ்க்கை பிரகாசமாகயிருக்க வேண்டும் என்கிற கொள்கையுடையவர்களையும் எற்றுக் கொண்டு தங்களின் இம்மை வாழ்க்கையையும் மறுமை வாழ்க்கையையும் வீணடித்துக் கொள்கின்றனர். 

கண்ணியமிக்க அல்லாஹ் தன் திருமறையில்:
  
நிச்சயமாக இப்ராஹிம் ஒரு சமுதாயமாகவும்,  அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டவராகவும் உண்மை வழியில் நின்றவராகவும் இருந்தார். இணை கற்பிப்பவராக அவர் இருந்ததில்லை. (அல்குர்ஆன் 16: 120) 

மேலும், (முஹம்மதே) உண்மை வழியில் நின்ற இப்ராஹிமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக! என்று உமக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். அவர் இணைகற்பிப்பவராக இருந்ததில்லை. (அல்குர்ஆன்: 16:123)

தான் அறிந்துகொண்ட இறைவனை அந்த ஏக நாயனை தன்னைச் சார்ந்த சமூகமும் தன்னுடைய தகப்பனும் வணங்காமல் பல கடவுள்களையும் சிலைகளையும் வணங்கி வந்ததை கண்டு பொறுக்க இயலாமல் அதனால் எந்தவிதமான விளைவுகள் ஏற்பட்டாலும் கவலை கொள்ளாமல் தன்னுடைய இளமைப்பருவத்தை அல்லாஹ்வின் பாதையில் செலவிட்டதை அல்லாஹ் பெருமைப்படுத்திச் சொல்வதை திருக்குரானில் பல வசனங்களில் சொல்லிக் காட்டுகிறான்.

இப்ராஹிமை அவரது இறைவன் பல கட்டளைகள் மூலம் சோதித்தபோது அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார். உம்மை மனிதர்களுக்குத் தலைவராக்கப் போகிறேன் என்று அவன் கூறினான். எனது வழித்தோன்றல்களிலும்(தலைவர்களை ஆக்குவாயாக) என்ற அவர் கேட்டார். என் வாக்குறுதி (எமது வழித்தோன்றல்களில்) அநீதி இழைத்தோரைச் சேராது என்ற அவன் கூறினான்(அல்குர்அன் 2:124)

மேலும் அன்றைய இளைஞர்கள் அல்லாஹ்வின் திருப்தியையும், அதனால் கிடைக்கும் மறுமைப்பலனையும் மட்டுமே தங்களின் வாழ்வின் குறிக்கோளாக கொண்டனர்.

ஜுலைபிப்(ரலி) என்கிற நபித்தோழர் முதலிரவன்று தன் மனைவியுடன் இருந்த போது உஹது போருக்கு அல்லாஹ்வின் தூதரின் அழைப்பு வர, பதிதாக திருமணம் முடிந்திருக்கிறது என்ற பார்க்காமல் மனைவியை விட்டு பிரிந்து சென்று உஹதுப் போரில் ஷஹிதாக்கப்படுகிறார்கள்.

ஏன்? என்ன காரணம்? மறுமைக்குப் பின் உள்ள வாழ்வு வெற்றியடைந்த வாழ்வாக இருக்க வேண்டும் என்கிற ஆவல்தான்.ஆனால் இன்றைய இளைஞனோ தொழுகைக்குக் கூட பள்ளிக்கு வராமல் தன்னுடைய மறுமை வாழ்வை தொலைபேசியில் தொலைத்துக் கொண்டிருக்கின்றான். 

இப்படி அன்று சொர்க்கத்திற்காக வாளேந்தினார்கள். ஆனால் இன்று ஜிஹாத் எனும் பெயரில் அப்பாவிகளை குறிப்பாக தவறுகளை சுட்டிக் காட்டும் சகோதரர்களை தாக்குவதும், மிரட்டுவதும் இவர்களின் அழைப்புப் பணியாக உள்ளது. அது மட்டுமின்றி தங்களின் வாழ்வை இஸ்லாத்திற்கு முரணான வழிகளில் மாற்று மதத்தவர்களின் கலாச்சாரங்களை பின்பற்றி தங்களை நரகின் விறகாக ஆக்கிக் கொள்ளும் அவலநிலையும் அடங்கி விடுகிறது. 

அதேபோல் நபி (ஸல்) அவர்கள் ஏகத்துவத்தை மக்களிடம் கொண்டு செல்லும் போது அவர்களுக்கு உறுதுணையாக நின்றவர்கள் இளைஞர்கள் தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட காரணத்துக்காக தன்னுடைய செல்வ செழிப்பான வாழ்வை தூக்கி எறிந்து விட்டு, ஏழ்மையான வாழ்வை தேர்வு செய்து கொண்டது மட்டுமல்லாமல், மதினாவில் இஸ்லாத்தைக் கொண்டு சென்றதும் அந்த இளமையில் தான்! அதேபோல் அல்லாஹ்வின் ஒளி நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காக தன்னுயிரை உஹது போரில் நீத்த உத்தமர்கள் இந்த இளம் சஹாபாக்கள் என்பதை இன்றைய இளைஞர்கள் உணர வேண்டும். 

ஆகவே அருமை இளவல்களே! இப்பேர்ப்பட்ட தியாகிகளின் வாழ்க்கையை வழிகாட்டியாக கொண்டு நம்முடைய இளமைப் பருவத்தை வீண் விளையாட்டுக்களிலும், கேளிக்கைகளிலும் வீணடிக்காமல் அல்லாஹ்வின் பாதையில் செலவிட்டு மறுமை வெற்றிக்கு பாதையாக்கி கொள்ள அல்லாஹ் கிருபை செய்வானாக! 

Saturday, June 23, 2012

வாராந்திர நிகழ்ச்சி - தலைமை - 22-06-2012


அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல தலைமையில் வாராந்திர நிகழ்ச்சி மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நேற்று (22-06-2012) அன்று நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் சகோதரி.வடகரை ஜெய்லானி அவர்கள், "அமல்கள் செய்வதை விட்டும் நம்மை தடுப்பது எது?" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். 

இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

வாராந்திர நிகழ்ச்சி - ஹித் - 22-06-2012


அல்லாஹ்வின் கிருபையால், ஹித் கிளையில் பயான் நிகழ்ச்சி வெள்ளியன்று (22-06-2012) அன்று மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது.

இதில் சகோதரர்.பஞ்சலிங்கபுரம் அரஃபாத் அவர்கள், "கொள்கை உறவா? குருதி உறவா?" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இதில் நமது ஹித் பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

வாராந்திர நிகழ்ச்சி - ரிஃபா - 22-06-2012


அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல ரிஃபா கிளையில் வாராந்திர நிகழ்ச்சி இஷா தொழுகைக்குப் பிறகு நேற்று (22-06-2012) நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் சகோ.தென்காசி முபாரக் அவர்கள், "அல்லாஹ்வின் மறைவான அருளை (பரக்கத்) பெறுவது எப்படி" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். 

இந்த நிகழ்ச்சியில் ரிஃபா கிளையைச் சேர்ந்த நமது தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

வாராந்திர நிகழ்ச்சி - முஹர்ரக் - 21-06-2012

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல முஹர்ரக் பகுதியில் இஷா தொழுகைக்குப் பிறகு வியாழன் (21-06-2012) அன்று நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் சகோ.பஞ்சலிங்கபுரம் அரஃபாத் அவர்கள், "கொள்கையா? குடும்பமா?" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். 

இந்த நிகழ்ச்சியில் முஹர்ரக் பகுதியைச் சேர்ந்த நமது தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

Saturday, June 16, 2012

வாராந்திர நிகழ்ச்சி - தலைமை - 15-06-2012


அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல தலைமையில் வாராந்திர நிகழ்ச்சி மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நேற்று (15-06-2012) அன்று நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் சகோதரி.வடகரை மும்தாஜ் ஜெய்லானி அவர்கள், "சபையின் ஒழுங்குகள்" என்ற தலைப்பிலும், அவரை தொடர்ந்து சகோதரர்.கடையநல்லூர் நிரஞ்சர் ஒலி அவர்கள் "நல்லவனாவதும் தீயவனாவதும்" என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள். 

இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

வாராந்திர நிகழ்ச்சி - ஹித் - 15-06-2012


அல்லாஹ்வின் கிருபையால், ஹித் கிளையில் பயான் நிகழ்ச்சி வெள்ளியன்று (15-06-2012) அன்று மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது.

இதில் சகோதரர்.பந்தர் அப்துல் ஹமீது அவர்கள், "விசாரனை நாள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இதில் நமது ஹித் பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

வாராந்திர நிகழ்ச்சி - ரிஃபா - 15-06-2012


அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல ரிஃபா கிளையில் வாராந்திர நிகழ்ச்சி இஷா தொழுகைக்குப் பிறகு நேற்று (15-06-2012) நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் சகோ.திருச்சி யூசுஃப் அவர்கள், "சத்தியமே வெல்லும்என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். 

இந்த நிகழ்ச்சியில் ரிஃபா கிளையைச் சேர்ந்த நமது தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

வாராந்திர நிகழ்ச்சி - முஹர்ரக் - 14-06-2012

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல முஹர்ரக் பகுதியில் இஷா தொழுகைக்குப் பிறகு வியாழன் (14-06-2012) அன்று நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் சகோ.சேரன்மகா தேவி ஜாஹிர் அவர்கள், "ஆய்வு செய்து பின்பற்றுவோம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். 

இந்த நிகழ்ச்சியில் முஹர்ரக் பகுதியைச் சேர்ந்த நமது தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

Monday, June 11, 2012

ஜே அரசின் பச்சை துரோகம்: 1349 அரசு மருத்துவர்களில் ஒரு முஸ்லிம் கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை! TNPSC அலுவலகம் முற்றுகை!



முஸ்லிம்களுக்கு தமிழக அரசின் பச்சைத் துரோகம்!
முஸ்லிம்கள் கொந்தளிப்பு! – முற்றுகைப் போராட்டம் அறிவித்தது டிஎன்டிஜே!!
தமிழக அரசு ஒப்பந்தப் பயிற்சி மருத்துவர் பணி நியமனத்தில் மிகப்பெரிய பச்சைத் துரோகத்தை முஸ்லிம்களுக்கு இழைத்துள்ளது. முன்பெல்லாம் முஸ்லிம் சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட 3.5சதவீத இடஒதுக்கீட்டை 2 சதவீதம், அல்லது 2.5சதவீத வீதம் என இட ஒதுக்கீட்டைக் குறைத்து வழங்கி துரோகமிழைத்து வந்த தமிழகஅரசு தற்போது ஒரு இடம் கூட வழங்காமல் கோழி முட்டையை முஸ்லிம்களுக்கு வழங்கி தன்னுடைய முஸ்லிம் விரோதப் போக்கை வெளிப்படுத்தியுள்ளது.
நான் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை உயர்த்தித் தருவேன் என வாக்களித்து முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்ற ஜெயலலிதா, ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்த பின்னரும் அந்த வாக்குறுதி பற்றி வாய் திறக்கவில்லை. அடிக்கடி தேவையில்லாத விஷயங்களுக்கு எல்லாம் சட்டசபையில் அறிக்கை வாசிக்கும் ஜெயலலிதா முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு குறித்து வாய் திறந்ததில்லை.
இந்த நிலையில் ஜெயலலிதா முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை உயர்த்தித் தருவதற்குப் பதிலாக அவர் பாஷையில் பட்டை நாமம் போட்டுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் தமிழகத்தில் 1349 மருத்துவர்கள் அரசு மருத்துவப் பணிக்காகப் பணியமர்த்தப்பட்டுள்ளனர். முஸ்லிம்களுக்கான 3.5சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 47 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். இட ஒதுக்கீடு அடிப்படையில் மட்டும் இல்லாமல் பொதுப்பிரிவில் தகுதியான முஸ்லிம்கள் தேர்வு செய்யப்பட முடியும். அந்த வகையில் 20 நபர்களாவது தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலோ, பொதுத்தேர்வு அடிப்படையிலோ எந்த முஸ்லிமும் தேர்வு செய்யப்படவில்லை. ஒரே ஒரு முஸ்லிமைக் கூட இந்த அரசு நியமிக்கவில்லை.
மேலும் 34 ஆசிரியர்களில் ஒருவர் கூட முஸ்லீம் இல்லை
இதோ தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியல்:
அரசால் தேர்வு செய்யப்பட்ட மருத்தவர்களின் முழு பட்டியலை காண இங்கே கிளிக் செய்யவும்.
ஆசிரியர்கள் பற்றிய விபரம் அறிய இங்கே கிளிக் செய்யவும்

கடந்த முறை இதே போன்று மருத்துவ பணி நியமனத்திற்காக அழைக்கப்பட்ட 2438 மருத்துவர்களில் 88 முஸ்லிம்கள் உள்ளனர். சரியாக 3.5 % வழங்கப்பட்டுள்ளது. பொதுப்பிரிவில் முஸ்லிம்கள் தேர்வு செய்யப்படாததால் இதுவே முஸ்லிம்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
ஆனால் இப்போது செய்யப்பட்டுள்ள பச்சைத் துரோகம் இந்திய அரசியல் வரலாற்றில் பீஜேபி கூட செய்யத் துணியாத பச்சைத் துரோகமாகும். ஒரு முஸ்லிம் கூட நியமிக்கப்படக் கூடாது என்ற அளவுக்கு இவர்கள் வெறிபிடித்து அலைவதற்குக் காரணம் என்ன? 3.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்க சட்டம் இருந்தும் அதைக் கூட காலில் போட்டு மிதிக்கும் அளவுக்கு இவர்களுக்குத் துணிவு வரக் காரணம் என்ன?
இந்த அநீதி சரி செய்யப்பட்ட வேண்டும். முஸ்லிம்கள் பொதுப்பிரிவிலும் சேர்த்து 70 பேர் உடனடியாக நியமிக்க வேண்டும். இதற்குக் காரணமான அதிகாரிகள் மீதும், அமைச்சர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தனது அறிக்கையில் கூறியுள்ளதோடு சென்னை கிரீன்ஸ் ரோட்டிலுள்ள டிஎன்பிஎஸ்ஸி அலுவலகத்தை முற்றுகையிட்டு முஸ்லிம்களின் எதிர்ப்பைத் தெரிவிக்க, மாபெரும் முற்றுகைப் போராட்டத்தை 14.06.12 வியாழன் அன்று காலை 11மணிக்கு நடத்துவது என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சென்னை மாவட்டம் அறிவித்துள்ளது.
பயிற்சி ஒப்பந்த மருத்துவர்கள் பணிநியமனத்தில் மட்டுமல்லாது, நூலகர்களை பணியமர்த்திய விஷயத்திலும் இந்த துரோகம் தொடர்கின்றது.
தமிழ்நாட்டில் மொத்தம் 32 மாவட்டங்கள் உள்ளன. விழுப்புரம் மாவட்டத்தில் 41 நூலகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதிலும் ஒரு முஸ்லிமுக்குக் கூட இடம் வழங்கப்படவில்லை. இது போன்று தமிழகத்திலுள்ள 32 மாவட்டங்களிலும் நூலகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த 32 மாவட்டங்களிலும் இதுதான் நிலை என்று சொல்லப்படுகிறது. இதன் மூலம் தமிழக அரசு முஸ்லிம்களுக்கு மிகப்பெரும் துரோகம் செய்துள்ளது அம்பலமாகியுள்ளது. வேண்டுமென்றே திட்டமிட்டு முஸ்லிம்களை அனைத்து அரசுப்பணிகளிலும் அப்புறப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு இவ்வாறு செயல்பட்டு வருவது இதன் மூலம் உறுதியாகின்றது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சீருடைப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வாணையம் ஆகியவை மூலம் போட்டித் தேர்வு நடத்தி, தமிழக அரசு பணியாளர்களை நியமித்து வருகிறது. இதுபோல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலம் பதிவு மூப்பு அடிப்படையிலும் ஏராளமானோரை தமிழக அரசு பணிக்கு நியமித்து வருகிறது.
இது போக சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் என பல்லாயிரம் பேரை மாவட்ட ஆட்சியர் மூலம் தேர்ந்தெடுக்கிறது. நகராட்சி மூலம் பேட்ஜ் டிரைவர் போன்றவர்களும் பணியமர்த்தப்படுகிறார்கள். இந்த அரசு வேலை வாய்ப்புகள் அனைத்திலும் முஸ்லிம்கள் 3.5 சதவீத அடிப்படையில் நியமிக்கப்படவில்லை. மாறாக வஞ்சக எண்ணத்துடன் இவர்கள் ரகசியமாக புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்று முஸ்லிம்கள் குமுறுகின்றனர்.
முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிப்போம் என்று வெற்று வாக்குறுதி அளித்து முஸ்லிம்களை ஒரு புறம் ஏமாற்றிக் கொண்டு, மற்றொரு புறத்தில் அவர்களுக்கு ஏற்கனவே இருக்கும் 3.5 சதவீத இட ஒதுக்கீடையும் பறிக்கும் அ.தி.மு.க. வின் செயல் மிகவும் கண்டனத்திற்குரியது. எனவே தமிழக அரசு உடனே வெள்ளையறிக்கை வெளியிட்டு, முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீடு அமுல்படுத்தப்பட்ட நாள் முதல் இன்று வரை தமிழக அரசின் எத்தனை பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. அதில் முஸ்லிம்களுக்கான 3.5சதவீத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளனவா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
இட ஒதுக்கீடு அடிப்படையில் முஸ்லிம்களுக்கு வாய்ப்பு தந்திருந்தால் அதை தெளிவுபடுத்த வேண்டும். வாய்ப்புத் தராமல் முஸ்லிம்களை புறக்கணித்திருந்தால் அவர்களுக்கான வாய்ப்புகளை வழங்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு விடியோ


Saturday, June 9, 2012

வாராந்திர நிகழ்ச்சி - தலைமை - 08-06-2012


அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல தலைமையில் வாராந்திர நிகழ்ச்சி மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நேற்று (08-06-2012) அன்று நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் சகோ.பந்தர் அப்துல் ஹமீது அவர்கள், "விசாரனை நாள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். 

இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

வாராந்திர நிகழ்ச்சி - ரிஃபா - 08-06-2012


அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல ரிஃபா கிளையில் வாராந்திர நிகழ்ச்சி இஷா தொழுகைக்குப் பிறகு நேற்று (08-06-2012) நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் சகோ.திருச்சு மொய்தீன் அவர்கள், "முஸ்லீமாக மரணிப்போம்என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். 

இந்த நிகழ்ச்சியில் ரிஃபா கிளையைச் சேர்ந்த நமது தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

வாராந்திர நிகழ்ச்சி - முஹர்ரக் - 07-06-2012


அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல முஹர்ரக் பகுதியில் இஷா தொழுகைக்குப் பிறகு வியாழன் (07-06-2012) அன்று நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் சகோ.திருச்சி மொய்தீன் அவர்கள், "மூஸ்லிமாக மரணிக்க என்ன வழி" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். 

இந்த நிகழ்ச்சியில் முஹர்ரக் பகுதியைச் சேர்ந்த நமது தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

Saturday, June 2, 2012

வாராந்திர நிகழ்ச்சி - முஹர்ரக் - 31-05-2012


அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல முஹர்ரக் பகுதியில் இஷா தொழுகைக்குப் பிறகு வியாழன் (31-05-2012) அன்று நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் சகோ.திருச்சி யூசுஃப் அவர்கள், "சத்தியத்தை எடுத்து சொல்லுவோம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். 

இந்த நிகழ்ச்சியில் முஹர்ரக் பகுதியைச் சேர்ந்த நமது தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்


அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல மாதாந்திர ஆன்லைன் நிகழ்ச்சி நேற்று (01-06-2012) "இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்" என்ற கேள்வி பதில் நிகழ்ச்சியாக நமது மண்டல நிர்வாகிகளின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆரம்பத்தில் ஒரு சில தொழில் நுட்ப குறைபாடு காரணத்தினால் நிகழ்ச்சியை குறித்த நேரத்திற்கு ஆரம்பிக்க முடியாமல் தாமதமானது. இருந்தாலும் வந்திருந்த சகோதர சகோதரிகள் அதை பொருட்படுத்தமால் பொறுமையுடன் காத்திருந்தனர். 

அந்த இடைபட்ட நேரத்தில் நமது ஜமாஅத் சார்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ள சிறுவர் மற்றும் சிறுமியர்களுக்கான ஆதரவு இல்லம் சம்பந்தமான விடியோ கிளிப் அதனை தொடர்ந்து, தமிழக அரசு ஹஜ் பயணிகளுக்கு மானியம் என்ற பெயரில் ஹாஜிகளை ஏமாற்றி வருவதை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக விளக்கும் விடியோ போன்றவை ஒளிபரப்பப்பட்டது.

அதன் பிறகு ஒரு சில நிமிடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியான முஸ்லீம்களுக்கான் கேள்வி பதில் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது. 

இந்த கேள்வி பதில் நிகழ்ச்சியில் தாயகத்திலிருந்து சகோதரர். பி.ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள் வந்திருந்த சகோதர சகோதரிகளின் கேள்விகளுக்கு குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் மிகத் தெளிவாக விளக்கினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் பெரும் திரளாக கலந்து கொண்டு பயனடைந்தார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!
 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்