Friday, November 30, 2012

வாராந்திர நிகழ்ச்சி - ஹித் - 30-11-2012


அல்லாஹ்வின் கிருபையால், ஹித் கிளையில் பயான் நிகழ்ச்சி இன்று (30-11-2012) மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது.

இதில் "மறுமை நாள் அருகில் அமல்கள் தொலைவில்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்ததப்பட்டது.

இதில் நமது ஹித் பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

வாராந்திர நிகழ்ச்சி - ரிஃபா - 30-11-2012


அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல ரிஃபா கிளையில் வாராந்திர நிகழ்ச்சி இஷா தொழுகைக்குப் பிறகு இன்று (30-11-2012) நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் சகோ.சேரன் மகாதேவி ஜாஹீர் ஹூஸைன் அவர்கள், "நபிகள் நாயகத்தின் சிறப்புகள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். 

இந்த நிகழ்ச்சியில் ரிஃபா கிளையைச் சேர்ந்த நமது தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

Tuesday, November 27, 2012

குழந்தைகளுக்கான வகுப்பு


அல்லாஹ்வின் கிருபையால், குழந்தைகளுக்கான குர்ஆன் வகுப்பு கடந்த (26-11-2012) அன்று நடைபெற்றது. 

இந்த வகுப்பில் அரபி ஓதித்தருதல், சிறிய சூராக்களை மனனம் செய்தல், சிறிய துஆக்களை மனனம் செய்தல் போன்றவற்றையும் கற்றுக் கொடுக்கப்படுகிறது.

இதில் அதிகமான குழந்தைகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்!!!! 

Friday, November 23, 2012

ஆன்லைன் சிறப்பு நிகழ்ச்சி (23-11-2012)


அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல விடுமுறை தினத்தையொட்டி சிறப்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டு ஆன்லைன் நிகழ்ச்சி இன்று (23-11-2012) மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நமது மண்டல நிர்வாகிகளின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தாயகத்திலிருந்து சகோதரர். அப்துந் நாஸிர் அவர்கள் "முஹர்ரம் மாதமும் இஸ்லாமியர்களின் நம்பிக்கையும்" என்ற தலைப்பில் ஆன்லைன் மூலம் புரேக்ஜடர் உதவி கொண்டு உரை நிகழ்த்தினார்கள்.

அல்லாஹ் தனது திருமறையில் புனித மாதமாக சொல்லியுள்ள இந்த முஹர்ரம் மாதத்தை இன்றைய காலகட்டத்தில் முஸ்லீம்கள் எந்த அளவுக்கு கருத்தில் கொண்டுள்ளார்கள் என்பதையும், இந்த மாத 9 மற்றும் 10 ஆகிய நாட்களின் சிறப்பை மக்கள் எப்படி திரித்து விளங்கியிருக்கிறார்கள் என்பதையும் மிக அழகாக விளக்கினார்கள். 

இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் பெரும் திரளாக கலந்து கொண்டு பயனடைந்தார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

ஆஷூரா நோன்பு இஃப்தார் நிகழ்ச்சி

அல்லாஹ்வின் கிருபையால், இன்று முஹர்ரம் மாத 9ஆம் நாளான ஆஷூரா நோன்பை முன்னிட்டு நமது மண்டல தலைமை மர்கஸில் இஃப்தார் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டனர். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!! 

Wednesday, November 21, 2012

பற்றி எரியும் காசா, இஸ்ரேலுக்கு பக்கபலமாக செயல்படும் அமெரிக்கா! (வீடியோ) (Gaza Photo Updated)

கடந்த 6 நாட்களாக பாலஸ்தீன நாட்டின் காசா பகுதி மக்கள் மீது இஸ்ரேன் ராணுவம் குண்டு வீசி கொடூரமாண தாக்குதல்களை நடத்தி வருகின்றது. இதனால் காசா பகுதி எங்கும் தீ பற்றி எரிகின்றது.

பலியாகும் குழந்தைகள் அப்பாவி பொதுமக்கள்
ராக்கிட்டுகளை ஏவி அப்பாவி முஸ்லிம் மக்களை கொன்று குவித்து வருகின்றது. வீட்டில் துங்கிக் கொண்டிருந்தவர்கள், வாகனத்தில் குடும்பத்துடன் சென்று கொண்டிருந்தவர்கள் , கடை தெருவில் நின்று கொண்டிருந்தவர்கள் என அப்பாவி பொதுமக்கள் இதில் கொள்ளப்பட்டுவருகின்றனர்.
இன்று மதியம் வரை இஸ்ரேலின் தாக்குதலுக்கு 108 111 (செய்தியை எழுதி முடிப்பதற்குள் மேலும் 3 நபர்கள் கொள்ளப்பட்டுவிட்டனர்) நபர்கள் கொள்ளப்பட்டுள்ளனர்.
இதில் 27 பேர் பிஞ்சு குழந்தைகள் கொள்ளப்பட்டுள்ளனர் என்பது இஸ்ரேலின் அரக்க குணத்தையும் கொடூர பயங்கராவாத்தையும் காண்பிக்கின்றது. மேலும் இந்த தாக்குததில் 720 க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
பக்கபலமாக செயல்படும் ஒபாமாவின் அமெரிக்க அரசு
முஸ்லிம்களின் மீதனா இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு பின்னால் ஒபாமாவின் அமெரிக்க அரசு பக்க பலமாக உள்ளது என்பது தற்போது தெரியவந்துள்ளது.
அமெரிக்க தேர்தல்
கடந்த 2008 ஆம் ஆண்டு ஒபாமா வெற்றி பெற்றதும் தான் பயங்கரவாதி இஸ்ரேல் இதே போன்று காசா மீது தாக்குதல் நடத்தியது. இதில் 1400 அப்பாவி மக்கள் கொள்ளப்பட்டனர்.
தற்போதும் அதே போன்று ஒபாமா 2 வது முறையாக வெற்றி பெற்றதும் இஸ்ரேல் தாக்குதலை துவங்கியுள்ளது.
இஸ்ரேலின் பாதுகாப்பு வளயத்திற்கு அமெரிக்கா நிதி
இஸ்ரேல் தனது நாட்டை பாதுக்காத்து கொள்ள ”Iron Dome rocket-defense system” என்ற பாதுகாப்பு வளையத்தை வானில் உருவாக்கி வைத்துள்ளது. ராக்கிட்டுகள் தாக்கினாலும் அதை இந்த Iron Dome தடுத்து விடும். இஸ்ரேல் நாட்டின் முக்கிய நகரங்களில் இது தற்போது வானில் நிறுவப்பட்டுள்ளது.
விசயம் என்னவெனில் இதை உருவாக்க ஒபாமா அரசு தான் பொருளதார உதவி செய்துள்ளது கடந்த 2010 ஆண்டும் இந்த ஆண்டும் சேர்த்து மொத்ததம் 275 மில்லியன் டாலரை (ஒரு மில்லியன் டாலர் என்பது கிட்ட தட்ட 5.5 கோடி இந்திய ரூபாய்) இந்த பாதுகாப்பு வளையத்தை உருவாக்க ஒபாமா அரசு கொடுத்துள்ளது.
தற்போது இஸ்ரெலின் கொடூரமாண தாக்குதலுக்கு இந்த பாதுகாப்பு வளையம் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. பாதுகாப்பு வளையத்தினால் தன்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்ற தைரியத்தில் இஸ்ரேல் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கின்றது.
ஹிலாரியன் கருத்து
காசா மீதான தாக்குல் குறித்து மற்ற நாட்டு தலைவர்களிடம் மானங்கெட்ட ஹிலாரி பேசுகையில், இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது. உடனடியாக ஹமாஸ் தாக்குதலை நிறுத்த வேண்டும். ஹமாஸ் தாக்குதலை நிறுத்தினால் தான் சுமூக நிலை திரும்பும் எனக் கூறியுள்ளார்.
மேலும் ஹிலாரி,  தனது நாட்டை பாதுகாக்கும் உரிமை இஸ்ரேலுக்கு உள்ளது எனவும் மற்ற நாட்டு தலைவர்களிம் பேசும் போது சுட்டிகாட்டியுள்ளார்.
ஒபாமாவின் கருத்து
தற்போது சுற்று பயணத்தில் உள்ள அமெரிக்க அதிபர் ஒபாவும் இதே பொன்று பேங்காக்கில் கருத்து தெரிவித்துள்ளார்.
ஒபாமா கூறுகையில் , தனது நாடு ஏவுகணைகளால் தாக்கப்படக் கூடாது என்று இஸ்ரேல் நினைப்பதற்கு எல்லாவித உரிமையும் உள்ளது எனக் கூறியுள்ளார்.
அதே நேரத்தில் காசா மீது ராணுவ தாக்குதல் நடத்தாமல்  இஸ்ரேல் இதை செய்வது விரும்பக்கதது எனவும் ஒபாமா கூறியுள்ளார்.
”அமெரிக்க பக்க பலகமாக உள்ளது” அமெரிக்க நாட்டின் இஸ்ரேல் தூதர்
இரண்டாவதாக ஒபாமா கூறி இருப்பது உலக மக்களை ஏமாற்றுதற்கு என்ற உண்மை அமெரிக்க நாட்டின் இஸ்ரேல் தூதர் Michael Oren தற்போது  அளித்துள்ள பேட்டியில் தெளிவாகியுள்ளது.
அமெரிக்காவின் இரண்டு கட்சியும் இஸ்ரேலின் காசா தாக்குதலுக்கு பெரும்பான்மையான ஆதரவு அளித்து தீர்மானம் கொண்டுவந்துள்ளது.  எங்கள் நாட்டை பாதுகாக்க நாங்கள் எது வேண்டுமானாலும் செய்து கொள்ள அமெரிக்கா எங்களுக்கு முழு உதவி செய்து வருகின்றது.  வொயிட் ஹவுஸ் , காங்கிரஸ் உள்பட அமெரிக்காவின் அனைத்து  தரப்பு அரசு துறைகளிலிருந்தும் எங்களுக்கு ஆதரவு தருகின்றது.
மேற்கண்டாவாறு இஸ்ரேல் நாட்டின் வாஷிங்டன் அமெரிக்க தூதரர் பேட்டியளித்துள்ளார்.
அவர் பேட்டியின் முழு வீடியோ காண
அமெரிக்காவின் இரண்டு கட்சியும் இஸ்ரேலுக்கு உதவ தீர்மானம்
அமெரிக்காவின் இரண்டு  கட்சியும் சேர்ந்து உள்ளுக்குள் தீர்மானம் போட்டுக் கொண்டு காசாவை தாக்க இஸ்ரேலுக்கு  பக்க பலமாக இருந்து வருகின்றது.
தற்போது இஸ்ரேல் பயன்படுத்தும் பெரும்பாலான ஆயுதங்களில் அமெரிக்காவின் பெயர் இடம் பெற்றுள்தாக செய்திகள் தெரிவிக்கின்றது.
அமெரிக்காவின் நாடகம் தற்போது வெட்ட வெளிச்சாமாகியுள்ளது.
பொறுத்திருந்த ஒபாமா
அதிபர் தேர்தலுக்கு முன் செய்தால் அது தேர்தலை பாதிக்கும் என்பதற்காக ஒபாமா பொருத்து இருந்து அவர் வெற்றி பெற்றதும் கண்ணைகாட்டியவுடன் இஸ்ரேல் அமெரிக்காவின் முழு உதவியோடு தனது கொடுஞ்செயலை ஆரம்பித்துள்ளது.
இஸ்ரேலுக்கு ஆதரவாக ஆஸ்திரேலியா
அமெரிக்கா மட்டுமல்லாமல் ஆஸ்த்திரேலிய நாடும் இதற்கு ஆதவு அளித்து வருகின்றது, ஆஸ்திரேலிய நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் Bob Carr , ஹாமாஸ் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவது கண்டிக்க தக்கது எனக் கூறியுள்ளார்.
ஐரோப்பிய நாடுகள் மவுனம் காத்து ஆதரவு அளித்து வருகின்றது.
காசாவிற்கு உதவிக் கரணம் நீட்டிய ஈரான் அதிபர்
எனினும் உலகமே ஒன்று சேர்ந்து பிஞ்சு குழந்தைகள் , அப்பாவி பொதுமக்களை குண்டு வீதி தாக்கி கொன்று குவிப்பதற்கு ஆதரவு அளித்து வருகின்ற நிலையில் ஈரான் நாட்டு அதிபர் Mahmoud Ahmadinejad 150 டன் எடைகொண்ட கார்கோ கப்பலை காசாவிற்கு கடந்த ஞாயிற்றுகிழமை அனுப்பியுள்ளார்.
அதில் 270 உயர் ரக ஏவுகணைகள் இடம் பெற்றுள்ளது. இதில் 85 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து சென்று தாக்கக் கூடிய  Fajar-5 என்ற புது ரக ஏவுகணைகளும் இடம் பெற்றுள்ளது.
தாக்குதலை முடிவுக்கு கொண்டு வர எகிப்து நாடு இஸ்ரேலுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றது.
கண்டிக்க தக்கது
காசா மீது இஸ்ரேல் குண்டு வீசி தாக்குதல் நடத்தி அப்பாவி பிஞ்சு குழந்தைகளை கொன்று குவிப்பதை  அமெரிக்க போன்ற எந்த நாடுகளும் கண்டிக்கவில்லை.  மாறாக ஹமாஸ் அமைப்பை குற்றம் சாட்டி இஸ்ரேலுக்கு உதவி செய்து வருகின்றது.
111 நபர்கள் இதுவரை அநியமாக கொள்ளப்பட்டு இருப்பது எவரது கண்ணுக்கும் அநியாயமாக தெரியவில்லையா ? அல்லது அவர்கள் முஸ்லிம்களாக இருப்பதால் அவர்களுக்கு அது நியாயமாகபடுகின்றதா?
அப்பாவி பொதுமக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேலை கண்டிக்க திராணி இல்லாதவாகள் ஹாமஸ் இயக்கதை கூறை கூறுகின்றனர்.
இஸ்ரேலுக்கு தனது நாட்டை பாதுகாக்க உரிமை இருக்கின்றதாம் ஆனால் பாலஸ்தீனத்திற்கு தனது நாட்டை பாதுகாக்க உரிமை கிடையாது , இஸ்ரேல் என்ன செய்தாலும் பாலஸ்தீனம் அதை பொறுத்துக் கொள்ள வேண்டும் என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் கருத்துக்கள் மிகவும் அநியாயமானதாகும்,  மிகவும் கண்டிக்க தக்கதாகும்.
 தகவல் - டிஎன்டிஜெ.நெட்
 

Monday, November 19, 2012

முஹர்ரம் மாதமும் ஆஷூராவும்


காலங்களைப் படைத்த கருணையாளனாகிய அல்லாஹ் தன் இறுதித் திருமறையில் கூறுகின்றான்... 


வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. இதுவே நேரான வழி. (புனிதமான) அம்மாதங்களில் உங்களுக்கு நீங்கள் தீங்கிழைத்து விடாதீர்கள்! [அல்குர்ஆன் 9:36]

இறைவனால் புனிதமாக்கப்பட்ட நான்கு மாதங்களில் ஒன்றுதான் முஹர்ரம் மாதமாகும். இதை அல்லாஹ்வின் மாதமென்றும் நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். இம்மாதத்திற்கென்று பல சிறப்புகளை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியிருந்த போதிலும், நபியவர்கள் காட்டித்தராத, மார்க்கத்திற்கு விரோதமான பல்வேறு மூடநம்பிக்கைகள் இம்மாதத்தில் இஸ்லாமியர் களுக்கு மத்தியில் நிறைந்து காணப்படுகின்றன. இந்தக் காரியங்களெல்லாம் நம்மை நரகப்படுகுழியில் தள்ளிவிடக்கூடியவை என்பதை அறியாமல் இன்றும் அதிகமான இஸ்லாமியர்கள் முஹர்ரம் மாதத்தின் பெயரால் பல பாவமான காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்... 

வானங்களும் பூமியும் படைக்கப்பட்ட நாளில் இருந்த (பழைய) நிலைக்குக் காலம் திரும்பி விட்டது. வருடம் என்பது பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அவற்றில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வரக்கூடியவை. அவை: துல்கஅதா, துல்ஹஜ் மற்றும் முஹர்ரம் ஆகியனவாகும். (மற்றொன்று) ஜமாதுல்ஆகிர் மாதத்திற்கும் ஷஅபான் மாதத்திற்கும் இடையிலுள்ள ரஜப் மாதமாகும் அறிவிப்பவர்: அபூபக்ரா(ரலி) ஆதாரம் : புகாரி 3197

பஞ்சா எடுப்பது

இந்த புனிதமிக்க முஹர்ரம் மாதத்தில் பல ஊர்களில் பஞ்சா என்ற பெயரில் விழா எடுப்பார்கள். இஸ்லாத்தை நூற்றுக்கு நூறு சதவிகிதம் பின்பற்றக்கூடிய(?) இளைஞர்களும், இளைஞிகளும், ஆண்களும், பெண்களும் கலர்ஃபுல்லாக காட்சியளித்து, ஒருவரை ஒருவர் கண்டு இன்புற்று, மகிழ்ச்சியைக் கொண்டாடி இந்த பஞ்சாவை சிறப்பிப்பார்கள். இதனை கண்களும், கைகளும், கால்களும், உள்ளமும் செய்கின்ற விபச்சார விழா என்று கூட குறிப்பிடலாம். அந்த அளவிற்கு இந்த பஞ்சா விழாவில் அனாச்சாரங்களும், அட்டூழியங்களும் பெருக்கெடுத்துக் காணப்படும். 

பள்ளிவாசலில் தொழும்போது நபிவழியின் அடிப்படையில் விரலசைத்து தொழுததற்காக கொதித்தெழுகின்ற ஜமாஅத்தினரும், ஒன்றும் இல்லாத தொப்பிக்காக காவல்துறை வரை சென்று புகார் கொடுக்கின்ற ஜமாஅத்தினரும், ஆலிம் பெருமக்களும் இந்த அனாச்சாரங்களைக் கண்டு கொள்ளவே மாட்டார்கள். ஏனென்றால் உண்மையான சமுதாய நலனை மார்க்க அடிப்படையில் அமைத்துக் கொள்ளவும், நிர்மாணிக்கவும் இவர்கள் நாடாததுதான் வணக்கத்தின் பெயரால் சமுதாயம் கெட்டுப்போவதற்கு முக்கிய காரணங்களாகி விட்டன. 

இந்த பஞ்சாவில் அப்படி என்னதான் நடக்கின்றது? மனிதனின் கை போன்று செய்யப்பட்ட ஒன்றை ஒரு குதிரையின் மீது வைத்துக் கொண்டு வருவார்கள். இந்த குதிரையின் மீது ஏறி உட்கார்ந்தாலோ, அல்லது அதன் பாதங்களில் தண்ணீர் ஊற்றினாலோ நாடியது நடக்கும் என்று இந்த பஞ்சாவைக் கொண்டாடக்கூடிய பக்தர்களும் மற்றும் திருமணமாகாத பக்தைகளும், குழந்தை பாக்கியம் இல்லாத பக்தைகளும் இந்த குதிரை மகான்(?) அருள் செய்து விடுவார் என்ற நம்பிக்கையில் போட்டி போட்டுக் கொண்டு அவர்களின் மதநம்பிக்கைப் பிரகாரம் அதற்கான சடங்கு சம்பிரதாயங்களில் ஈடுபடுவார்கள். 

படைத்த ரப்புல் ஆலமீனாகிய அல்லாஹ் ஒருவன்தான் குழந்தைப் பாக்கியம் தரக்கூடியவன் என்ற நம்பிக்கையெல்லாம் இவர்களுக்கு கிடையாது. ஏனென்றால் இவர்களின் மதநம்பிக்கைப் பிரகாரம் குதிரைச் சாமியைத்தான் குழந்தை பாக்கியம் தருபவராக இவர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். ஆனால் உண்மையான முஸ்லிம்களுக்கு திருமறைக்குர்ஆன் கூறுவதைப் பாருங்கள்...
வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைக்கிறான். தான் நாடியோருக்குப் பெண்(குழந்தை)களை வழங்குகிறான். தான் நாடியோருக்கு ஆண்(குழந்தை)களை வழங்குகிறான். அல்லது ஆண்களையும், பெண்களையும் சேர்த்து அவர்களுக்கு வழங்குகிறான். தான் நாடியோரை மலடாக ஆக்குகிறான். அவன் அறிந்தவன்;. ஆற்றலுடையவன். (அல்குர்ஆன் 43: 49-50)

மேலும் குதிரையின் மீது கொண்டுவரப்படுகின்ற கையின் விளக்கமாகிறது அதிலுள்ள ஐந்து விரல்களும் இவர்கள் நம்பிக்கை கொண்டுள்ள ஐந்து கடவுள்களைக் குறிப்பதாகும். அவர்கள் முஹம்மது(ஸல்), அலி(ரலி), ஹஸன்(ரலி), ஹுஸைன்(ரலி), ஃபாத்திமா(ரலி) ஆகியோராவர்.

இந்த பஞ்சா எடுக்கின்ற சுன்னத் ஜமாத்தினர்(?) இந்த ஐவரையும் கடவுளாகத்தான் வணங்குகின்றனர் என்று நாமாக கற்பனை செய்து கூறவில்லை. இவர்கள் ஓதக்கூடிய மௌலிதுகளில் ஒன்றில் பின்வருமாறு இடம் பெற்றுள்ளது.
லீ கம்ஸத்துன் உத்ஃபீ பிஹா ஹர்ரல் வபாயில் ஹாத்திமா அல்முஸ்தஃபா வல் முர்தலா வப்னாகுமா வல்பாத்திமா இதன் பொருள்: எனக்கு முஹம்மது, அலீ, ஹஸன், ஹுஸைன், ஃபாத்திமா ஆகிய ஐந்து நபர்கள் இருக்கிறார்கள்.அவர்களின் மூலம் முடிவான வேதனையாகிய (நகர நெருப்பின்) சூட்டை நான் அணைத்து விடுவேன் என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால் நரக நெருப்பை விட்டும் இறைவனைத் தவிர வேறு யாரும் காப்பாற்ற முடியாது என திருமறைக் குர்ஆன் சொல்கிறது.
'என்னையும், என்னுடன் உள்ளவர்களையும் அல்லாஹ் அழித்தால் அல்லது எங்களுக்கு அருள் புரிந்தால் துன்புறுத்தும் வேதனையிலிருந்து (ஏக இறைவனை) மறுப்போரைக் காப்பவன் யார் என்பதற்குப் பதில் சொல்லுங்கள்! என்றும் கூறுவீராக! (அல்குர்ஆன் 67:28)

இறைவன் நாடிவிட்டால் இறைவனுடைய வேதனையி லிருந்து தன்னைக்கூட காப்பாற்றிக் கொள்ள முடியாது எனக் கூறுமாறு அல்லாஹ் நபியவர்களுக்கு கட்டளையிடுகின்றான்.

நான் உங்களுக்கு தீங்கு செய்யவும், நன்மை செய்யவும் அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்றும் கூறுவீராக! 

அல்லாஹ்விடமிருந்து என்னை எவரும் காப்பாற்ற மாட்டார். அவனன்றி ஒதுங்குமிடத்தையும் காணமாட்டேன் என்றும் கூறுவீராக!
(அல்குர்ஆன் 72: 21-22)

நபியவர்களுக்கே இறைவனுடைய வேதனையை விட்டும் தடுக்கின்ற அதிகாரம் இல்லை என திருமறைக் குர்ஆன் குறிப்பிடும் போது பஞ்சா எடுப்பவர்கள் இந்த ஐவரும் தங்களை நரகத்தை விட்டும் காப்பாற்றி விடுவார்கள் என்ற நம்பிக்கையில் அந்தக் கையை எடுத்துவருகின்றனர். இவர்கள் அல்லாஹ்வை மறுத்து இறைவனுக்கு இணைகற்பிக்கின்ற மாபாதகச் செயலையே செய்கின்றனர் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

நபி மூசா(அலை) அவர்கள், அல்லாஹ்வின் கிருபையால் வெற்றிபெற்று கொடுங்கோலன் ஃபிர்அவ்ன் மூழ்கடிக்கப்பட்ட தினமான ஆஷுரா தினத்தை ஒரு சாரார் களங்கப்படுத்தி அதை துக்கமிக்க நாளாக அனுஷ்டித்து வருகின்றனர்.

அலீ(ரலி) அவர்களை தூதராக ஏற்றுக் கொண்ட ஷியாக்கூட்டத்தினர், அலீ(ரலி) அவர்களின் மகனார் ஹுசைன்(ரலி) அவர்கள் முஹர்ரம் பத்தாம் நாளில் கொல்லப்பட்டார்கள் என்றும் அதற்காக துக்கம் அனுஷ்டிப்பதாகக் கூறி நெஞ்சில் அடித்துக் கொள்வது, ஒப்பாரி வைப்பது, ஊர்வலம் நடத்துவது, தீக்குண்டத்தை வலம் வருவது என்பன போன்ற வீணான காரியங்களை இஸ்லாத்தின் பெயரால் செய்து வருகின்றனர்.

இவ்வாறு செய்வது பெரிய பாவமாகும். அது மட்டுமின்றி, எந்த ஒரு முஸ்லிமும் இப்படிச் செய்யக்கூடாது. இது போன்று செய்தால் அவன் முஸ்லிம் இல்லை என்று நபி(ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்...
கன்னத்தில் அடித்துக் கொண்டு, சட்டையைக் கிழித்துகொண்டு, அறியாமைக் காலத்து ஒப்பாரி வைப்பவன் என்னைச் சார்ந்தவனில்லை. அறிவிப்பவர்: அப்துல்லாஹ்(ரலி) நூல்: புகாரி-1294, முஸ்லிம்-148, திர்மிதி-920, நஸயி-1827

இதில் வேதனையான விஷயம் என்னவென்றால், துக்கம் என்ற பெயரில் மார்பில் அடித்துக கொள்ளும் இந்த ஷியாக் கூட்டத்தினரின் செயலை சிலர் முஸ்லிம்கள் பெரிய சாதனையை செய்து விட்டதைப்போல் ரசிக்கின்றனர்.அங்கே ஒன்று கூடுகின்றனர். ஆனால் இது போன்ற மார்க்கத்திற்கு முரணான காரியத்தை யார் செய்தாலும் அதை தடுக்க வேண்டும்.அதற்கு சக்தியில்லையென்றால் இஸ்லாத்திற்கே கேவலம் ஏற்படுத்தும் இவர்களின் காரியங்களை பார்த்து வேதனைப்பட்டு ஒதுங்கி விட வேண்டும்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்...
(கவலையின் போது) ஒப்பாரி வைப்பவனையும், தலையை மழித்துக் கொள்பவனையும் ஆடைகளைக் கிழித்துக் கொள்பவனையும் விட்டு விலகிக் கொண்டேன் அறிவிப்பவர்: அபூமூஸா(ரலி) நூல்: முஸ்லிம்-149

இவர்கள் தான் இப்படியென்றால், தன்னை முஸ்லிம் என்று சொல்லிக் கொள்ளும் சிலரது காரியங்கள் இன்னும் படுமோசமாக இருக்கிறது. முஹர்ரம் பத்தாம் நாள் வந்த உடனேயே பஞ்சா எடுப்பது (ஐந்து விரல்களில் படும் அளவிற்கு மஞ்சளைக் கையால் தட்டி வீட்டுக் கதவுகளில் அப்புவது), ஹுசைனார் பெயரில் மவ்லித் ஓதுவது, பத்தாம் நாளில் மட்டும் நோன்பு நோற்று யூதர்கள் வழியைப் பின்பற்றுவது போன்ற காரியங்களில் ஈடுபடுகின்றனர்.

இதுவெல்லாம் நபிகளாரின் வழிமுறைகளல்ல. நபி(ஸல்) அவர்கள் காலத்தில் எத்தனையோ ஸஹபாக்கள் ஷஹீதானார்கள். ஸஹாபியப் பெண்கள் இறந்துள்ளார்கள். இவ்வளவு ஏன்? நபி(ஸல்) அவர்களுடைய பாசத்துக்குரிய மனைவி கதிஜா(ரலி) அவர்களும் இறந்துள்ளார்கள். இதற்காக நபி(ஸல்) அவர்கள் ஒப்பாரி வைத்தார்களா? 

நெஞ்சில் அடித்துக் கொண்டார்களா?சட்டையைக் கிழித்துக் கொண்டார்களா? தீக்குண்டத்தை சுற்றி வந்தார்களா? மொட்டையடித்துக் கொண்டார்களா?ஹுசைனார் மவ்லித் ஒதினார்களா? இல்லவே இல்லை.

நபி(ஸல்) அவர்கள் செய்து காட்;டாத தடுத்துள்ள இந்த அனாச்சாரங்களை நாம் ஏன் செய்ய வேண்டும். இதனால் நன்மை கிடைக்குமென்றா? இல்லையே!. இது போன்ற காரியங்களை யார் செய்கிறார்களோ அவர்கள் நரகவாசிகள் என்றே நபி(ஸல்) அவர்கள் கண்டித்துள்ளார்கள்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
புதிய அனாச்சாரங்கள் அனைத்தும் வழிகேடாகும். வழிகேடுகள் அனைத்தும் நரகத்தில் (தள்ளி) விடும். அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) நூல்: நஸயி-1560

மேலும் ஆஷுரா தினம் என்பது நபி(ஸல்) அவர்கள் காலத்தில் எப்படி சிறப்பு தினமாக கருதப்பட்டு வந்தது என்பதையும் விளங்க வேண்டும். ஏனெனில் சிறப்பு என்று எண்ணி நம் சமுதாயத்தினர் தவறான காரியங்களை செய்து வருகின்றனர்.

ரமலான் மாதத்தில் வைக்கப்படும் நோன்பிற்கு பிறகு சிறந்தது, அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தில் வைக்கப்படும் நோன்பாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் (அபூஹுரைரா(ரலி) முஸ்லிம் 1962)

ஆஷுரா தினத்தில் வைக்கப்படும் நோன்பு கடந்த ஒரு வருடத்தின் பாவங்களுக்குப் பரிகாரமாகும் எனக் கூறினார்கள் (அபூகதாதா(ரலி) முஸ்லிம் 1977)

நபி(ஸல்) அவர்கள் மதினா வந்தபோது ஆஷுரா தினத்தில் வேதக்காரர்கள் நோன்பு நோற்றிருந்தனர். அப்போது வேதக்காரர்கள், இன்றைய தினம் மகத்துவமிக்கதாகும். அல்லாஹ் நபி மூஸா(அலை) அவர்களை காப்பாற்றி ஃபிர்அவ்னின் கூட்டாத்தார்களை கடலில் மூழ்கடித்தான். இறைவனுக்கு நன்றி செலுத்தும் முகமாக நபி மூசா(அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள் என்று கூறினர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் இவர்களைவிட நாம்தான் மூஸா(அலை) அவர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என்று கூறி ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்று மக்களையும் நோற்குமாறு கட்டளையிட்டார்கள் (இப்னு அப்பாஸ்(ரலி) புஹாரி 3145)

'நபி(ஸல்) அவர்கள் மதினா வந்த போது எங்களையும் நோன்பு நோற்குமாறு ஏவினார்கள். அதற்கு நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே! இது நபி மூஸா(அலை) அவர்கள் வெற்றி பெற்ற தினமாக இருப்பதால்) யூதர்களும், கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் தினமாயிற்றே என்று கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அடுத்த ஆண்டில் முஹர்ரம் 9ம் நாளிலும் நோற்போம் என்று கூறினார்கள் (இப்னு அப்பாஸ்(ரலி) அபூதாவூத் 2087)
ஆகவே, மேற்காணும் விஷயங்களை நன்கறிந்து புனிதமிக்க ஆஷுரா தினத்தைக் கண்ணியமாகக் கருதி முஹர்ரம் 9, 10-ல் நோன்பு நோற்று புண்ணியம் தேடுவோம். அது மட்டுமல்லாமல் தேவையில்லாத மார்க்கம் காட்டித் தராத காரியங்களை செய்வதிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வோம்!

Sunday, November 18, 2012

வாராந்திர நிகழ்ச்சி - ரிஃபா - 16-11-2012

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல ரிஃபா கிளையில் வாராந்திர நிகழ்ச்சி இஷா தொழுகைக்குப் பிறகு இன்று (16-11-2012) நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் சகோ.திருச்சி மொய்தீன் அவர்கள், "நமது தலைவர் முஹம்மது நபி" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். 

இந்த நிகழ்ச்சியில் ரிஃபா கிளையைச் சேர்ந்த நமது தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

Friday, November 16, 2012

குழந்தைகளுக்கான வகுப்பு

அல்லாஹ்வின் கிருபையால், குழந்தைகளுக்கான குர்ஆன் வகுப்பு கடந்த (12-11-2012) அன்று நடைபெற்றது. 

இந்த வகுப்பில் அரபி ஓதித்தருதல், சிறிய சூராக்களை மனனம் செய்தல், சிறிய துஆக்களை மனனம் செய்தல் போன்றவற்றையும் கற்றுக் கொடுக்கப்படுகிறது.

இதில் அதிகமான குழந்தைகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்!!!! 

ஆன்லைன் மூலம் குர்ஆன் தஃப்ஸீர் வகுப்பு

அல்லாஹ்வின் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலத்தில் சார்பாக கடந்த (13-11-2012) குர்ஆன் தஃப்ஸீர் வகுப்பு தாயகத்திலிருந்து ஆன்லைன் மூலம் சகோ.முஹம்மது சலீம் அவர்கள் நடத்தினார்கள். 


இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இந்த வகுப்பை சகோதரர் அவர்கள் சிறப்பாகவும், அனைவருக்கும் எளிதில் புரியும் வகையில் நடத்தினார் அல்ஹம்ந்துலில்லாஹ்... 

இனிவரும் காலங்களில் இன்ஷாஅல்லாஹ் இந்த வகுப்பு ஒவ்வொரு வார செவ்வாய்கிழமையும் இரவு 7.30 மணியளவில் நடைபெறும் என்பது குறிப்பிடதக்கது. 

Friday, November 9, 2012

மாதாந்திர ஆன்லைன் நிகழ்ச்சி - 09-11-2012


அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல மாதாந்திர ஆன்லைன் நிகழ்ச்சி இன்று 09-11-2012 அன்று மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நமது மண்டல நிர்வாகிகளின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தாயகத்திலிருந்து சகோதரர். அப்துல் கரீம் அவர்கள் "அலட்சியப்படுத்தபடும் அமல்கள்" என்ற தலைப்பில் ஆன்லைன் மூலம் புரேக்ஜடர் உதவி கொண்டு உரை நிகழ்த்தினார்கள்.

இன்றைய காலகட்டத்தில் அமல்களை நாம் எப்படியெல்லாம் உலக ஆதயத்தை காரணம் கொண்டு, அமல்களை வீணடிக்கிறோம் என்பதையும், நபிகள் நாயகம் அவர்கள் அமல்கள் விஷயத்தில் எப்படி இருந்தார்கள் என்பதையும் மிக அழகாக குர்ஆன் மற்றும் ஆதரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் விளக்கினார்கள். 

இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் பெரும் திரளாக கலந்து கொண்டு பயனடைந்தார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

Wednesday, November 7, 2012

குழந்தைகளுக்கான வகுப்பு

அல்லாஹ்வின் கிருபையால், குழந்தைகளுக்கான குர்ஆன் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதில் முதலாம் நாளாக நேற்று (06-11-2012) ஆரம்பிக்கப்பட்டது.

இந்த வகுப்பில் அரபி ஓதித்தருதல், சிறிய சூராக்களை மனனம் செய்தல், சிறிய துஆக்களை மனனம் செய்தல் போன்றவற்றையும் கற்றுக் கொடுக்கப்படுகிறது.

இதில் அதிகமான குழந்தைகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்!!!! 

ஆன்லைன் மூலம் குர்ஆன் தஃப்ஸீர் வகுப்பு


அல்லாஹ்வின் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலத்தில் சார்பாக நேற்று (06-11-2012) குர்ஆன் தஃப்ஸீர் வகுப்பு தாயகத்திலிருந்து ஆன்லைன் மூலம் சகோ.முஹம்மது ஒலி அவர்கள் நடத்தினார்கள். 

இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இந்த வகுப்பை சகோதரர் அவர்கள் சிறப்பாகவும், அனைவருக்கும் எளிதில் புரியும் வகையில் நடத்தினார் அல்ஹம்ந்துலில்லாஹ்... 

இனிவரும் காலங்களில் இன்ஷாஅல்லாஹ் இந்த வகுப்பு ஒவ்வொரு வார செவ்வாய்கிழமையும் இரவு 7.30 மணியளவில் நடைபெறும் என்பது குறிப்பிடதக்கது. 

Friday, November 2, 2012

வாராந்திர நிகழ்ச்சி - தலைமை - 02-11-2012


அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல தலைமையில் வாராந்திர நிகழ்ச்சி மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு இன்று (02-11-2012) அன்று நடைபெற்றது.
 
இந்த நிகழ்ச்சியில் சகோதரர்.வடகரை ஜெய்லானி அவர்கள், "இலாபம் தரும் வியாபாரம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
 
இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

வாராந்திர நிகழ்ச்சி - ஹித் - 02-11-2012

அல்லாஹ்வின் கிருபையால், ஹித் கிளையில் பயான் நிகழ்ச்சி இன்று (02-11-2012) மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது.

இதில் சகோதரர்.திருச்சி யூசுஃப் ஷரீஃப் அவர்கள், "அழைப்புப் பணியின் இலக்கு எது?" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இதில் நமது ஹித் பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.
 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்