அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல மாதாந்திர ஆன்லைன் நிகழ்ச்சி இன்று (04-01-2013) "இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்" என்ற கேள்வி பதில் நிகழ்ச்சி, பிரத்யேகமாக வட்டி தொடர்பான சந்தேகங்களை தெளிவுபடுத்துவதர்காக நமது மண்டல நிர்வாகிகளின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த கேள்வி பதில் நிகழ்ச்சியில் தாயகத்திலிருந்து சகோதரர். அப்பாஸ் அலி அவர்கள் வந்திருந்த சகோதர சகோதரிகளின் கேள்விகளுக்கு குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் மிகத் தெளிவாக விளக்கினார்கள்.
நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளில் சில
- வங்கிகளில் சேர்த்து வைக்கும் சேமிப்பு தொகைக்கு அதிகமாக கொடுக்கப்படும் தொகை வட்டியாகுமா?
- வட்டி எப்பொழுது ஹராம் ஆக்கப்பட்டது?
- அடைமனம் சம்பந்தமாக மார்க்கத்தின் நிலை என்ன?
- வியாபரத்திற்கு கொடுக்கப்படும் தொகை திரும்பப்பெருவது வட்டி கணக்கில் ஆகுமா?
- பல்வேறு சமுதாய பிரச்சனைகளை களத்தில் காணும் தவ்ஹீத் ஜமாஅத், ஏன் வட்டியை தடுக்க வட்டியில்லா கடன் உதவி திட்டம் ஏற்படுத்த கூடாது?
என்பன போன்ற பல ஆக்கப்பூர்வமான வட்டி தொடர்புடைய கேள்விகளை கேட்டனர். இந்த அனைத்து கேள்விகளுக்கும் குர்ஆன் மற்றும் ஆதரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் அழகாக விளக்கமளித்தார்கள்.
இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!
0 comments:
Post a Comment