Friday, July 22, 2011

வாரந்திர பயான் - 22-07-2011

அல்லாஹ்வின் பேரருளால், ஹித் கிளையின் வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில நமது பஹ்ரைன் மண்டல தாவா பொருப்பாளர் சகோ. ஹாஜா அவர்கள், "நோன்பின் மாண்பு" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

அதில் அவர்கள், அல்லாஹ் தன் திருமறையின் 2ஆவது அத்தியாயமான அல் பகராவின் 183ஆவது வசனமான,

ஈமான் கொண்டவர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் விதிக்கப்பட்டுள்ளது. (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்.

மற்றும் 185ஆவது வசனமான, 

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும்.

என்ற வசனத்தை மேற்கொள்காட்டி தனது உரையை ஆரம்பம் செய்தார்.

இதில்,

நோன்பின் நோக்கம்,
நோன்பின் சிறப்பு
காலம் முழுவதும் நோற்றாலும் ஈடாகாது
நோன்பு நோற்க கடமைப்பட்டவர்கள்
நோன்பிலிருந்து விலக்களிக்கப்பட்டவர்

சலுகை அளிக்கப்பட்டவர்கள்
நோன்பின் நேரம்
ஸஹர் உணவு
ஸஹருக்காக அறிவிப்பு செய்தல்
மறதியாக உண்பது, பருகுவதும்
வேண்டுமென்றே நோன்பை முறிப்பவர்
குளிப்பு கடைமையானவர் நோன்பு நோற்பது
இரத்தம் குத்து எடுத்தல்
நோன்பு துறத்தல்

ஆகியவற்றிற்கு விளக்கமளித்து, உரையை நிரைவு செய்தார்.

இதில் நமது ஹித் கிளையின் தவ்ஹீத் சகோதரர்கள் பலர் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

0 comments:

Post a Comment

 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்