Friday, July 22, 2011

வாரந்திர பயான் - 22-07-2011


அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல தலைமையில் நடக்கும் வாராந்திர நிகழ்ச்சி இன்று கூடியது.

இன்றைய நிகழ்ச்சியில் சகோ. அப்துல் ஹமீது அவர்கள் "கியாமத் நாள்" என்ற தலப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இதில் ஆரம்பமாக, அல்லாஹ் தன் திருமறையின் கூறியுள்ள பல்வேறு வசனங்களை மேற்கொள்காட்டினார். அவை,

மனிதர்களே! உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அந்த நேரத்தின் திடுக்கும் கடுமையான விஷயமாகும். (அல் குர் ஆன் 22 - 01)


நீங்கள் அதைக் காணும் நாளில் பாலுட்டும் ஒவ்வொருத்தியும், தான் பாலூட்டியதை மறந்து விடுவாள். ஒவ்வோரு கர்ப்பிணியும், தன் கருவில் சுமந்ததை ஈன்று விடுவாள். போதை வயப்பட்டோராக மனிதர்களைக் காண்பீர்! அவர்கள் போதை வயப்பட்டோர் அல்லர். மாறாக அல்லாஹ்வின் வேதனை கடுமையானது. (அல் குர் ஆன் 22 - 02)

ஆண்டுகளின் எண்ணிக்கையில் எவ்வளவு காலம் பூமியில் வாழ்ந்தீர்கள்? என்று கேட்பான். (அல் குர் ஆன் 23 - 112)


ஒருநாள் அல்லது ஒரு நாளில் சிறிது நேரம் வாழ்ந்தோம். கணக்கிடுவோரிடம் விசாரிப்பாயாக! என்று கூறுவார்கள். (அல் குர் ஆன் 23 - 113)

குறைவாகவே வாழ்ந்தீர்கள். இதை அறிந்தவர்களாக நீங்கள் இருந்திருக்கக் கூடாதா? என்று அவன் கூறுவான். (அல் குர் ஆன் 23 - 114)

உங்களை வீணாகப் படைத்துள்ளோம் என்றும் நம்மிடம் திரும்பக் கொண்டு வரப்படமாட்டீர்கள் என்றும் நினைத்து விட்டீர்களா? (அல் குர்ஆன் 23 - 115)

இன்னும் அல்லாஹ் தன் திருமறையில் கூறியிருக்கின்ற பல வசனங்களை கூறி உரையை முடித்தார்கள்.

இதில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், அல்ஹம்துலில்லாஹ்.

0 comments:

Post a Comment

 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்