Saturday, July 28, 2012

ரமலான் 2012 - இரண்டாம் வார சிறப்பு நிகழ்ச்சிகள்

அல்லாஹ்வின் கிருபையால் இறைவேதமான திருக்குர்ஆன் இறங்கிய மாதமான புனித மிக்க ரமளான் மாதத்தின் இரண்டாவது வாரத்தை அடைந்துள்ளோம். இதில் முதல் வாரத்தை போன்றே பல மார்க்க நிகழ்ச்சிகளை பஹ்ரைன் மண்டல தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஏற்பாடு செய்துள்ளது. 


இந்த மார்க்க பணியை சிறப்பாக நடத்த திருப்பூர் மங்களம் முஹம்மது சலீம் MISc அவர்கள் வந்துள்ளது அறிந்ததே.


கடந்த ரமளான் மாதத்தை போன்றே இந்த வருட ரமளானிலும் இஃப்தார் நிகழ்ச்சியும் அதை தொடர்ந்து சிறப்பு மார்க்க சொற்பொழிவுகளும் நடைபெற்று வருகிறது.


ந்த ரமளான் மாத இரண்டாம் வாரத்தில் தியாகங்களின் பயன்களும் படிப்பினைகளும் என்ற தொடர் உரை நமது பஹ்ரைன் மண்டல தலமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


ந்த தலைப்பின் கீழ் பின்வரும் உபதலைப்புகளில் சொற்பொழிவுகள் நடைபெறும் இன்ஷாஅல்லாஹ்.
  1. சொர்க்க வாழ்க்கையை நேசிப்போம்
  2. மறுமை வெற்றிக்காக முயற்சிப்போம்
  3. நபிமார்களின் தியாகம்
  4. நபிகள் நாயகம் அவர்களின் தியாகம்
  5. நல்லடியார்களின் தியாகம்
  6. நபித்தோழர்களின் தியாகம்
  7. நபித்தோழியர்களின் தியாகம்
ஆகிய தலைப்புகளில் உரையாற்ற உள்ளார்கள் இன்ஷா அல்லாஹ்.


இந்த அனைத்து நிகழ்ச்சிகள் அனைத்திலும் பஹ்ரைன் வாழ் தமிழ் மக்களை தூய்மையான மார்க்கத்தின் பால் அழைக்கிறது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன். 

0 comments:

Post a Comment

 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்