Saturday, May 21, 2011

பஹ்ரைன் மண்டல பொதுக்குழு


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.......


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த (20-May-2011) வெள்ளிக்கிழமையன்று பஹ்ரைன் மண்டல மூன்றாவது பொதுக்குழு கூடியது அல்ஹம்துலில்லாஹ்.


பஹ்ரைன் மண்டல மற்றும் கிளை நிர்வாகிகள் அனைவரும் வரவழைக்கப்பட்டு மதிய உணவு பரிமாற்றத்திற்க்குப்பின் தாயகத்திலிருந்து சகோ. ஃபக்கிர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் சமுதாய பணியின் அவசியம் என்ற தலைப்பில் ஆன்லைன் மூலமாக உரையாற்றி சகோதரர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார் அல்ஹம்துலில்லாஹ்.



அதன்பின் மண்டல செயலாளர் சகோ. ஹாஜா குத்புதீன் அவர்கள் கடந்த கால செயல்பாடுகளை ஒவ்வோன்றாக விவரித்தார், அவரை தொடர்ந்து மண்டல பொருளாளர் சகோ. முபாரக் அவர்கள் ஜமாத்தின் வரவு செலவு கணக்குகளை கம்பியூட்டர் உதவிகொண்டு முழுவிபரமாக விளக்கினார் அல்ஹம்துலில்லாஹ். இதன் பிறகு சகோ.முக்தார் தலைமையிலான நிர்வாகம் கலைக்கப்பட்டது.


இதனை தொடர்ந்து முன்னாள் மண்டல நிர்வாகிகளான சகோ. நாசர் மற்றும் அப்துல் ஹமீது அவர்களின் மேற்ப்பார்வையில் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ். அவர்களின் பெயர்கள் கிழே கொடுக்கப்பட்டுள்ளன.

தலைவர் - சகோ. முபாரக் (தென்காசி) - +973-39192162
செயலாளர் - சகோ. ஜாஹிர் ஹுசைன் (சேரன்மகாதேவி) - +973-39320142
பொருளாளர் - சகோ. மாஹின் அபூபக்கர் (துலுக்கர்பட்டி) - +973-39943027
துணை தலைவர் - சகோ. மொய்தீன் (திருச்சி) - +973-36638878
துணை செயலாளர் - சகோ. சாபீர் (கிழக்கரை) - +973-39081498
மற்றும் 5 துணை நிர்வாக செயலாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் அல்ஹம்துலில்லாஹ்.


பஹ்ரைன் மண்டலத்தில் மார்க்க நிகழ்ச்சிகள் அனைத்தும் இனிதாக நடைபெற்று இம்மையிலும், மறுமையிலும் நன்மைகள் பெற எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் வேண்டிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

0 comments:

Post a Comment

 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்