அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தின் வாராந்திர நிகழ்ச்சியின் ஒரு அங்கமாக நேற்று (30-08-2013) ஆன்லைன் நிகழ்ச்சி மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நமது மண்டல நிர்வாகிகளின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தாயகத்திலிருந்து மாநில துணை செயலாளர் சகோதரர். முஹம்மது யூசுஃப் அவர்கள் "TNTJவின் அரும்பணிகள்" என்ற தலைப்பில் ஆன்லைன் மூலம் புரேக்ஜடர் உதவி கொண்டு உரை நிகழ்த்தினார்கள்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக நடத்தபடுகின்ற பல்வேறு மார்க்க மற்றும் சமுதாய பணிகளை எடுத்துரைத்து, மார்க்கம் இந்த பணிகளுக்கு எப்படியெல்லாம் வழி காட்டியுள்ளது என்பதனையும் மிக அழகாக விளக்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் பெரும் திரளாக கலந்து கொண்டு பயனடைந்தார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!
0 comments:
Post a Comment