Showing posts with label தியாகத் திருநாள் 2011. Show all posts
Showing posts with label தியாகத் திருநாள் 2011. Show all posts

Wednesday, November 9, 2011

சிறப்பு நிகழ்ச்சி - ரிஃபா கிளை (09-11-2011)

அல்லாஹ்வின் திருப்பெயரால்,

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல ரிஃபா கிளையின் சார்பாக சிறப்பு பயான் நிகழ்ச்சி இன்று (09-11-2011) நடைபெற்றது. 

இன்றைய நிகழ்ச்சியில், நமது தாயகத்திலிருந்து வருகை புரிந்துள்ள மாநில மேலாண்மை குழு உறுப்பினரான சகோ. M. S. சுலைமான் அவர்கள் "மரண்த்திற்க்கு பின்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 

இதில் ஆரம்பகட்டமாக அல்லாஹ் தனது திருமறையில் கூறியிருக்கின்ற "இவ்வுலக வாழ்க்கை வீணும் விளையாட்டும் அன்றி வேறில்லை" என்ற வசனத்தை மேற்கோள் காட்டி தனது உரையை ஆரம்பித்தார்.


இந்த அற்பமான 50 அல்லது 60 வருட வாழ்க்கைகாக நாம் காட்டுகின்ற முக்கியத்துவத்தை விட, மறுமை வாழ்க்கையை நம்பக்கூடிய முஸ்லீம்களான நாங்கள் அதற்க்கு எந்தளவு முக்கியத்துவம் அளிக்கிறோம் என்பதை சிந்தித்து பார்க்க கடமைபட்டுள்ளோம் என்றார்.


இதனை தொடர்ந்து சகோதரர்கள் தங்களது மார்க்க சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர்.


இந்த நிகழ்ச்சியை நமது ஹித் கிளை சகோதரர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.


இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

சிறப்பு நிகழ்ச்சி - ஹித் கிளை (08-11-2011)


அல்லாஹ்வின் திருப்பெயரால்,

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், பஹ்ரைன் மண்டல ஹித் கிளையின் சார்பாக தியாகத் திருநாளின் நிகழ்ச்சி 08-11-2011 செவ்வாய்க் கிழமை நடைபெற்றது. 

இன்றைய நிகழ்ச்சியில், நமது தாயகத்திலிருந்து வருகை புரிந்துள்ள மாநில மேலாண்மை குழு உறுப்பினரான சகோ. M. S. சுலைமான் அவர்கள் "தவ்ஹீத் ஏற்படுத்திய மாற்றங்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 

இவர் உரையில் நாம் ஏகத்துவம் எனும் தவ்ஹீத் வருவதற்க்கு முன், முஸ்லீம்கள் என்று சொல்லக்கூடிய நாம் எப்படி இருந்தோம்? இன்று தவ்ஹீத் என்ற ஓரிறைக் கொள்கை வந்த பிறகு எப்படி இருக்கிறோம்? என்பதை மக்கள் புரிந்துக் கொள்ள வகையில் மிகத் தெளிவாக விளக்கினார்கள். 


இந்த ஏகத்துவம் என்ற தவ்ஹீத் இன்று எவ்வளவு வீரீயமாகவும், எப்படியெல்லாம் மக்களை கவர்ந்திருக்கின்றது, மேலும் இன்று மக்கள் இந்த ஏகத்துவ கொள்கையை தங்களது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டு நாளுக்கு நாள் முன் வருகின்றனர் என்பதை பற்றியும் விளக்கினார்கள். 


இதன் பிறகு சகோதர, சகோதரிகள் இஸ்லாம் சம்பந்தமான கேள்விகள் கேட்க சகோதரர் அவர்கள் மிக அழகாகவும், மக்களுக்கு விளங்கும் வகையிலும் எடுத்துரைத்தார்கள். 


இதனை தொடர்ந்து இரவு உணவு பரிமாற்றத்துடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.


இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் பெரும் திரளாக கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

Tuesday, November 8, 2011

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் - தியாகத் திருநாள் 2011



அல்லாஹ்வின் கிருபையால், தியாகத் திருநாளான (06-11-2011) இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (இஸ்லாமியர்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி) பஹ்ரைன் மண்டல தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.

இதின் ஆரம்பகட்டமாக நமது மண்டல தாவா பொறுப்பாளர் சகோ. ஹாஜா குத்புதீன் அவர்கள் வரவேற்புரை சொல்லி மன்றத்தை ஆரம்பம் செய்தார்கள். அவரை தொடர்ந்து மண்டல தலைவர் சகோ. முபாரக் அவர்கள் பஹ்ரைன் மண்டல செயல்பாடுகள் குறித்து விளக்கினார்கள். மேலும் அவரை தொடர்ந்து நமது மண்டல ஆலோசனை குழு உறுப்பினரான சகோ. அப்துல் ஹமீது அவர்கள் ''ஈமானில் உறுதி'' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இவரது உரை முடிந்தவுடன் தேனீருக்காக ஒரு சிறிய இடைவெளி விடப்பட்டது.

இந்த இடைவெளியில், நமது மண்டல ஜாமாத் சார்பாக தயாரிக்கப்பட்ட நமது தவ்ஹீத் ஜமாத்தின் அழைப்புப்பணி, மனிதநேய பணி மற்றும் பஹ்ரைன் மண்டல செயல்பாடுகள் குறித்து விளக்கமாக தயாரிக்கப்பட்ட ஒரு குறும் படம் ஒளிபரப்பப்பட்டது.

இதனை தொடர்ந்து விடுமுறையை பயனுள்ளதாக கழிக்கவேண்டுமென தாயகத்திலிருந்து வரவழைக்கப்பட்ட மேலாண்மை குழு உறுப்பினரான சகோ.M.S.சுலைமான் அவர்கள் "நன்மை செய்வதை விட்டு நம்மை தடுப்பது எது" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இவரது உரையில் நாம் நன்மை செய்யவேண்டுமென்று நினைத்தாலும் ஷைத்தான் நமது மனதை குழப்பி வேறுவிதமாக மாற்றி நம்மளை நன்மை செய்யவிடாமல் தடுத்து விடுகின்றது, என்பதை பற்றி அரிவுப்பூர்வமாக விளக்கி இந்த சிறிய உரையை முடிவுக்கு கொண்டுவந்தார்கள்.
இதை தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சிக்காக டோக்கன் விநியோகிக்கப்பட்டு ஆரம்பம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளான.

ஆண்கள் தரப்பிலிருந்து:
  1. அல்லாஹ் அர்ஷில் இருக்கின்றனா? அல்லது முதல் வானத்தில் இறங்கி வருகின்றானா?
  2. யாசகம் கேட்பவரை புறக்கணிப்பதாக கூறும் ஹதீஸின் விளக்கம் என்ன?
  3. பெரம்பலூர் மாவட்டம், லப்பைகுடி காட்டில் தவ்ஹீத் ஜமாஅத் பிரிந்தர்கான விளக்கம்.
  4. பிறை பற்றிய விளக்கம் மற்றும் தவ்ஹீத் ஜமாஅத் மட்டும் எப்பொழுதும் பெருநாளை பிரிந்து தொழுகின்ற என்பதன் விளக்கம்.
  5. குண்டுவைத்தவர்கள் யார்?

பெண்கள் தரப்பிலிருந்து:

  1. விதியை நம்புவது எப்படி?
  2. காஃபிரான ஒருவரை இஸ்லாத்திற்க்கு கொண்டு வந்தால் என்ன நன்மைகள் அல்லாஹ்விடம் கிடைக்கும்? 
  3. பெண்கள் உயர்கல்வி படிக்கலாமா?
இந்த கேள்விகளுக்கெல்லாம் அறிவுப்பூர்வமாகவும், ஆதரப்பூர்வமாகவும், மக்கள் புரிந்துக் கொள்ளக்கூடிய வகையில் எளிய நடையில் விளக்கினார்கள்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் சிறப்பாக கேட்கப்பட்ட 2 கேள்விகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.
நமது மண்டல செயலாளர் சகோ. ஜாகிர் ஹுசைன் அவர்கள் முடிவுரை கூறி சபையை முடித்தார்.

இதனை தொடர்ந்து இஷா தொழுகையை ஜமாஅத்-ஆக தொழுது, இரவு உணவு பரிமாற்றத்துடன் நிகழ்ச்சி இனிதே முடிவு பெற்றது.

இந்த நிகழ்ச்சிக்காக ஆலோசனை படிவம் கொடுத்து, எழுதி வாங்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சியின் முடிவில் இலவசமாக CD விநியோகம் செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சகோதரர்கள் தங்கள் குடும்பத்துடன் பெரும் திரளாக கலந்து கொண்டார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

Monday, November 7, 2011

தியாகத் திருநாள் - சிற்றுண்டி நிகழ்ச்சி


அல்லாஹ்வின் உதவியால், பெருநாள் தினமான இன்று (06-11-2011) பெருநாள் தொழுகைக்குப் பிறகு பஹ்ரைன் மண்டல ஜமாஅத் சார்பாக ஒரு சிறிய சிற்றுண்டி உணவு நம்து மர்க்கஸில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில் நமது ஜமாஅத் சகோதர்கள் மட்டுமல்லாது பிற சகோதரர்களும் அவர்களின் குடும்பத்தாருடன் கலந்து கொண்டனர்.

மேலும், இந்த பஹ்ரைனில் வேறு எந்த ஜமாஅத்தும் செய்யாத மிக அரிய செயல் என்றும், நல்ல ஒரு புதிய முயற்ச்சி என்றும், இந்த ஒரு புதிய விதமான நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்ட பஹ்ரைன் மண்டல தவ்ஹீத் நிர்வாகிகளுக்கு துஆ செய்து மகிழ்ச்சி தெரிவித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

நோட்டிஸ் விநியோகம் - தியாகத் திருநாள் 2011


அல்லாஹ்வின் கிருபையால் தியாகத் திருநாளான இன்று (06-11-2011) பெருநாள் தொழுகைக்குப் பிறகு தியாகத் திருநாளிர்காக பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகளின், கிட்டத்தட்ட 500 நோட்டிஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது.
 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்