Tuesday, January 14, 2014

தாயீ பயிற்சி

அஸ்ஸலாமு அலைக்கும், 

கடந்த 10.01.2014 வெள்ளிக்கிழமை பஜ்ர் தொழுகைக்கு பிறகு பஹ்ரைன் மண்டல மர்கஸில் நடைபெற்ற தாயீ பயிற்சி வகுப்பில் சகோதரர் காரைக்கால் இப்றாஹீம் அவர்கள் நற்பண்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

வாராந்திர குழந்தைகள் வகுப்பு


அஸ்ஸலாமு அலைக்கும், 


கடந்த 10.01.2014 வெள்ளிக்கிழமை அன்று மாலை நடைபற்ற குழந்தைகளுக்கான ஒழுக்க பயிற்சி வகுப்பில் சகோ.யூசுப் ஹசன் கலந்து கொண்டு பயிற்சி வழங்கினார்.

வாராந்திர பயான் நிகழ்ச்சி மண்டலம்

அஸ்ஸலாமு அலைக்கும், 

பஹ்ரைன் மண்டலம் தலைமை மர்கசில் 10.01.2014 வெள்ளிக்கிழமை மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு  நடைபெற்ற பயான் நிகழ்ச்சியில் சகோ. பஸீஹ் அவர்கள் நபிகளாரை நேசிப்போம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் அதிகமான கொள்கை  சகோதர சகோதரிகள் கலந்து  கொண்டு பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ். 

Wednesday, January 8, 2014

வாராந்திர ரிபாஃ பயான் நிகழ்ச்சி



அஸ்ஸலாமு அலைக்கும்

வாராந்திர ரிபாஃ  பயான் நிகழ்ச்சி


08/01/2014 சனிக்கிழமை பஹ்ரைன் மண்டலத்தின் கிளையாக இருக்கின்ற ரிபாஃ என்ற ஊரில் வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சகோதரர் அப்துல் ஹமீத் (பந்தர்) அவர்கள் நபி (ஸல்) காட்டிய முறையில் வாழ்வோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 

குர்ஆன் விளக்க வகுப்பு

அஸ்ஸலாமு அலைக்கும்

வாராந்திர குர்ஆன் விளக்க வகுப்பு

07.01.2014 செவ்வாய்கிழமை இஷா தொழுகைக்குப் பிறகு பஹ்ரைன் மண்டல மர்கஸீல் வைத்து குர்ஆன் விளக்க வகுப்பு நடைபெற்றது. அதில் சகோதரர் பஸீஹ் அவர்கள் சூராதுன் நபஃ உடைய முதல் ப்த்து வசனங்களுக்கு உண்டான தர்ஜுமாவையும் விளக்கத்தையும் கொடுத்தார். 

Sunday, January 5, 2014

இரத்ததான முகாம்

  03.01.2014 வெள்ளிக்கிழமை காலை மணி முதல் மதியம் 12 மணி வரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் சல்மானியா மருத்துவமனையுடன் இணைந்து இரத்ததான முகாம் நடத்தியதில் 75 சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தார்கள். 


Wednesday, January 1, 2014

மாபெரும் இரத்ததான முகாம்

அல்லாஹ்வின் திருப்பெயரால்…..
மாபெரும் இரத்ததான முகாம்
பஹ்ரைன் மண்டலம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) சார்பாக இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (03.01.14) அன்று சல்மானியா மருத்துவமனையில் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மாபெரும் இரத்ததான முகாம் நடைபெறவுள்ளது.
மனித உயிர் காக்கும் மகத்தான சேவைக்கு உங்கள் நண்பர்களுடன் அன்புடன் அழைக்கிறோம்.
ஒருவர் இரத்தம் கொடுப்பதனால் இன்னொருவர் அவருடைய இரத்தத்தின் மூலம் அல்லாஹ் நாடினால் குணமடைவார். அப்படி குணமடையும் போது அவரை வாழவைத்தவர் போன்றவராவார்.
ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்.  ( குர்ஆன் 5: 32 )
தொடர்புக்கு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) பஹ்ரைன் மண்டலம்.

38385740, 33776344, 39320142
 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்