Wednesday, March 13, 2013

மலிவு விலை சிற்றுண்டிகள்




இந்தியாவில் விலைவாசி உயர்வு வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. இதை ஆளும் கட்சிகள் கூட மறுக்கமுடியவில்லை. இந்த விலைவாசி உயர்வால் ஏழை, நடுத்தர வர்க்கத்தினர் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். வருமானத்திற்கு மேல் ஏற்படும் அத் தியாவசிய செலவுகளை ஈடுகட்ட முடியாமல் தவிக்கும் நேரத்தில் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டுமென்ற எண்ணத்தில் மலிவு விலை சிற்றுண்டிகளை தமிழக முதல்வர் திறந்துள்ளார்.

சென்னை மாநகரில் வாழும் ஏழை மக்கள், கூலிப்பணியாளர்கள். ஓட்டுனர்கள், பாரம் தூக்குபவர்கள், பணி நிமித்தமாக சென்னை வந்து செல்பவர்கள் என அனைவரும் உணவை, மலிலி வு விலையில் பெறும் வகையில், சென்னை முழுவதும், 1,000 மலிலி வு விலை சிற்றுண்டி உணவகங்களை துவங்க, முதல்வர் ஜெயலலிலி தா உத்தரவிட்டார்.

இத்திட்டத்தின்படி, வார்டுக்கு ஒரு உணவகம் வீதம், 200 உணவகங்கள் துவக்கப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக, சென்னை மாநகராட்சியில் உள்ள, 15 மண்டலங்களிலும், மண்டலத்திற்கு ஒன்று என, 15 உணவகங்கள் துவக்கப்பட்டன.

ஒரு இட்லிலி ஒரு ரூபாய், தயிர் சாதம் மூன்று ரூபாய், சாம்பார் சாதம் ஐந்து ரூபாய்க்கு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய உணவகங்கள் அடிக்கும் கொள்ளைக்கு அளவில்லாத வகையில் இருக்கும் போது இந்த அறிவிப்பு நிச்சயமாக ஏழைகளுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதே நேரத்தில் அந்த உணவுகள் தரமானதாகவும் சுகாதாரமானதாகவும் இருக்கும் வரை இந்த ஏற்பாடு சிறந்ததே.

ஆனால் இதுபோன்ற அறிவிப்புகள் குறைந்த நாட்கள் வரையே செயல்படுத்தப்படுகின்றன. அல்லது தரமற்ற முறையில் தயார் செய்து கொடுத்து மக்களே வெறுக்கும் நிலைக்கு கொண்டுவந்துவிடுகின்றனர்.

மம்தா பானர்ஜி ரயில்வே மந்திரியாக இருந்த போது ஜனதா சாப்பாடு என்ற திட்டத்தை கொண்டுவந்தார்.

7
பூரி, 150 கிராம் உருளைகிழங்கு மசால், ஊறுகாய், ஒரு மிளகாயுடன் பத்து ரூபாய்க்கும், 300 கிராம் எடையுடன் புளி, எலுமிச்சம், தயிர், சாம்பார், தக்காளி சாதம், 13 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. இது பெரிய ரயில் நிலையங்களில் மட்டும் வழங்கப்பட்டது.

பின்னர் ஜனதா சாப்பாடு விலை உயர்த்தப்பட்டது. 7 பூரி, உருளை கிழங்கு மசால் அதே பத்து ரூபாய்க்கும், 300 கிராம் எடையுள்ள சாம்பார், தயிர், தக்காளி சாதம், 15 ரூபாய், புளி, எலுமிச்சம் சாதம், 16 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

தற்போது ஜனதா சாப்பாடு விலை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 7 பூரி, மசால் கிழங்கு அதே பத்து ரூபாய், தயிர் சாதம்லி17, சாம்பார் சாதம்லி19, தக்காளி சாதம்லி13, எலுமிச்சம் சாதம்லி18, புளி சாதம்லி20 ரூபாய் என விற்கப்படுகிறது.

குறைந்த அளவில் தயார் செய்வதால் குறைந்த நேரத்திலேயே விற்று தீர்ந்துவிடுகிறது. எல்லா மக்களுக்கும் இதன் பயன்கிடைப்பதில்லை. எல்லா ரயில் நிலையங்களிலும் குறிப்பாக ரயில்பெட்டிகளில் தயார் செய்யப்படும் உணவுகள் குறைந்த விலைக்கு கொடுத்தால் நன்றாக இருக்கும். ரயில் பெட்டிகளில் தயார் செய்யப்படும் உணவுகள் மிக குறைந்த அளவு, அதே நேரத்தில் அதிகவிலைக்கு விற்கப்படுகிறது. மேலும் டீ,காஃபி போன்றவைகள் சுடுதண்ணீர் போன்றே இருக்கிறது.

இதே போன்ற நிலை இந்த சிற்றுண்டிகளுக்கும் வந்துவிடக்கூடாது.

இதைபோன்று நீண்ட தூரம் செல்லும் பேருந்துகள் நிறுத்தும் உணவகங்களின் தரம் மற்றும் கட்டணங்களை அரசு கவனித்தால் நன்றாக இருக்கும்.

தமிழகத்தில் நீண்ட தூர பேருந்து சேவையில் அரசு விரைவு போக்கு வரத்துகழகம் மற்றும் தமிழ்நாடு அரசுப்போக்குவரத்து கழக பேருந்துகளும் செயல்படுகின்றன. இது தவிர்த்து தனியார் ஆம்னி பேருந்துகள் என தினசரி லட்சக் கணக்கான பயணிகள் செல்கின்றனர்.

பயணக் களைப்பில் பசியாறவும், களைப்பு மற்றும் உடல் சோர்வைப் போக்கவும் சாலையோர உணவகங்களில் பேருந்துகள் நிற்பதுண்டு. தேர்வு செய்ய வேறு வாய்ப்பு பயணிகளுக்கு இல்லாதபோது அதிகமான விலைகொடுத்து டீ, காபி, டிபன், குளிர்பானங்கள் வாங்குவதும், புலம்பிக் கொண்டே தரமோ சுவையோ இல்லாத உணவுவகைகளை சாப்பிடவும் நேர்கிறது. குறிப்பிட்ட உணவகங்களில் குறிப்பிட்ட பேருந்துகள் நிற்பதற்கு காரணம் அங்கு ஓட்டுநர், நடத்தனர்களுக்கு இலவசமாக டீ, காபி, டிபன் தருவது மட்டுமே என்பது ஊரறிந்த ரகசியம். இதனை முடிவுக்கு கொண்டு வருவதாகவும், இதன் மூலம் அரசுப்போக்குவரத்துக் கழகத்திற்கு வருமானம் பார்க்கிறோம் என்றும் கழகத்தின் வணிகப்பிரிவுகள் களமிறங்கின.

டெபாசிட் தொகை ரூ.10 லட்சம் முதல் 12 லட்சம் வரை செலுத்த வேண்டும். தினசரி குறிப்பிட்ட பேருந்துகள் அந்தந்த கடைகளில் நிறுத்தப்படும். ஒரு வண்டிக்கு ரூ.40, ரூ.45, ரூ.55 என ஏதோ ஒரு கணக்கில் மாதாந்திர தொகை கட்டணமாக செலுத்த வேண்டும் என்று வரையறுத்தனர். கடந்த 2012 ஜனவரி 10 அன்று இந்த அறிவிப்பு வெளியானது. பின்னர் பிப்ரவரி 10 முதல் கறாராக அமல்படுத்தப்படுவது என்ற பெயரில் உணவகங்களில் கட்டாயம் பேருந்துகளை நிறுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

அரசுப்போக்குவரத்துக் கழகத்திற்கு வருமானம் தானே என்று பார்த்தால், அவை முழுவதும் பயணிகள் பாக்கெட்டையே பதம் பார்க்கிறது. ஏற்கனவே பஸ்கட்டண உயர்வால் சுமார் 80 சதவீதம் கூடுதலாகச் செலவிடும் பயணிகள் தலையில் உணவகங்களும் விலை ஏற்றி அதிகாரப்பூர்வமாய் இப்போது கொள்ளையடிக்கிறார்கள்.

உணவகத்தில் விலைபட்டியல் கிடையாது, தரமான உணவுகள் கிடையாது மேலும் கட்டணம் அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப நிர்ணயிக்கப்படுகிறது. இவற்றை கவனத்தில் கொண்டு முதல்வர் அவர்கள் நியாயமான கட்டணத்தில் உணவுகள் தருவதற்கு ஏற்பாடு செய்தால் மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்
.

0 comments:

Post a Comment

 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்