Showing posts with label இரத்ததானம். Show all posts
Showing posts with label இரத்ததானம். Show all posts

Sunday, January 5, 2014

இரத்ததான முகாம்

  03.01.2014 வெள்ளிக்கிழமை காலை மணி முதல் மதியம் 12 மணி வரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் சல்மானியா மருத்துவமனையுடன் இணைந்து இரத்ததான முகாம் நடத்தியதில் 75 சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தார்கள். 


Wednesday, January 1, 2014

மாபெரும் இரத்ததான முகாம்

அல்லாஹ்வின் திருப்பெயரால்…..
மாபெரும் இரத்ததான முகாம்
பஹ்ரைன் மண்டலம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) சார்பாக இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (03.01.14) அன்று சல்மானியா மருத்துவமனையில் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மாபெரும் இரத்ததான முகாம் நடைபெறவுள்ளது.
மனித உயிர் காக்கும் மகத்தான சேவைக்கு உங்கள் நண்பர்களுடன் அன்புடன் அழைக்கிறோம்.
ஒருவர் இரத்தம் கொடுப்பதனால் இன்னொருவர் அவருடைய இரத்தத்தின் மூலம் அல்லாஹ் நாடினால் குணமடைவார். அப்படி குணமடையும் போது அவரை வாழவைத்தவர் போன்றவராவார்.
ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்.  ( குர்ஆன் 5: 32 )
தொடர்புக்கு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) பஹ்ரைன் மண்டலம்.

38385740, 33776344, 39320142

Saturday, August 4, 2012

அவசர உதவி - இரத்த தானம்



அல்லாஹ்வின் கிருபையால்,  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டல சார்பாக கடந்த 01-08-2012 அன்று ஒரு சகோதரருக்கு அவசரமாக "O -ve" இரத்தம் தேவைப் பட்டதால் சல்மானியா மருத்துவமனையில், தவ்ஹீத் ஜமாஅத்தின் ரத்த தான சேவையை நன்கு அறிந்திருந்த அவர்கள் உடன் நமது பஹ்ரைன் மண்டலத்தை தொடர்பு கொண்டார்கள், உடன் துரிதமாக செயல்பட்ட தவ்ஹீத் ஜமாஅத்தின் பஹ்ரைன் மண்டல  நிர்வாகம் சல்மானியா மருத்துவமனையில், நமது ஜமாஅத்தின் மற்றும் செயல்பாடுகளின் மீது நல்லெண்ணம் கொண்ட சகோதரர்களை அனுப்பி சகோதரரின் சிகிச்சைக்கு தேவையான அளவு ரத்தம் வழங்கியது. அல்ஹம்துலில்லாஹ்!


மேலும் நமது ஜமாஅத்தின் செயல்பாட்டை கண்டு சல்மானியா மருத்துவமனை சகோதரர்கள் வாழ்த்தி, நமது செயல்பாடுகள் சிறப்பாக நடைபெற துஆ செய்தார்கள்.

எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

Sunday, February 26, 2012

அவசர உதவி - இரத்த தானம்


அல்லாஹ்வின் கிருபையால்,  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டல சார்பாக கடந்த (16-02-2012) அன்று ஒரு சகோதரருக்கு அவசரமாக "A+ve" இரத்தம் தேவைப் பட்டதால் சல்மானியா மருத்துவமனையில், தவ்ஹீத் ஜமாஅத்தின் ரத்த தான சேவையை நன்கு அறிந்திருந்த அவர்கள் உடன் நமது பஹ்ரைன் மண்டலத்தை தொடர்பு கொண்டார்கள், உடன் துரிதமாக செயல்பட்ட தவ்ஹீத் ஜமாஅத்தின் பஹ்ரைன் மண்டல  நிர்வாகம் சல்மானியா மருத்துவமனையில், நமது ஜமாஅத்தின் மற்றும் செயல்பாடுகளின் மீது நல்லெண்ணம் கொண்ட சகோதரர்களை அனுப்பி சகோதரரின் சிகிச்சைக்கு தேவையான அளவு ரத்தம் வழங்கியது. அல்ஹம்துலில்லாஹ்!


மேலும் நமது ஜமாஅத்தின் செயல்பாட்டை கண்டு சல்மானியா மருத்துவமனை சகோதரர்கள் வாழ்த்தி, நமது செயல்பாடுகள் சிறப்பாக நடைபெற துஆ செய்தார்கள்.


எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

Saturday, January 28, 2012

5வது மாபெரும் இரத்ததான முகாம்


அல்லாஹ்வின் கிருபையால்,  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டல சார்பாக (27-01-2012) நேற்று வெள்ளிக் கிழமை மதியம் 3 மணி முதல் 7.30 மணி வரை மாபெரும் இரத்ததான முகாம் பஹ்ரைன் சல்மானியா மருத்துவமனையில் மிகச்சிறப்புடன் நடைபெற்றது.

இதில் 97 சகோதர, சகோதரிகள் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்கள் இரத்தத்தை தானம் செய்து மனித நேயத்திற்குச் சான்று பகன்றார்கள்.இந்த நிகழ்ச்சியில் 15க்கும் மேற்பட்ட மாற்று மத நண்பர்கள் மற்றும் மொழி பேதமின்றி அதிகமான சகோதரர்களும் கலந்து கொண்டு மனித நேயத்தை பகர்ந்தனர்.


இந்த இரத்ததான நிகழ்ச்சியை பஹ்ரைன் மண்டல நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மிகவும் சிறப்பாக எற்ப்பாடு செய்திருந்தனர். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!


Monday, August 29, 2011

நள்ளிரவில் பஹ்ரைன் மண்டலத்தின் அவசர இரத்த தான உதவி


இரத்ததானம் செய்வதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தமிழகத்தில் மட்டுமல்லாமல் வளைகுடா பகுதிகளிளும் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொள்ளும் இரத்தான முகாம்கள் மூலமும் மற்றும் மக்களின் அவசர தேவைகளுக்காவும் இரத்ததை தானமாக வழங்கியும் இறைவனது கிருபையால் உயிர்காத்து வருகிறது. அல்ஹம்துலில்லாஹ்.


கடந்த 25-8-2011 அன்று, சகோதரி ஒருவருக்கு பிரசவம் காரணமாக ரத்த போக்கு ஏற்பட்டதால், நள்ளிரவு ரத்தில் சல்மானியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசரமாக  "B பாசிடிவ்" வகை  ரத்தம் தேவைப்பட, தவ்ஹீத் ஜமாஅத்தின் ரத்த தான சேவையை நன்கு அறிந்திருந்த அவர்கள் உடன் நமது பஹ்ரைன் மண்டலத்தை தொடர்பு கொண்டார்கள், உடன் துரிதமாக செயல்பட்ட தவ்ஹீத் ஜமாஅத்தின் பஹ்ரைன் மண்டல  நிர்வாகம் நள்ளிரவு என்று கூட பாராமல், சல்மானியா மருத்துவமனையில் தனது பஹ்ரைன் மண்டல நிர்வாகிகள் மற்றும் ஆதரவு சகோதரர்களை அனுப்பி சகோதரியின் சிகிச்சைக்கு தேவையான அளவு ரத்தம் (6 யூனிட்)  வழங்கியது. அல்ஹம்துலில்லாஹ்!


நள்ளிரவு என்றும் பாராமல் அவசர ரத்ததானம் செய்த நம் சகோதரர்களை பாராட்டி, சல்மானியா மருத்துவமனை நமது ஜமாத்திற்கு கடிதம் ஒன்றையும் வழங்கியது. அல்ஹம்துலில்லாஹ்!

....."எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்”...... 5:32. 













Tuesday, May 31, 2011

பஹ்ரைனில் நடந்த 4வது இரத்ததான முகாம்







அல்லாஹ்வின் கிருபையால் பஹ்ரைன் டி.என்.டி.ஜே சார்பில் 27-05-2011 வெள்ளிக் கிழமை காலை 7:30 மணி முதல் 11:30 மணி வரை மாபெரும் இரத்ததான முகாம் பஹ்ரைன் சல்மானியா மருத்துவமனையில் மிகச்சிறப்புடன் நடைபெற்றது, இதில் 80 க்கும் மேற்ப்பட்டவர்கள் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்கள் இரத்தத்தை தானம் செய்து மனித நேயத்திற்குச் சான்று பகன்றார்கள்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாற்றுமத நன்பர் ஒருவர் தமிழகதில் நடைபெரும் இரத்ததானங்களைஅனைத்து சமுதாய மக்களுக்கு மத்தியிலும் மேலும் அதிகமாக சென்றடையுமாறு வழிவகை செய்யவும் கேட்டுக்கொண்டார். மேலும் ஒரு பாகிஸ்தானைச் சேர்ந்த டிரைவர் டி.என்.டி.ஜே யினரின் செயல்பாட்டைக் கண்டு அவரும் ஆர்வத்துடன் இரத்ததானம் செய்தார்.

இந்த இரத்ததான நிகழ்ச்சியை பஹ்ரைன் டி.என்.டி.ஜே நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மிகவும் சிறப்பாக எற்ப்பாடு செய்திருந்தனர், அல்ஹம்துலில்லாஹ்
 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்