Showing posts with label சிறப்பு நிகழ்ச்சிகள். Show all posts
Showing posts with label சிறப்பு நிகழ்ச்சிகள். Show all posts

Saturday, January 26, 2013

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தின் விடுமுறை தினத்தை சிறந்த முறையில் கழிக்க நேற்று (25-01-2013) சிறப்பு "இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்" கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்த கேள்வி பதில் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அமீரகத்திலிருந்து வரவழைக்கப்பட்ட  சகோதரர். ஹமீன் இப்ராஹிம் அவர்கள் வந்திருந்த சகோதர சகோதரிகளின் கேள்விகளுக்கு குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் மிகத் தெளிவாக விளக்கினார்கள்.

நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளில் சில
  • பெண்கள் காது குத்தலாமா?
  • ஒருவர் அக்கா தங்கை என்ற இரண்டு பெண்களை திருமணம் செய்யலாமா? 
  • எஞ்சியதற்கு தான் ஜகாத் என்பதன் விளக்கம் என்ன?
  • திருக்குர்ஆனின் 36ஆவது அத்தியாயமான யாஸீனில் உள்ள 42ஆவது வசனத்தின் விளக்கம் என்ன?
  • யூதர்களின் வரலாறு மற்றும் அவர்களின் கடவுள் நம்பிக்கை என்ன? 
என்பன போன்ற பல கேள்விகளை கேட்டனர். இந்த அனைத்து கேள்விகளுக்கும் குர்ஆன் மற்றும் ஆதரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் அழகாக விளக்கமளித்தார்கள்.

இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!! 

மாற்று மதத்தினருக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி


அல்லாஹ்வின் கிருபையால், தற்போதுள்ள தமிழ் அமைப்புகளின் தாவா பணிகளில் தலை சிறந்து விளங்குவது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மட்டுமே என்பது அனைவரும் அறிந்ததே. அதன் ஒரு கிளையான பஹ்ரைன் மண்டலத்தில் "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (பிற மதத்தினருக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி)" என்ற நிகழ்ச்சி நேற்று (25-01-2013) ஏற்பாடு செய்யப்பட்டது.

இதின் ஆரம்பகட்டமாக நமது மண்டல தலைவரான சகோ. முபாரக் அவர்கள் வரவேற்புரை கூறி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இதுபோன்ற மாற்று மதத் தினருக்காக சிறப்பு நிகழ்ச்சிகளை தமிழமெங்கும் நடத்தி வருகிறது எனபதை வந்திருந்த மாற்று மத நண்பர்களுக்கு எடுத்துச் சொல்லி விளக்கினார்கள்.

அவரைத் தொடர்ந்து அமீரகத்திலிருந்து சிறப்பு விருந்தினராக வரவழைக்கப்பட்ட சகோ.ஹமீன் இப்ராஹிம் அவர்கள் "இஸ்லாம் ஓர் அறிமுகம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். 

இந்த இஸ்லாத்தை பற்றிய அறிமுக உரையானது, வந்திருந்த மாற்று மத நண்பர்கள் இஸ்லாத்தை புரிந்துக் கொள்ளக்கூடிய வகையில் மிக எளிதாகவும், அறிவுப்பூர்வமாகவும் இருந்தது. 

இதை தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சிகள் ஆரம்பமானது. தொடக்கத்திலியே சகோதரர்கள் மிகவும் ஆர்வமாகவும், ஆக்கப்பூர்வமான கேள்விகளை தொடுத்தனர். இதற்க்கு நமது சகோதரர் மிகவும் தெளிவாக விளக்கினார்கள். இன்றைய நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளில் சில உங்கள் பார்வைக்கு.
  1. மத மாற்றம் என்றால் என்ன?
  2. முஸ்லீம் பெண்கள் பர்தா அணிவது ஏன்?
  3. விஸ்வரூபம் படத்திற்கு முஸ்லீம்கள் ஏன் இவ்வளவு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்? 
  4. இலங்கயை சேர்ந்த ரிஸானா நஃபிக் என்ற பெண்ணிற்கு சவுதியில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது ஏன்?
இது போன்ற இன்னும் பல கேள்விகளை குழுமியிருந்த நண்பர்கள் கேட்டு விளக்கம் பெற்றனர். 
 
இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைத்து மாற்று மத அன்பர்களுக்கும் இஸ்லாத்தை தெரிந்து கொள்ளவதற்காக் இஸ்லாம் சம்பந்தமான விளக்க நூல் மற்றும் CDகள் இலவசமாக வழங்கப்பட்டன.
 
பிறகு மாற்று மத நண்பர்களுக்கு உணவு பரிமாறப்பட்டு சபை களைந்தது.

இந்த நிகழ்ச்சியில் மாற்று மத நண்பர்கள் மற்றும் நமது சகோதரர்கள் என பெரும் திரளாக வந்து கலந்து கொண்டனர். 

இந்த நிகழ்ச்சியை சிறப்பித்து தந்த அல்லாஹ்விற்க்கே எல்லாப் புகழும்!!!!

சிறப்பு எளிய மார்க்கம் - பெண்கள்

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தின் விடுமுறை தினத்தை சிறந்த முறையில் கழிக்க 24-01-2013 அன்று சிறப்பு பெண்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்த கேள்வி பதில் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அமீரகத்திலிருந்து வரவழைக்கப்பட்ட  சகோதரர். ஹமீன் இப்ராஹிம் அவர்கள் வந்திருந்த சகோதரிகளின் கேள்விகளுக்கு குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் மிகத் தெளிவாக விளக்கினார்கள்.

நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளில் சில
  • கணவன் மனைவிக்கு செய்யும் கடமைகள் என்ன?
  • தாவா யாரெல்லாம் செய்யலாம்? 
  • பெண்களில் பள்ளியில் தொழுவது சிறந்ததா? 
என்பன போன்ற பல கேள்விகளை கேட்டனர். இந்த அனைத்து கேள்விகளுக்கும் குர்ஆன் மற்றும் ஆதரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் அழகாக விளக்கமளித்தார்கள்.

இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!! 

நிர்வாக தர்பியா

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தின் விடுமுறை தினத்தை சிறந்த முறையில் கழிக்க 24-01-2013 அன்று நிர்வாகிகளுக்கான தர்பியா நமது மண்டல நிர்வாகிகளின் தலைமையில் சிறப்பாக அரங்கேறியது.

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அமீரகத்திலிருந்து சகோதரர். ஹாமீன் இப்ராஹிம் அவர்கள் வந்திருந்து, நிர்வாகிகளுக்கான தர்பியா நிகழ்ச்சியை நடத்தினார்கள்.

இதில் சகோதரர் அவர்கள் நிர்வாகிகள் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகளையும், மக்களுக்கு மத்தியில் பின்பற்ற வேண்டியவைகளையும் மிக சிறப்பாக விளக்கினார்கள்.

இதில் நமது மணடல மற்றும் கிளை நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ். 

Friday, March 16, 2012

உம்ரா வகுப்பு

அல்லாஹ்வின் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தாவா மற்றும் சமுதாய பணிகளில் சிறந்து விளங்குவதை அனைவரும் அறிந்ததே. அதே போல் அதன் கிளைகளாக செயல்பட்டு வரும் மண்டலங்களில் ஒன்றான பஹ்ரைன் மண்டலத்திலும் தாவா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு கட்டமாக, பஹ்ரைன் மண்டலத்தில் நமது தமிழ் பேசும் மக்கள் சிலர் அல்லாஹ் கூறியுள்ள உம்ரா என்ற வழிபாட்டை செய்ய திட்டமிட்டுள்ளனர். அந்த சகோதரர்களில் ஒருவர், நாம் வருடா வருடம் ஏற்பாடு செய்து சிறப்பாக நடந்த உம்ரா நிகழ்ச்சிகளில் கல்ந்து கொண்டிருக்கிறார். 

அவர் நம்மை அணுகி, "சில தமிழ் பேசக்கூடிய சகோதரர்கள் என்னோடு சேர்ந்து உம்ரா செல்ல இருக்கிறார்கள். அவர்களுக்கு நீங்கள் ஒரு உம்ரா சம்பந்தமான சட்ட திட்டங்கள் பற்றிய ஒரு வகுப்பு நடத்த முடியுமா?" என்று நம்மை அணுகினார்கள். 

அதற்கு நாம மறுக்காமல், தாரளாமாக செய்கிறோம் என்று ஒப்புக்கொண்டு இன்று (16-03-2012) அஸர் தொழுகைக்குப் பிறகு இந்த நிகழ்ச்சியை பஹ்ரைன் மண்டல தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

இதில் சகோ. அப்துல் ஹமீது அவர்கள் உம்ரா சம்பந்தமான சட்ட திட்டங்களை வந்திருந்த சகோதர சகோதரிகளுக்கு புரியக்கூடிய அளவில் மிக சிறப்பாக விளக்கினார்கள். மேலும் அவர்களது உம்ரா சம்பந்தமாக அவர்கள் கேட்ட சந்தேகங்களுக்கும் பதில் அளித்தார்கள்.

மேலும், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் உம்ரா சம்பந்தப்பட்ட விளக்கத்தை முன்பு ஆன்லைன் பிஜெ இணையதளத்திலிருந்து எடுத்து நமது பஹ்ரைன் மண்டல மக்களுக்கு உதவியாக இருக்கும் என்று மீள்பதிவு செய்த உம்ரா செய்யும் முறை புகைப்படங்களுடன் கூடியதை புத்தகமாக அடித்து அவர்களுக்கு கொடுக்கப்பட்டது. அதனுடன் மார்க்க சம்பந்தப்பட்ட சகோதரர் அல்தாஃபி ஆற்றிய உரை அடங்கிய ஏகத்துவ CD யும் அவர்களுக்கு வழங்கப்பட்டு நிகழ்ச்சி இனிதே நிறைவுபெற்றது. 

இதில் கலந்து அனைத்து சகோதர சகோதரிகளும் இந்த நிகழ்ச்சி சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் அமைந்திருந்து என்று கூறி விடை பெற்றனர்.

பஹ்ரைனில் அதிகமான தமிழ் பேசக்கூடிய ஜமாஅத்கள் இருந்தும் இவர்கள் நம்மை மட்டும் அணுகியது ஏகத்துவத்திற்க்கு தேம்புட்டும் வகையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Monday, January 2, 2012

பஹ்ரைன் மண்டல பொதுக்குழு

அல்லாஹ்வின் உதவியால், நேற்று (01-01-2012) மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு பஹ்ரைன் மண்டல தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கான பொதுக்குழு கூட்டப்பட்டது. இதன் முக்கிய நோக்கம், நமது ஜமாஅத்திற்காக தலைமையில் சொந்த கட்டிடம் வாங்குவதற்காக நம்மாள் எந்த அளவில் பொருளாதார உதவி செய்ய முடியும் என்பதற்காகவே.
இதன் ஆரம்ப கட்டமாக, தாயத்திலிருந்து சகோ. பி. ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள் தொலைபேசி மூலமாக நமக்கு தற்போது ஏன் சொந்த கட்டிடம் தேவை? அதன் முக்கியத்துவம் என்ன? என்பதை பற்றியெல்லாம் அவருக்கே உரித்தான பாணியில் எளிய முறையில் நமது சகோதரர்களுக்கு விளக்கினார்கள். சகோதரர் ஆற்றிய உரையை தொடர்ந்து அதற்கு மேலும் தெம்பூட்டும் வகையில் அவரை தொடர்ந்து நமது மண்டல தலைவர் சகோ. முபாரக் அவர்கள் ஆற்றிய உரை அமைந்தது. இவர் தமது உரையின் ஆரம்பமாத்திரத்திலேயே நமது ஜமாஅத்தின் கொள்கை என்ன? இந்த கொள்கை எப்படி பட்ட கொள்கை? அல்லாஹ்வும் அவனது துதரும் காட்டித் தந்த அடிப்படையில் தான் உள்ளதா? என்பதை ஆணித்தரமாக எடுத்துரைத்தார். மேலும், இந்த கொள்கையை 1980களில் சொல்ல ஆரம்பித்து இன்று எப்படிபட்ட தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதையும் எடுத்து விளக்கினார். அதனை தொடர்ந்து நமது ஜமாஅத் எப்படிபட்ட வேலைகளை எல்லாம் செய்து வருகிறது. இன்றைய காலகட்டத்தில் குர்ஆன், ஹதீஸை சொல்கிறோம் என்று சொல்கின்றவர்களுக்கு மத்தியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் எப்படிபட்ட சமுதாய பணிகளை செய்து வருகிறது, மேலும் நமக்கு என்று தனியாக சொந்த கட்டிடம் இருப்பதால் ஏற்படக்கூடிய பயங்கள் என்ன என்பதையெல்லாம் பட்டியலிட்டு காட்டினார்கள். இதை கேட்ட உடனேயே நமது நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் விரைந்து வந்து தங்களால் முடிந்த அளவுக்கு பொருளாதர உதவிகளை செய்கிறோம் என்றும், ஒவ்வோருவரும் தங்களால் எவ்வளவு உதவி செய்ய முடியும் என்றும் துண்டுச் சீட்டில் எழுதி பொருளாளர் அவர்களிடம் கொடுத்தனர். குழுமியிருந்த அனைத்து சகோதரர்களும் அல்லாஹ்விற்காக அழகிய கடன் வழங்கிய திருப்தியில் அனைவரும் கலைந்து சென்றனர்.
அல்லாஹ்வுக்கு யாரேனும் அழகிய கடன் வழங்கினால் அதை அவருக்கு அவன் பன்மடங்காக வழங்குவான். அவருக்கு மகத்தான் கூலியும் உண்டு. (அல் குர் ஆன் 57 - 11)

Monday, December 19, 2011

நவீன உலகில் இஸ்லாம் - ஓர் கலந்தாய்வு

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல விடுமுறை தினத்தை பயனுள்ள வழியில் கழிக்க அமீரகத்திலிருந்து சகோ. ஹாமீன் இப்ராஹிம் அவர்கள் வந்திருந்தது அனைவரும் அறிந்ததே.


இந்த நிகழ்ச்சியானது பஹ்ரைன் மண்டல நிர்வாகிகளின் யோசனைப்படி "நவீன உலகில் இஸ்லாம்" என்ற தலைப்பில் ஒரு கலந்தாய்வு நிகழ்ச்சி 17-12-2011 அன்று மதியம் 3 மணியளவில் ஆரம்பமானது.


இதில் நமது சகோதரர்கள் இரு தரப்பாக அமர்ந்து இஸ்லாம் ஹராமாக்கிய வட்டி, வரதட்சனை ஆகிய தலைப்புகளிலும், இன்றைய கால கட்டத்தில் குழந்தைகளை எப்படி இஸ்லாமிய முறைப்படி வளர்ப்பது மற்றும் இன்றைய உலகில் ஆடம்பர வாழ்க்கைகாக மக்கள் எப்படியெல்லாம் இஸ்லாத்திலிருந்து விலகி நடக்கிறார்கள் என்ற 4 தலைப்புகளில் கலந்தாய்வு நிகழ்ச்சி நிகழ்த்தப்பட்டது.


இதில் அமர்ந்திருந்த இரு தரப்பு சகோதரர்களும் தத்தமது கருத்துக்களை மிகத் தெளிவாக, நகைச்சுவை கலந்து, எளிய முறையில் பதித்தனர். இந்த நிகழ்ச்சியை அமீரகத்திலிருந்து சிறப்பு விருந்தினராக வந்துள்ள சகோ. ஹாமீன் இப்ராஹிம் அவர்கள் தலைமை தாங்கி நிகழ்ச்சியை மேலும் சிறப்புற செய்தார்கள்.


இரு தரப்பு சகோதரர்களும் அவர்கள் பதிந்த கருத்துக்களின் அடிப்படையில், இஸ்லாம் எப்படியெல்லாம் இந்த நவீன உலகில் அணுக வேண்டும் என்று ஆயிரத்தி நானுறு ஆண்டுகளுக்கு முன்பே ஏக இறைவன் தனது திருமறையிலும், உம்மி நபி (ஸல்) அவர்கள் வழியாலும் சொல்லிய எச்சரிக்கின்ற வாசகங்களை எடுத்துக் காட்டி தமது விளக்கத்தை கூறி முடித்தார்.


இதன் பிறகு கலந்து கொண்ட சகோதர்களின் கருத்து கேட்ட போது, இந்த கலந்தாய்வு நிகழ்ச்சியானது மிகவும் சிறந்ததோரு நிகழ்ச்சியாகவும், இந்த காலகட்டத்தில் எப்படியெல்லாம் மக்கள் சாக்கு போக்கு கூறி இஸ்லாத்தின் சட்ட திட்டங்களை புறந் தள்ளுகின்றனர் என்று மிக அழகாக எடுத்துக் காட்டப்பட்டது என்று கூறி சகோதரர் அவர்கள் தமது கருத்தை பதிந்தார்கள்.


இந்த நிகழ்ச்சியை நமது மண்டல நிர்வாகிகள் மிக சிறப்பாக ஏற்பாடு செய்தார்கள்.


இந்த நிகழ்ச்சியில் நமது சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!
 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்