Friday, June 3, 2011

வாரந்திர பயான் (03-06-2011)


அஸ்ஸலாமு அலைக்கும்...


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தின் வாராந்திர பயான் இன்று வெள்ளிக்கிழமை மக்ரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது. இதில் சகோ.அப்துல் ஹமீது அவர்கள் இறைவனை நினைவு கூர்தல் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்.


"நம்பிக்கை கொண்டோரெ! உங்களின் பொருட்செல்வமும், மக்கட்செல்வமும் அல்லாஹ்வின் நினைவைவிட்டு உங்களை திசை திருப்பி விட வேண்டாம். இதைச்செய்வோரே நஷ்டமடைந்தவர்கள். உங்களுக்கு மரணம் வருவதற்கு முன் நாம் உங்களுக்கு வழங்கியதிலிருந்து செலவிடுங்கள்! "இறைவா! குறைந்த காலம் வரை நீ எனக்கு அவகாசம் அளித்திருக்கக் கூடாதா? தர்மம் செய்து நல்லவனாக ஆகியிருப்பேனே" என்று அப்போது மனிதன் கூறுவான். (அல் முனாஃபிகூன் - 9,10)


என்கிற மேற்கூறிய வசங்களை மேற்கோள் காட்டி உரை நிகழ்த்தினார்கள். இதில் தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டார்கள்.


இன்ஷாஅல்லாஹ் வாரந்தோரும் நடக்கின்ற பயான் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


பெண்களுக்கு தனி இட வசதியுண்டு மற்றும் வாகன ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. தொடர்புக்கு - சகோ. ஜாகிர் - +973-39320142

0 comments:

Post a Comment

 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்