அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல மாதாந்திர ஆன்லைன் நிகழ்ச்சி நேற்று 04-05-2012 அன்று மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நமது மண்டல நிர்வாகிகளின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.
இன்றைய நிகழ்ச்சியில் தாயகத்திலிருந்து சகோதரர். E. பாரூக் அவர்கள் "வேதனைகளும் ஓர் அருட்கொடையே!!!" என்ற தலைப்பில் ஆன்லைன் மூலம் புரேக்ஜடர் உதவி கொண்டு உரை நிகழ்த்தினார்கள்.
இதில் சகோதரர் அவர்கள் நமக்கு அல்லாஹ் புரிந்துள்ள அருட்கொடைகளில் வேதனைகளை உணரக்கூடியதும் ஓர் மிகப்பெரிய அருட்கொடை என்பதை பற்றி மிக அழகாக உலக நடைமுறை வாழ்வில் நாம் சந்தேகிக்கும் விஷயங்களை சுட்டிக்காட்டி எளிய முறையில் குர்ஆன் ஹதிஸ் ஒளியில் விளக்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் பெரும் திரளாக கலந்து கொண்டு பயனடைந்தார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!
0 comments:
Post a Comment