Tuesday, November 8, 2011

சிறப்பு நிகழ்ச்சி (பெண்களுக்காக)

அல்லாஹ்வின் கிருபையால், பெண்களுக்காக பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி இன்று (07-11-2011) மக்ரீப் தொழுகைக்குப் பிறகு ஆரம்பமானது.

இந்த நிகழ்ச்சியில் தாயகத்திலிருந்த்து வருகை புரிந்துள்ள மேலாண்மை குழு உறுப்பினரான சகோ. M. S. சுலைமான் அவர்கள் "பெண்களின் சமுதாய கடமை" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இதில் அல்லாஹ் தனது குர்ஆனில் மற்றும் நபி (ஸல்) அவர்கள் கூறிய ஆதரப்பூர்வமான ஹதீஸ்களை எடுத்துக் காட்டி பெண்கள் சமுதாயக் கடமையாக என்ன உள்ளது என்பதை அறிவுப்பூர்வமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் குறிப்பிட்டுக்காட்டினார்கள்.

இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து, கேள்வி பதில் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. அதில் கேட்கப்பட்ட கேள்விகளாவன.

  1. சுன்னத் ஜமாஅத்திற்க்கும், தவ்ஹீத் ஜாமஅத்-திற்க்கும் இடையேயுள்ள வேறுபாடுகள்
  2. தவ்ஹீத் ஜமாஅத் ஏன் அரபு அரசாங்கத்திடமிருந்து பண உதவி பெருவதில்லை?
  3. பணிக்கு செல்ல சொல்லி வர்புருத்தும் மனைவிகளை, கண்வன்மார்களை பற்றி இஸ்லாம் கூறும் விளக்கம்

மற்றும் பல கேள்விகளை கூடியிருந்த சகோதரிகள் கேட்டு விளக்கம் பெற்றனர்.

இதன் பிறகு ஒரு சிறிய உணவு பரிமாற்றத்துடன் நிகழ்ச்சி சிறப்பாக நிறைவுபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நமது ஏராளாமான சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.

எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

0 comments:

Post a Comment

 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்