அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல வாராநிர நிகழ்ச்சி 03-02-2012 அன்று மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நமது மண்டல நிர்வாகிகளின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.
இன்றைய நிகழ்ச்சியில் தாயகத்திலிருந்து மெளலவி. அப்துந் நாஸிர் அவர்கள் "இஸ்லாமியர்களின் சமுதாய கடமைகள்" என்ற தலைப்பில் ஆன்லைன் மூலம் புரேக்ஜடர் உதவி கொண்டு உரை நிகழ்த்தினார்கள்.
இதில் சகோதரர் அவர்கள் தொழுகை மற்றும் இன்ன பிற வழிபாடுகளை மட்டும் செய்வது வணக்க முறைகள் அல்ல. சமுதாயத்திற்காக் குரல் கொடுப்பதற்க்கும் இறைவனிடத்தில் குலி உண்டு என்பதை விளக்கி சமுதாய பணிகளிலும் நாம் அதிகம் அதிகம் ஆர்வம் காட்ட வேண்டும் என்று கூறினார்கள்.
மேலும் வரும் பிப்ரவரி 14ஆம் தேதி தமிழ் மாநிலத்தில் ஒவ்வொரு மாவட்ட வாரியாக நடத்த இருக்கக் கூடிய முஸ்லீம்களின் வாழ்வுரிமை போராட்டத்தை பற்றி எடுத்துரைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் பெரும் திரளாக கலந்து கொண்டு பயனடைந்தார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!
0 comments:
Post a Comment