Wednesday, October 31, 2012

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் - ஹித் கிளை

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தின் தியாகத் திருநாளின் விடுமுறை தினத்தில் ஹித் கிளையில் முஸ்லீம்களுக்கான சிறப்பு கேள்வி பதில் நிகழ்ச்சி 28-10-2012 அன்று ஏற்பாடு செய்யப்பட்டது.  

இந்த நிகழ்ச்சியில் தாய்கத்திலிருந்து வருகை புரிந்துள்ள சகோ. கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் நமது சகோதர சகோதரிகளின் கேள்விகளுக்கு பதிலளித்தார்கள். நிகழ்ச்சியில் கேட்க்கப்பட்ட கேள்விகளில் சில. 
  1. அத்தஹியாத்தில் விரல் அசைப்பதற்கு ஆதாரம் உண்டா?
  2. ஜனாஸாவிற்கு தொழுகை நடத்த உரிமை படைத்தவர் யார்?
  3. காலுறையில் மஸிஹ் செய்யும் சட்டம் பற்றிய விளக்கம்
  4. பால் குடி சட்டம் பற்றி சவூதி அரசாங்கம் கொடுத்த ஃபத்வா பற்றிய விளக்கம்
  5. தற்கொலை செய்து கொண்டவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தலாமா? 
மேலும் பல கேள்விகளை சகோதர, சகோதரிகள் கேட்டனர். கேட்கப்பட்ட கேள்விகளுக்கெல்லாம் அறிவுப்பூர்வமாகவும், ஆதரப்பூர்வமாகவும், மக்கள் புரிந்துக் கொள்ளக்கூடிய வகையில் எளிய நடையில் விளக்கினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் சகோதரர்கள் தங்கள் குடும்பத்துடன் பெரும் திரளாக கலந்து கொண்டார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

0 comments:

Post a Comment

 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்