அல்லாஹ்வின் கிருபையால் கடந்த நோன்புப் பெருநாள் அன்று, பஹ்ரைன் அராத்தில் உள்ள கேம்பில் இந்தியாவிலிருந்து வந்த சில மாதங்களே ஆன தமிழகத்தச் சார்ந்த நமது சகோதரர்கள் தாங்கள் அடையும் இன்னல்களை பகிர்ந்து கொள்ள யாரும் இல்லையே என்றிருந்த நிலையில், நமது பஹ்ரைன் மண்டல நிர்வாகிகளின் தொடர்பு கிடைத்ததும், நாமது நிர்வாகிகள் அவர்களைச் சந்திதிது நலம் விசாரித்து, சில மார்கக விசயங்களையும் எடுத்துக் கூறினர்.
நமது ஜமாஅத்தின் பத்திரிக்கைகளான உணர்வு, ஏகத்துவம், தீன் குலப்பெண்மனி, மற்றும் பாயான் சி.டி.க்களை பார்க்க படிக்க வேண்டும் என்ற அவர்களின் தேற்றத்தை அறிந்த நமது நிர்வாகிகள் அதற்கான ஏற்பாடுகளையும் செய்து தந்தனர். இந்த நிலையிலும் அவர்களின் சமுதாய சிந்தனைகள் நமது நிர்வாகிகளின் மனம் நெகிழச் செய்தது.
அவர்களுக்கு சற்று ஆறுதலளிக்கும் விதமாக நமது பஹ்ரைன் டிஎன்டிஜே மர்கஸில் வைத்து அடுத்த தினம் 31-08-2011 அன்று விருந்து உபசரிப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. அலஹம்துலில்லா
0 comments:
Post a Comment