அஸ்ஸலாமு அலைக்கும்,
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தின் சார்பாக 16-09-2011 வெள்ளிக் கிழமை மாலை 6:15 முதல் இரவு 9மணி வரை சிறப்பு பயான் நிகழ்ச்சி நடைப் பெற்றது, இதில் தாயகத்திலிருந்து வருகை தந்துள்ள சகோதரர் எஸ். முஹம்மது ஒலி எம்.ஐ.எஸ்.ஸி அவர்கள் "நரகத்திற்கு அலைக்கும் நவீன கலாச்சாரம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், இந்த உரையில் சமுதாயத்தில் நடைபெரும் கலாச்சார சீரழிவிற்கு அடிப்படைக் காரணங்களாக எவ்வாறு இன்றைய நமது அனுகுமுறை காரணமாகிறது என்று உண்மை சம்பவங்களுடன் உணர்ச்ரிப்பூர்வமாகவும் அறிவுப்பூர்வமாகமும் தெளிவாக விளக்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர், உரைக்குப் பின்னர் கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இன்னும் சனி முதல் புதன் முடிய ஆண்களுக்கு அரபி இலக்கண வகுப்புகளும், பெண்களுக்கு குர்ஆன் தஃப்ஸீர் வகுப்புகளும், ஆண், பெண் இருவருக்கும் தனியே பேச்சுப்பயிற்ச்சி வகுப்புகளும் வாரம் இருமுறை நடைபெறுகிறது.
0 comments:
Post a Comment