ஏக இறைவனின் கிருபையால், எப்படா விடுமுறை வரும் உடனே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் சார்பில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படும் என்று கேட்கும் அளவிற்க்கு, இந்த முறை விடுமுறை தினத்தையும் பயனுள்ள வகையில் கழிக்க அமீரகத்திலிருந்து சகோ. ஹாமீன் இப்ராஹிம் அவர்கள் வந்திருப்பது அனைவரும் அறிந்த ஒன்று.
இன்றைய (17-12-2011) நிகழ்ச்சி காலை 10 மணியளவில் ஆரம்பமானது. இதில் அமீரக ஒருங்கிணைப்பாளரான சகோ. ஹாமீன் இப்ராஹிம் அவர்கள் ''குருதி உறவா? கொள்கை உறவா?" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
இவர் தனது உரையில், நாம் அன்றாட வாழ்வில் குருதி உறவிற்கே நாம முக்கியத்துவம் அளித்து கொள்கை உறவுக்கோ அல்லது மறுமையின் பயனுக்கோ முக்கியத்துவம் அளிப்பதில்லை என்றும் மேலும் நாம எந்த அளவுக்கு குருதி உறவிற்க்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று அல்லாஹ் தனது திருமறையில் கூறியுள்ளான் மற்றும் நபி (ஸல்) அவர்களது வாழ்க்கை எந்த விதத்தில் அமைந்திருந்தது என்பதை பற்றியும் மிகத் தெளிவாக விளக்கினார்கள்.
இதை தொடர்ந்து "இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்" முஸ்லீம்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி ஆரம்பமானது. இந்த நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளான.
ஆண்கள் தரப்பிலிருந்து:
- திருமணத்தில் இடவசதி பற்றாக்குறையால் மண்டபம் பிடித்து திருமணம் நடத்தலாமா?
- கஸ்ர் தொழுகை எத்தனை நாட்கள் தொழலாம்?
- கஸ்ர் தொழுகை இந்த கால கட்டத்தில் கூடுமா?
- அசையா சொத்துகளுக்கு தற்போதைய விலைப்படி ஜகாத் கொடுக்க வேண்டுமா?
- திருமணம் பற்றிய TNTJ வின் நிலைபாடு என்ன?
- தேன், கொசு போன்ற ஜந்துகளுக்கு ஊறு விளைவிப்பதைப் பற்றி இஸ்லாம் கூறுவது என்ன?
- குளிப்பு கடைமையான பின் குளிக்காமல் உறங்கி மரணித்து விட்டால் என்ன நிலைமை?
- இஸ்ரேல் தயாரித்த பொருட்களை நாம் உபயோகிக்கலாமா?
- பலவீனமான ஹதீஸ்களை நாம் எப்படி அறிந்து கொள்வது?
இது போன்ற இன்னும் பல கேள்விகளுக்கு சகோதரர் அவர்கள் அறிவுப்பூர்வமாகவும், ஆதரப்பூர்வமாகவும், மக்கள் புரிந்துக் கொள்ளக்கூடிய வகையில் எளிய நடையில் விளக்கி சபையை முடிவுக்கு கொண்டு வந்தார்கள்.
இதனை தொடர்ந்து லுஹர் தொழுகையை ஜமாஅத்-ஆக தொழுது, மதிய உணவு பரிமாற்றத்துடன் நிகழ்ச்சி இனிதே முடிவு பெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சகோதர, சகோதரிகள் அனைவரும் பெரும் திரளாக கலந்து கொண்டார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!
0 comments:
Post a Comment