அல்லாஹ்வின் கிருபையால் இறைவேதமான திருக்குர்ஆன் இறங்கிய மாதமான புனித மிக்க ரமளான் மாதத்தின் இரண்டாவது வாரத்தை அடைந்துள்ளோம். இதில் முதல் வாரத்தை போன்றே பல மார்க்க நிகழ்ச்சிகளை பஹ்ரைன் மண்டல தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஏற்பாடு செய்துள்ளது.
இந்த புனித மிக்க ரமளான் மாதத்தில் தினமும் இஃப்தார் நிகழ்ச்சியும் அதை தொடர்ந்து சிறப்பு மார்க்க சொற்பொழிவுகளும் நடைபெற்று வருகிறது.
இந்த ரமளான் மாத இரண்டாம் வாரத்தில் வெற்றி பெறும் மூஃமீன்கள் என்ற தொடர் உரை நமது பஹ்ரைன் மண்டல தலமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒரு முஃமீன் வெற்றி பெற வேண்டுமெனில், எப்படிபட்டவனாக இருக்கவேண்டும் என்பதையும், மார்க்க கடமைகளை எப்படி செய்ய வேண்டும் என்பதையும் அல்லாஹ் தனது திருமறையிலும் நபிகள் நாயகத்தின் வாழ்க்கையின் அடிப்படையிலும், தொடர் நிகழ்ச்சியாக நடைபெற்றது.
இந்த தொடர் நிகழ்ச்சியில் சகோதரர் மனாஸ் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
இந்த அனைத்து நிகழ்ச்சிகள் அனைத்திலும் பஹ்ரைன் வாழ் தமிழ் மக்களை தூய்மையான மார்க்கத்தின் பால் அழைக்கிறது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன்.
0 comments:
Post a Comment